-றியாஸ் முஹமட்
ஆல மரம் ஒன்று
சாய்ந்து கிடக்கிறது
அது ஆண்ட அரண்மனை
வெறிச்சோடிக் கிடக்கிறது! 
சொந்த பந்தம் எல்லாம்
கூடி நிற்கிறது
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச்
சேர்ந்து நிற்கிறது!
பாடாய்ப்படுத்திய
உள்ளமெல்லாம் பரிதவிக்கிறது
பார் போற்ற வாழ்ந்தார் என்று
‘சும்மா’ பறைசாற்றுகிறது!
மரணித்த ஆத்மாவும் அழுகிறது
அதைச் செவியேற்ற
மரண வீடும் அதிர்கிறது!
நன்றி உள்ள
அந்த அரண்மனை நாயோ வாலாட்டுகிறது
அங்கே பாடை ஏற்ற வந்த உறவுகளோ பெருமூச்சு விடுகிறது!
இனி அடுத்த நிகழ்வு
என்னவாகப் போகிறது…?
சொத்துப் பங்கீட்டுக்காக
முட்டி மோதப்போகிறது!

Leave a Reply