கிரேசி மோகன்

 

பாலாதிரிபுரசுந்தரி

keshav

பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை,
காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள்
அதியற் புதமான ஆன்ம உலகில்:
துதியவளை சாக்லேட்டைத் தந்து ….

அமளி இலாத அமைதி லயத்தில்,
ரமண மயமாய் ரமிப்பு, -நெமிலிவாழ்,
பாண்டுரங்கன் சோதரி, பாலா திரிபுரையை
வேண்டி யுறங்க வரம் ….

காளி அரக்கர்க்கு, கற்பகம் பக்தர்க்கு,
யாளி அமரும் எஜமானி, -தோளிரெண்டில்,
வேலா யுதன்அண்ணன் வேழனைச் சுமந்திடும்,
பாலா நவராத்ரிப் பெண் ….

வெள்ளை அரவிந்தம் வீற்று நெமிலியில்
கொள்ளை அழகாய் கொலுவிருக்கும், -பிள்ளையவள்,
பாலா திரிபுரையைப் போற்றிப் பணிவோர்க்கு
நாளாம் நவராத்ரி நாள் ….

சுப்ரமண்ய அய்யரின் சொப்பனத்தில் வந்(து)ஆற்றில்,
தெப்பமாய் நீந்திக்கண் தென்படுவேன், -அப்புறம்,
ஆலயம் வேண்டாம், அகத்தில் குடிவைப்பீர்,
வாலைபா லாஅருள் வாக்கு ….

மூலாதா ரத்தினில் மூளும் கனலவள்,
கோலா கலகோ குலன்தங்கை, -பாலா
திரிபுரையைக் காண திருநெமிலி செல்வோம்
ஹரிசோ தரியே அரண் .

சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய்
கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த,
நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி
பாலாம் பிகையவள் பேர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.