கார்வண்ணன் கற்றுத் தந்த பாடம்….
பாடம் முடிய பரிட்சைவரும் பள்ளியில்,
காடலைந்து மேய்த்திடும் கோபால -மாடனோ,
சோதித்துப் பார்த்தபின் செய்குற் றமுணர்த்தி
போதிப்பான் கீதை பிறகு ….கிரேசி மோகன்….
ஆன்ம பலமளிப்பீர், ஆதி பகவரே,
வான்மழை எங்களை வாட்டுது, -தேன்குழல்
மாதுசக்தி பாகரே, போதும் மழைவெள்ளம்,
சீதோஷ்ணம் வெய்யிலாய்ச் செய் ….கிரேசி மோகன்….