காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

0

 அண்மையில் தமிழகத்தில் பெய்த அடைமழை ஏற்படுத்திய சேதங்களுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் தெலுங்குப் பாடகர்கள் இணைந்து பாடி வெளியிட்டுள்ள அருமையான வரிகளைக் கொண்ட உதவி கோரும் பாடல் இது.

தமிழில் – ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன்

பகிர்வு: – எம்.ரிஷான் ஷெரீப்

***

இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர்த் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?

நீர் மேலிருந்து கீழ்வரை விழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?

உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?

இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?

அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
உயிர்களின் மதிப்பு உங்களுக்குத் தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?

ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?

இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்குக் கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
அவர்களுக்குச் சுவாசம் தாருங்கள்.
கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.

கண்களில் கடல்போன்ற நீருடன் நகரத் தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?

நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவிகோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா?

குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.

இருளே கவிந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.

மனிதன் மனிதனுக்கு உதவி.
மனிதன் மனிதனுக்குத் தைரியம்.
மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?

நான் அன்று! நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றிணைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்லன், அவன் தெய்வம்!

சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்குச் சேர்ந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.

அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தைத் தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கிப் பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?

மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா?

காணொளி இங்கே
https://www.youtube.com/watch?v=VJc1cuq-lfY

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.