-சி. ஜெயபாரதன், கனடா
இப்புவி மானிட வளர்ச்சிக்கு
எழுபவை
முப்பெரும் பசிகள்! 
தருணம் தப்பாது
தொப்பை நிரம்பத் தூண்டும்
வயிற்றுப் பசி!
உண்டி கொடுத்தோர் மானிடர்க்கு
உயிர் அளிப்போர்.
உடல் நலம், ஒளிமுகம் பெற
பாலுறவு நாடும்
உடற்பசி!
மேலிரு பசிகள் தணிந்தபின்
மூளை நாடும்
ஞானம், வேதம், கீதை
ஆன்மப் பசி!
இப்புவியில்
முப்பசி யின்றேல் மானிடம்
குப்பை!

Leave a Reply