ஏ.வி.சி. கல்லூரியில் வைரவிழா பாட்டுமன்றம்

0

1f7ae4c7-d36e-4c1e-a8d9-d64c478fb42d

          அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக்கல்லூரியின் வைரவிழா நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழாய்வுத்துறையின் சார்பில் கல்லூரி வேலாயுதம் அரங்கில் மாபெரும் பாட்டுமன்றம் 19.02.2016 பிற்பகல் 2.00 மணிக்குத்தொடங்கியது.

       நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சு.அசோகன் தலைமை வகித்தார். இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் பயன்படுவது ‘பழைய திரைப்பாடலே` `புதிய திரைப்பாடலே`, `நாட்டுப்புறப்பாடலே` என்னும் பொருளில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதற்கு , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி `நகைச்சுவை நாவலர்` முனைவர் இரா.நவஜோதி நடுவராக இருந்து நிகழ்த்தினார். விஜய் தொலைக்காட்சி `கலக்கப்போவது யாரு` புகழ் சிவகாசி சசிகலா `பழைய பாடலே` என்னும் அணியிலும், கலைஞர் தொலைக்காட்சி புகழ் கவிஞர் தணிகை வேலன் `புதிய பாடலே` என்னும் அணியிலும், வசந்த் தொலைக்காட்சி புகழ் கவிதா `நாட்டுப்புறப்பாடலே` என்னும் அணியிலும் பாடல்கள் வாயிலாக தங்களுடைய வாதத்தை எடுத்துரைத்தனர். நிறைவாக நடுவர் இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் துணையாக இருப்பது நாட்டுப்புறப்பாடலே என்று தீர்ப்பளித்தார்.

       முன்னதாக வருகை தந்திருந்த அனைவரையும் தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் மாநிலத்தலைவரும் கல்லூரித்தமிழாய்வுத்துறையின் தலைவருமான முனைவர் துரை.குணசேகரன் வரவேற்றார்.

       தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் செல்வ.கனிமொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முனைவர் து.சந்தானலெட்சுமி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் எஸ்.இராமசாமி, பேரா.ஆறுமுகம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் செந்தில் நாயகம், பொறியியல் கல்லூரி முதல்வர், தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர், இயக்குநர், பேராசிரியர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நகரப்பிரமுகர்கள், மாணவச்செல்வங்கள் என்று திரளாகக்கலந்து கொண்டனர்.

       நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு உள்ளிட்ட இருபத்தெட்டு பேராசிரியர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

                                                                                                                                                (முனைவர் துரை.குணசேகரன்)

                                                               தமிழாய்வுத்துறைத்தலைவர்

                                                                         நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.