கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சோதரர்க்குள் பேதமற தூதுசென்ற யாதவனை
சோதனையால் வேதனைநம் மீதணையும் -போதினிலே
கீதையை மூதுரைத்த மாமதுரை மாதவனை
ஆதிமது சூதனென்று ஓது”….
”சுதாமர் அவலுக்கு சொத்தை அளித்த
உதாரகுணக் கண்ணன் உனக்கு -பிதாவாம்,
அலர்மேல் அன்னை அகமுடையான் அன்பால்,
மலரும்நாள் காசின் பிறப்பு’’….கிரேசி மோகன்….
சுதாமர் -குசேலர்….

