பவள சங்கரி

13265875_1041261599295798_1419961015002010470_n

“செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை – வ.உ.சி அவர்கள் பிறந்த புனித நாள் இன்று. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பின்னர் வந்த முகலாய மன்னர்கள் போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் பிரபலமாக இருந்த கப்பல் போக்குவரத்து மற்றும் பிரம்மாண்டமான கப்பல்கள் என அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி நம் இந்திய நாட்டில் நுழைந்து முன்னூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டன. ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து கோலோச்ச ஆரம்பித்துவிட்டது. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, கப்பலோட்டிய வரலாற்றில் பெரும் பங்காற்றியர் வ.உ.சி, அவர்கள். தம் சொத்துகள் அத்தனையும் விற்று சுதேசி கப்பலை உருவாக்கி அதன் மூலம் ஆங்கிலேயரின் வணிகத்தை முடக்க நினைத்த அவர்தம் போராட்டமும் விடா முயற்சியும் குறிப்பிடத்தக்கது. நம் கப்பல்களை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகளும் பரிந்துரைத்தார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியடையாமல் போனது நம் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டி அதன் பொருட்டும் பெரிதும் போராடியவர் வ.உ.சி.

“அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்
சுற்றினேன். என்கைத் தோல் உரிந்து ரத்தம்
கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்
பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன். அவனுடைய அன்புதான் என்னே!”
வ.உ.சி. அவர்களின் கண்ணீர்த்துளிகள்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.