கிரேசி மோகன்

————————————————————

images-2

மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி
வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான்
அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான்
விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37)

ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை
ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை
வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம்
இணங்கிய யானை அணைப்பு….(38)

அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக
பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா
விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை
விளக்குமாறு வெண்பாவில் வா….(39)

சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று)
இட்டனை அவ்வைக்(கு) இடையூறு -கொட்டினை
நாவல் பழத்தை நமுட்டு விஷமமாய்
சேவல் கொடியோய் சிரித்து….(40)

வீசும்வெண் சாமரம் பேசும் தமிழுனக்கு
ஆசு கவியாகி ஆறுதிவ்ய -தேசமும்
கூடி அருண கிரியாகி சந்தத்தில்
பாடிக் களிக்கலாம் போது….(41)

வயதுமிக சேர்ந்தும், வயோதிகம் நேர்ந்தும்
தயவை எதிர்பார்த்து தாழ்ந்தும் -அயர்வில்
கரணங்கள் ஓய்ந்தும் கலங்காது கந்தன்
சரணங்கள் பற்ற செழிப்பு….(42)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *