ரியாத் தமிழ்ச்சங்கம் – கவிதைப் போட்டி ஓர் அறிவிப்பு

0

ரியாத் தமிழ்ச் சங்கம்

***முக்கிய அறிவிப்பு***

ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்திருந்த, கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியின் கால அளவு நாளையுடன் முடிவடைய உள்ள சூழலில், குறிப்பிட்ட அந்த மடல் முகவரி கெடுமதியோரால் (Hacking) கடத்தப்பட்டுள்ளதை, தற்போது அறிய வந்ததை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

மீட்டெடுக்க முயன்றும் இயலா நிலை. எனினும் விரைந்து செயற்பட்டு புதிய மின்னஞ்சலை உருவாக்கியுள்ளோம்.

rtskp2016@gmail.com

இக்கட்டான இச்சூழலில் எங்களின் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படியும், மீண்டும் ஒருமுறை (ஏற்கனவே அனுப்பியிருந்தாலும்) போட்டிக்கான உங்கள் கவிதைகளை இப்புதிய மின்னஞ்சல் rtskp2016@gmail.comக்கு அனுப்பித் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நிலையில் தவிர்க்க இயலாமல் போட்டிக்கான கால அளவு டிசம்பர் 31, 2016 இந்திய நேரம் 23:59 வரை நீட்டிக்கப்படுகிறது.

இச்சிரமங்களுக்கும், இதன் பொருட்டு ஏற்படும் காலத் தாழ்வுக்கும் எங்கள் வருத்தங்களைப் பதியும் அதே வேளை, தொடரும் உங்கள் ஆர்வத்திற்கும், புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி பலவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டி குறித்த விவரங்கள், விதிகளை அறிய

https://m.facebook.com/story.php?story_fbid=10209656479109367&id=1250956727

நன்றி
ரியாத் தமிழ்ச்சங்கம்.
Sheik Mohamed Fakhrudeen Ibnu Hamdun Muthusamy Vetrivel

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *