அன்னையர் தினம்!
-தமிழ்த்தேனீ
உலகிலேயே லாபமில்லா நிறுவனம் அதாவது NON PROFITABLE ORGANAISATION ஆரம்பித்தவர் யார் தெரியுமா?
அதாவது எந்த ஒரு லாபமும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு துணைப் பங்குதாரரையும் இணைத்துக்கொண்டு முதன் முதலாக லாபமில்லாத நிறுவனம் தொடங்கித் தங்களுக்கு வரும் பரிசுப் பொருட்கள், சொத்துக்கள் எல்லாவற்றையும் உபயோகிப்பாளருக்கே தந்து நஷ்டத்திலேயே இயங்கி ஆனாலும் மகிழ்ச்சியாக நிறுவனத்தை நடத்தி கடைசியிலே தங்கள் கையிலே ஒன்றுமில்லாமல் லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு தள்ளப்படும் ஒரே லாபமில்லாத நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் இன்னமும் நடத்திக் கொண்டிருப்பவர்கள், இனி எக்காலத்திலும் தளராமல் நடத்தியே தீருவோம் என்னும் நம்பிக்கையோடு நடத்தி வரும் முதலாளிகள் யாரென்று தெரிகிறதா?
தங்கள் சொத்துக்களை, பரிசுப் பொருட்களை, உழைப்பை அன்பை, பாசத்தை, உடல் பொருள் ஆவி அனைத்தையும் வாடிக்கையாளராருக்கே தந்துவிட்டு வெறுங்கையோடு சொர்க்கம் செல்பவர்கள் அல்லது லாபம் ஈட்டும் நிறுவனமான முதியோர் இல்லத்துக்குச் செல்பவர்கள் யாரென்று தெரிகிறதா ? சந்தேகமில்லாமல் தாங்கள் பெற்ற பிள்ளைகளின் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பெற்றோர்கள் எனப்படும் தாயும் தந்தையும்தான் அந்த முதலாளிகள்
வாடிக்கையாளர்கள் எப்போதுமே பிள்ளைகள்தான். அந்த அன்னைக்கும் அவளின் அன்புக் கணவனுக்கும் அன்னையர் தினமாகிய இன்று வணக்கம் சொல்வோம்!
என் தந்தை ஆர் ரங்கசாமி அவர்களுக்கும் என் அன்னை ஆர் கமலம்மாள் அவர்களுக்கும் என் சிறம் தாழ்ந்த நமஸ்காரத்தை தெரிவிக்கிறேன்!