எழுதாத நாளே பழுதான நாளாம்
பொழுதென்றும் வெண்பா புனைந்து -தொழுதிட
செய்வாய் சிபாரிசு செவ்வேள் முருகனிடம்
”பெய்வாய் தமிழ்மோஹன் பால்”….!

 

தேவி திருப் புகழ்….

170924 - Skandamatha -Devi series -lr

“ராசனொடு ஆடும்சிவ காமிமுகம் ஒன்று
ராவில்நில வானஅபி ராமிமுகம் ஒன்று
பேசுதமிழ் ஞானமகன் பாலின்முகம் ஒன்று
பூசுதிரு நீறுமக மாயிமுகம்ஒன்று
தேசகவி பாரதியின் மாரிமுகம் ஒன்று
தேவிகரு மாரியென தோன்றுமுகம் ஒன்று
ஆசுகவி ஆகயெனை ஆக்கவரு வாயே
ஆதிசிவன் பாகமிட மானமுலை யாளே”….

“நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
உமைச்சி வேலை உடையோய் படையாய்
சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….கிரேசி மோகன்….!

’’கந்தமாதா, கல்யாணி கற்பக காமாக்‌ஷியாய்
வந்தமாதா வீரத்தை வேலவர்க்கு -தந்தமாதா
காளி, நரசிம்மி,காபால காவராஹி
தூளியில் தாலேலோ தாய்’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *