பெண் ஒரு போராளி…!
-ஆ. செந்தில் குமார்
கல்லடிகள் தாங்கி நிற்கும் பழுமரம் போல் – கணவனின்
சொல்லடிகள் தாங்கி நிற்கும்
பெண் ஒரு போராளி!
கற்புநெறிக்கு இடையூறு எது வரினும் கலங்காமல்
கனல் கக்கும் பார்வையினால் வாள் வீசும்
பெண் ஒரு போராளி!
சுட்டாலும் வெண்மை தரும் சங்கைப் போல் – எத்துன்பம்
பட்டாலும் பிள்ளைக்காக இன்பமெனக் கொள்ளும்
பெண் ஒரு போராளி!
ஆணாதிக்கம் என்பது இங்கு இருந்தாலும்
ஆடவர்க்கு நிகராக அனைத்திலுமே கோலோச்சி நிற்கும்
பெண் ஒரு போராளி!
அடக்குமுறைக்கு அடிபணியாமல் அழுத்தமான மனம் கொண்டு
நினைத்த எண்ணம் நிறைவேற நிலைத்து நின்று போராடும் ஒவ்வொரு
பெண்ணுமே ஓர் போராளி!!