எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

 

நீதிபற்றி இலக்கியங்கியங்கள்
நிறையவே வந்தவிடம்
போதனைகள் பலபுகன்ற
புனிதர்கள் பிறந்தவிடம்
சாதனைகள் சரித்திரமாய்
தானாக்கிக் கொண்டவிடம்
சோதனைக்கு ஆளாகும்
சோகமது வேதனையே !

இதிகாசம் பலகண்ட
இந்திய தேசமதில்
அதிகாரம் எனுமரக்கன்
அகிம்சைதனை அழிக்கின்றான்
ஆண்டவனை வணங்கிநிற்கும்
ஆலயத்தை அழுக்காக்கும்
அருவருப்பை அரங்கேற்றும்
அவலமதை யார்தடுப்பார் !

இல்லறத்தை வைத்தார்கள்
இனியசுகம் அனுபவிக்க
தொல்லுலுகில் வல்லுறவை
சொல்லவில்லை பெரியோர்கள்
வல்லுறவைத் தேர்ந்தெடுத்து
வாழ்வினையே அழிக்கின்றார்
வாழுவதைப் பாரதத்தாய்
பார்த்தேங்கி அழுகின்றாள் !

சட்டத்தைப் படித்தவர்கள்
இட்டமுடன் திரிகின்றார்
எட்டுணையும் இரக்கமின்றி
எதைஎதையோ செய்கின்றார்
காவல்துறை கண்டாலும்
கருத்ததுலே காட்டாமல்
களவுசெய்வார் பக்கமாய்
கைகொடுத்தே நிற்கிறதே !

காமமெனும் வெறியாட்டம்
கணகின்றி நடந்தாலும்
காசுகொண்டு அத்தனையும்
காணாமலே செய்கின்றார்
காந்திமகான் வாழ்ந்திருந்த
காருண்ய பூமிதனில்
காட்டுத்தனம் பெருகவிட்டால்
நாட்டுநிலை என்னாகும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.