போர்வீரர்களின் மனைவி தான் பாஞ்சாலி
=====பொதுச்சபையில் பட்ட துன்பம் தெரியாதா..?
கூர்மதி கொண்டவர் பாண்டவர்! அவர்கள்
=====கொண்ட துன்பத்திற் கேதேனும் அளவுண்டா.?
சூர்யகுல அரசன் அரிச்சந்திரன் தன்வாழ்வில்
=====சுடலையில் பிணமெரித்த நிலை எதனால்..?
யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
=====ஏனிந்தக் கஷ்டம் ? புரிவது மிகக்கடினமே..!

மார்க் கண்டேயனுக்கு பதினாறில் மரணம்
=====மரணமில்லாச் சிரஞ்சீவி யானது எதனால்..?
நேர்வாரிசு இல்லாமல் நானூறு வருடமும்
=====நகர்ந்ததே மைசூர்மஹா ராஜவம்சம் எப்படி..?
நீர்மீதில் வாழ்நாளைப் போக்கும் மீனவர்
=====நித்தம் சோதனையில் நீந்திக்கழிக்கிறார் ஏன்?
யார் இட்டசாபம் இதற்கெல்லாம் காரணம்?
=====எவரும் எளிதில் அறியமுடியாத ரகசியமோ..?

பார்மீதில் மாந்தராய்ப் பிறந்தாலே ஏதோ
=====பெரியதொரு துன்பத்தி லுழல்வது சகஜமே..!
ஆர்வலரென தனைச் சொல்லிக் கொள்வார்
=====ஆதாய மிலாதெதையும் செய்ய நினையார்..!
ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்
=====ஊரையே கொள்ளை யடிக்க நினைப்பார்..!
நேர்மையாக வாழமுடியா நிலை தானின்று
======நீரறிவீரோ?ஈதெலாம் யாரிட்ட சாபமென்று..!
======================================================

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::21-05-18
நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.