கலப்படங்கள் கல்வியிலுமா?

0

பவள சங்கரி

தலையங்கம்

இந்தியாவில் மொத்தம் 277 போலியான பொறியியல் கல்லூரிகள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன. தலைநகர் தில்லியில் மட்டும் 66 கல்லூரிகளும், கர்நாடகாவில் 23 கல்லூரிகள், உத்திரப் பிரதேசத்தில் 22 கல்லூரிகளும், ஹரியானாவில் 18, மகாராஷ்டிராவில் 16, தமிழ் நாட்டில் 11 கல்லூரிகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பாராளுமனறத்தில் மனித வளத்துறை மேம்பாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானாவிலும், மேற்கு வங்கத்திலும் முறையே 35, 27 போலி கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன … இவைகள் அனைத்தும் AICTE யின் அனுமதி இல்லாமல் போலியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்தும் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும், அல்லது ஒரேயடியாக மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது . UGC 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக தன்னுடைய இணைய தளத்தில் பெயர்களோடு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ugc.ac.in/page/Fake-Universities.aspx

வங்கிகளில் நடையாய் நடந்து கல்விக்கடன் பெற்று தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்தப்போகும் கனவுடன் தங்கள் வாரிசுகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது .. கலப்படங்கள் கல்வியிலுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.