கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
இல்லாத பேரிடம் செல்….!
தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
எதையும் மனமே இதயக் கனியாய்
கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!