கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….!
ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ
உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
உன்கனவில் காண உறங்கு….கிரேசி மோகன்….!