நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36
36. மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
மனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.
குறள் 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
உண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.
குறள் 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
கத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
ஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம். .
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
பொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
எல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்
விருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.
(அடுத்தாப்லயும் வரும்….