நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58
கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
இந்த ஒலகம் நேசமும் இரக்கமும் இணஞ்ச கண்ணோட்டம் ங்குத பெரும் அழகக் கொண்டவங்களால தான் அழியாம நிக்குது.
குறள் 572:
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
நேசத்தோட அணைச்சு இரக்கம் காட்டும் கண்ணோட்டம் இல்லாதவங்க உசிரோட இருக்கது இந்த பூமிக்கு சும தான்.
குறள் 573:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்
இரக்க கொணம், நேசம் ங்குத கண்ணோட்டத்தோட பொருந்தி வாராத கண்ணும் பாட்டு கூட பொருந்தி வாராத இசையும் ஒரு உபயோகத்துக்கு ஒதவாது.
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்
உள்ளத்துல நேசத்தையும் இரக்கத்தையும் ஊற வைக்காத கண்ணுங்க மொகத்துல இருக்கது தவித்து அதால வேற என்ன ஒபயோகம்?
குறள் 575:
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்
ஒருத்தனுக்கு கண்ணுல பூட்டுத நக நட்டு கணக்கா இருக்கது கண்ணோட்டங்குத கொணம். அது இல்லன்னா வெறும் புண் னு நெனைச்சிக்கிடணும்.
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்
ஒருத்தருக்கு கண் இருந்தும் கூட அதுக்குரிய நேசமும் இரக்கமும் இல்லன்னா அவர் மரத்துக்கு தான் சமானம்.
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரு தான். கண் இருக்கவங்க கண்ணோட்டம் இல்லாம இருக்க மாட்டாங்க.
குறள் 578:
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு
செய்யுத கடமயிலேந்து தவறாம கருணையா இருக்கதிலும் முதலா இருக்கவங்களுக்கு இந்த ஒலகமே சொந்தமாவும்.
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
தன்னைய அழிக்க நெனக்கவங்க கிட்டயும் பொறும காட்டுதது ரொம்ப ஒசந்த கொணம்.
குறள் 580:
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
கருண உள்ளமும் பண்பாடும் உள்ளவங்க தான் கூட பழகுதவங்க விஷத்த குடுத்தாக் கூட குடிச்சிபோட்டு சந்தோசப்படுவாங்க.
(அடுத்தாப்லையும் வரும்…)