Tag: விவேக் பாரதி

  • காலப் பெண்ணே

    தில்லித் துருகர்செய்த வழக்கமடி” மற்றும் “மன்னர் குலத்தினிடை பிறந்தவளை” என்ற பாரதி பாட்டின் சந்தமெட்டு !

    என்னை அலையவைத்துச் சிரிப்பதென்ன – அடி
    எங்குந் திகழ்கின்ற காலப்பெண்ணே !
    உன்னைப் புகழ்வதன்றி இந்தச்சிறுவன் – எழில்
    ஊறுஞ் சொல்வேறு சொல்லியதுண்டோ ?
    மின்ன லெனப்போகும் காலப்பெண்ணே ! – எனை
    மீட்டி இயக்கிடுவை காலப்பெண்ணே !
    சின்னஞ் சிறுவனென நானிருப்பதால் – உன்னில்
    சிக்கி உழல்கவென நீவிடுப்பதோ ?

    எத்த னைதூரம் செல்லவைக்கிறாய் – சின்ன
    ஏழைக் குடலலுப்பை நீயளிக்கிறாய்
    பத்துப் பதினைந்து மைல்நடக்கிறேன் – எனைப்
    பார்த்திங் கமர்ந்தபடி பரிகசிக்கிறாய் !
    நித்தம் உனைக்கேட்ப தொன்றுமட்டுமே – வழி
    நீளம் குறைக்கும்வழி தந்துசென்றிடு
    பித்தைத் தீர்க்கவழி எண்ணுவையெனில் – கவி
    பீறிட் டெழும்வேகம் நீவழங்கிடு !

    காற்றைக் கவியாக்கிக் காலம்கழிப்பேன் – அடி
    காக்கை ஒலியினிலுஞ் சந்தம்பிடிப்பேன்
    நேற்றை இன்றாக்கி நாளைவகுப்பேன் – இந்த
    நெஞ்சம் தூங்கும்வரை பாடல்படிப்பேன் !
    ஆற்றல் அறிவென்று பேசிக்களிப்பேன் – என்றன்
    அம்மை முகஜாலம் சொல்லிரசிப்பேன்
    போற்றி உனைச்சொல்லி வாழ்த்தையொலிப்பேன் – பெரும்
    போதந் தருகின்ற வார்த்தைபடைப்பேன் !

    “ஓம் சக்தி”
    விவேக்பாரதி

    Share
  • உமையாள் திருப்புகழ் -7

    விவேக்பாரதி 

    தான தந்தன தானா தனாதன 
    …தான தந்தன தானா தனாதன 
    …..தான தந்தன தானா தனாதன – தனதானா ! 

    சீறு மங்கர வோடே சடாமுடி 
    …சீத ளம்பயி லாதே  நிலாவொடு 
    …….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ !

    தீது மெங்கிலு மூடே யெழாதற
    …தீரு மந்நிலை மாதே அழாதிர
    …….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் !  

    ஏறு மங்கரி காடே புகாதரு 
    …ளேகி யெம்மன நாடே சடாரென 
    ……ஏறி அந்திரி நீயே தயாபரி – வரவேணும் 

    ஏம மென்றுமெ சாகா துராவிட 
    …ஏடி சங்கரி மாயே அடாசிடு 
    ……ஏத மென்றிடு தீயே சுடாதுற – உனைநாடி 

    நீற ணிந்திடு வோமே கனாவிடை 
    …நீளு மெம்மட நாவே கெடாமொழி 
    …….நீவ ழங்கிடு வாயே பராபரை ! – பணிவோமே 

    நீச மென்றிடு நோயே படாதுயர் 
    …நீல கண்டனைப் போலே யுலாவிட 
    ……நீய ருள்தரு வாயே தடாகமு – முறைமாதே ! 

    ஊற றுந்திட ஊழே தொடாதுற 
    …ஊரெ ழுந்திட நீயே வொரேகதி 
    …….ஊமை யெங்களின் வாயே சொலாமொழி – மொழிவாயே 

    ஊசி தன்னிடை நீயே நியாயமு 
    …மூரி லிங்ஙண மேவீ விழாவுற 
    ……வூப மென்றிட வாராய்க் கபாலியி – னுமையாளே !

    Share
  • உமையாள் திருப்புகழ் – 6

    விவேக்பாரதி

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் 
       தந்ததன தந்தனம் – தந்ததானா ! 

    முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் 
    …முந்திவர வென்றதும் – தன்றனோடு 

    முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் 
    …முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி !

    துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! 
    …துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் 

    துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் 
    …துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி !

    கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் 
    …கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் 

    கண்டவழி நல்கிடுங் கண்ணனவ னுந்தொழுங் 
    …கண்டவிட மன்னனின் – சம்புமாரி !

    சின்னமதி கொண்டிடுஞ் சிந்தைதெளி வும்பெறுஞ் ! 
    …சிங்கமதி லுள்ளநஞ் – சிந்துதாயைச் 

    சிந்தைசெய வந்திடும் நல்லவினை ! சந்தமுஞ் 
    …சிந்துமுமை யெங்களின் – சம்புமாரி ! 

    Share
  • நாராய் அழு


    விவேக்பாரதி 

     

    நேரிசை ஆசிரியப்பா 

     

    கதிரவ னுதியாக் கருநிறக் காலை
    சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின்
    பால்நிற மன்ன படுவழ கோடே
    கால்நிற முள்ளக் கருநிற நாராய் !
    பெறுமல கதிலே பேருரு கொண்ட
    உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் !
    உனதருங் கூட்ட மோய்விட மெல்லா
    மெனதருந் தலைவ ! னேவு கணையன் !
    விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் !
    கண்ணினி லதனைக் காட்டா மனிதன் !
    அப்துல் கலாமெனு மதிசயக் கார !
    னொப்பிலா தலைவன் ! ஒழுகிய பண்பன் !
    தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
    யுலகினைக் கண்ட உத்தம வில்லன் !
    வீணையும் மீட்டும் வித்தகக் காரன் !
    ஆணைக ளன்பாய் அவழ்த்திடும் மன்னன் !
    அழகிற குன்போ லக்கினிச் சிறகைத்
    தொழுதிட விரித்த தொல்லறி வாளன் !
    தென்றிசை தோன்றி எண்திசை யெங்குந்
    தன்பெய ரொலிக்கத் தமிழ்சொலுந் தீரன் !
    நாடிதை யாண்ட நாயக ! னென்கோ !
    ஆடிடா குணத்த ! னழிவினுக் கழிவை !
    ஆண்டவ னென்னு மாணவக் காரன்,
    ஆண்டவ னுயிரை அருகி லிழுத்துச்
    சுயநலச் செய்கை சுயவுரு காட்டிக்
    கயவனைப் போலே கடமையைச் செய்திங்
    கின்றோ டோராண் டாச்சென
    நின்றல றிடுவாய் நீயழு வாயே !

     

    Share
  • இளைஞர்வாழ்க்கை

    விவேக் பாரதி

     

    உலகத்தார் பல்லோரும் இளைஞர் வாழ்வை
    உருப்படாத வாழ்வென்றே எண்ணு கின்றார்
    கலகந்தான் இவராலே நேரு மென்பார்
    கண்டபடி வாழ்ந்திடுவோ ரிளைஞ ரென்பார்
    விலக்கிடுவார் குடியிருப்பு பகுதி தன்னில்
    வீடுதர மறுத்திடுவார் இளைஞர் சேர்ந்தால்
    தலைகால்தான் புரியாமல் ஆட்டம் போட்டுத்
    தன்குடும்பப் பெயரையுமே கெடுப்ப ரென்பார் !!

    உண்மையிலே இளைஞரென்றால் யார்தான் சொல்வீர்
    உலகத்தை இயக்கவல்ல சக்தி காண்க
    நுண்ணறிவைக் கொண்டவர்கள் சாதி பேதம்
    நுகராத பாரதியின் கூட்டங் காண்க
    மண்முழுதும் மலரினங்கள் பூக்க வைக்க
    மனமிசைக்கும் தேனீக்க ளிளைஞர் காண்க
    கண்ணாறக் காண்பதெல்லாம் கலையே வென்று
    கவலைகளை மறக்கின்ற குலமே காண்க !!

    காதலெனும் தவம்புரியும் இளைஞர் ஞானி !
    கனலாகப் புரட்சிசெய்யு மிளைஞர் வீரர் !
    பூதலத்தி லழகுருவா மிளைஞர் பூக்கள் !
    புரியாத புதுமாற்றம் புதிய தோற்றம்
    மேதினியில் உடல்மற்றும் மனத்துக் குள்ளே
    மேன்மையுறக் காணுமவர் ஆய்வுக் கூடம் !
    வாதித்த லெளிதாமோ விடைக ளற்று
    வாழ்கின்ற கேள்வித்தாள் இளைஞர் வாழ்க்கை !!

    -விவேக்பாரதி
    04/07/16

    Share
  • நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

    விவேக் பாரதி

    கவிஞர் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய வெண்பாக்கள் படித்து அவரது நடையில் நங்கனல்லூர் ஆஞ்சநேயர் மேல் எழுதிய வெண்பாக்கள். கேட்டவுடனே படம் தந்து உதவிய கவிஞர் கிரேஸி மோகன் அவர்களுக்கு என் நன்றி

    anjan

    மருதீ உன்றன் மணிவாசல் நாடிவந்தோம்
    பாருநீ தேடிவந்த பக்தருக்குச் – சீருநீ !
    மேருநீ ! பாருநீ ! தேருநீ ! ஊருணீ
    நீருநீ ! தீருநீ ஊறு !

    நங்கநல் லூருறை நம்பிரான் தோழ!க்கு
    ரங்குநீ ! காவேரி ரங்கனின் – பங்குநீ !
    நுங்குநீ ! தொங்குநீ ! எங்குநீ பொங்குநீ !
    கங்குநீ ! இங்குநீ தங்கு !

    பீமனுக் கண்ணா FIGUREதீண்டா நல்மார்பா !
    ராமனுக்குத் தோழா ! ரவிசீடா ! – ஷேமமே
    வேண்டிநிற் கின்றோம் வெடுக்கென நின்னருளைக்
    காண்டிபன்போ லெங்கட்கும் காட்டு !

    ரிஷ்யமுக பர்வதத்தில் இஷ்ட்டமில்லாச் சுக்கிரீவன்
    கஷ்டமதை மாய்த்தோர்க் கடியாளே ! – புஷ்டியான
    தோளுடையாய் எந்நாளும் தோற்காத கதையுடையாய் !
    ஆளென எம்மையுமேற் றாள் !

    பங்கன பல்லியாய்ப் பார்த்தாய்ப் பகலவனை !
    அங்கதன் போற்றிடும் UNCLEநீ ! – நங்கநல்
    லூருறைத் தேவனே பேருரைக் கின்றோமே
    சீருறநீ வந்தால் சிறப்பு !

    -விவேக்பாரதி

    படம் : கிரேஸி மோகன்

    Share