நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

விவேக் பாரதி

கவிஞர் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய வெண்பாக்கள் படித்து அவரது நடையில் நங்கனல்லூர் ஆஞ்சநேயர் மேல் எழுதிய வெண்பாக்கள். கேட்டவுடனே படம் தந்து உதவிய கவிஞர் கிரேஸி மோகன் அவர்களுக்கு என் நன்றி

anjan

மருதீ உன்றன் மணிவாசல் நாடிவந்தோம்
பாருநீ தேடிவந்த பக்தருக்குச் – சீருநீ !
மேருநீ ! பாருநீ ! தேருநீ ! ஊருணீ
நீருநீ ! தீருநீ ஊறு !

நங்கநல் லூருறை நம்பிரான் தோழ!க்கு
ரங்குநீ ! காவேரி ரங்கனின் – பங்குநீ !
நுங்குநீ ! தொங்குநீ ! எங்குநீ பொங்குநீ !
கங்குநீ ! இங்குநீ தங்கு !

பீமனுக் கண்ணா FIGUREதீண்டா நல்மார்பா !
ராமனுக்குத் தோழா ! ரவிசீடா ! – ஷேமமே
வேண்டிநிற் கின்றோம் வெடுக்கென நின்னருளைக்
காண்டிபன்போ லெங்கட்கும் காட்டு !

ரிஷ்யமுக பர்வதத்தில் இஷ்ட்டமில்லாச் சுக்கிரீவன்
கஷ்டமதை மாய்த்தோர்க் கடியாளே ! – புஷ்டியான
தோளுடையாய் எந்நாளும் தோற்காத கதையுடையாய் !
ஆளென எம்மையுமேற் றாள் !

பங்கன பல்லியாய்ப் பார்த்தாய்ப் பகலவனை !
அங்கதன் போற்றிடும் UNCLEநீ ! – நங்கநல்
லூருறைத் தேவனே பேருரைக் கின்றோமே
சீருறநீ வந்தால் சிறப்பு !

-விவேக்பாரதி

படம் : கிரேஸி மோகன்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *