சக்தி சக்திதாசன்

 

Duggan1 Duggan2

 

அன்பினியவர்களே!

இனிய வண்க்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நாடு சுபீட்சமானதாக, கட்டுக்கோப்புடன் மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுப்பதாக, சுதந்திரமான மனநிலை கொண்ட மக்கள் வாழும் ஒரு தேசமாகப் பரிணமிப்பதற்கு அந்நாட்டின் சட்ட திட்டங்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இச்சட்ட ஒழுங்கைச் சரியாக நிலைநாட்டுவதற்கு அந்நாட்டின் காவற்துறையின் பங்கு மிகவும் பிரதானமாகிறது.

காவற்துறையின் செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடைமுறைபடுத்த வேண்டுமாயின் அக்காவற்துறையின் மீது அந்நாட்டு மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதோடு அக்காவற்துறை ந்ந்ந்ந்ந்ந்நடுநிலை தவராது செயற்படுகிறது எனும் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

எப்போது இந்த நம்பிக்கை அற்றுப் போகிறதோ அப்போது அங்கு சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்து போகக்கூடிய சூழல் உருவாகிறது.

2011ம் ஆண்டு நடுப்பகுதியில் இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் ஏற்பட்ட கல்வரங்களைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இக்கலவரத்தின் பின்ன்ன்ன்ன்னனி பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்!

மார்க் டூகன் என்பவர் இங்கிலாந்தில் வாழும் கறுப்பு இன மக்களில் ஒருவர். ஒருநாள் இவர் சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்த போலிசார் அவ்வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ய முற்பட்ட வேளையில் ஏற்பட்ட களாபரத்தில் மார்க் டூகன் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார்.

நிராயுதபாணியான எமது உறவினரைச் சுட்டுக்கொலை செய்தார்கள் போலிசார். அவர் கறுப்பு இனைத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதுமில்லை என குற்றம் சாட்டினர் அவரது உறவினர்கள்.

போலிசார் தரப்பில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருந்தது அதைக் கவிடும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் செவிமடுக்காத காரணத்தால் தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடே அவர்து மரணத்திற்குக் காரணம், என வாதிடப்பட்டது.

அச்சமயம் அந்நிகழ்வை நடத்திய போலிசார் அங்கம் வகிக்கும் நகரின் போஓஒலிஸ் நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்ட்ட்டம் அங்கு கலவ்ரமாக உருப்பெற்று அது நாடு முழுவதும் பரவியது.

இதுவே அக்கலவரத்தின் பின்னனி.

சரி அதை இப்போது இங்கு அலசுவதற்கு என்ன காரணம்?

போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை நியாயபூர்வமானதா என்பதை விசாரிக்கும் மரண விசாரணை நடந்து முடிந்து அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டது.

இத்தீர்ப்பு ஊடகத்துறையில் ஏற்படுத்திய சர்ச்சையைப் பற்றிக் கொஞ்சம் விளக்கவே இம்முயற்சி.

இந்நிகழ்வு நடந்த நேரத்தில் மார்க் டூகன் கைகளில் துப்பாக்கி இருக்கவில்லை, ஆனால் அவர் காரில் அமர்ந்திருக்கையில் அவரிடம் துப்பாக்கி இருந்தது. போலிசாரின் இத்துப்பாக்கிப் பிரயோகம் ஒரு நியாயமான தற்காப்பு நடவடிக்கையே மார்க் டூகனின் மரணம் நியாயபூர்வமானது

இதுவே அவ்விசாரணைக் குழுவின் தீர்ப்பாக அமைந்தது.

கைகளில் துப்பாக்கி இல்லையெனில் அத்துப்பாக்கி எங்கே?

அது அவர் சுடப்பட்டு விழுந்த இடத்திற்கு அருகில் சற்றுத் தொலைவில் விழுந்து கிடந்தது.

இதன் விளக்கம்?

காரில் துப்பாக்கியுடன் இருந்த மார்க் டூகன் போலிசார் தனது வாகனத்தை சோதனையிடப் போவதை அறிந்ததும் விரைவாகத் தன் துப்பாக்கியை வெளியே வீசியெறிந்திருக்கிறார். அவரது இந்நடவடிக்கையைத் தம்மை நோக்கி அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் போவதாகப் புரிந்து கொண்ட போலிசார் தற்காப்புக்காக துப்பாக்கியை உபயோகித்துள்ளார்கள்.

இதுவே பொதுமக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 பேரைக் கொண்ட நடுவர் குழுவினருக்கு அளிக்கப்பட்ட சாட்ச்சியங்களில் இருந்து அறியப்பட்டது.

ஆனால் மார்க் டூகன் அவர்களின் உறவினர்களும், ஆத்ரவாளர்களும் இது போலிசாரின் திட்டமிட்ட நடவடிக்கை. மார்க் டூகன் ஒரு கறுப்பர் எனும் காரணத்தினால் போலிசார் நிறவெறி காரணமாக அவ்ரைப் பழி வாங்கியுள்ளார்கள் என்ற வாதம் தலைதூக்குகிறது.

இங்கிலாந்தின் காவற்துறை நிறவெறி தலைதூக்கி ஆடும் ஒரு அமைப்பாக இருக்கிறது. தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று இவர்கள் ஊடகங்களில் குற்ரம் சாட்டுகிறார்கள்.

நீதி கிடைக்கும் வரை தாம் ஓயப் போவதில்லை என்கிறார்கள்.

இங்கேதான் மிகப்பெரிய சிக்கல் எழுகிறது. பல சமூகங்கள் வாழும் ஒருநாட்டில் பெரும்பான்மையோரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு காவற்துறை தமது கடமையைச் சரிவர செய்ய முடிகிறதா?

அவர்கள் நியாயபூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளூஊஊக்குக் கூட நிறவெறி சாயம் பூசப்படுகிறதா? இக்கேள்வி மிகவும் யதார்த்தமானதே!

இங்கிலாந்து போன்றதொரு நாட்டில் பல சமூகங்கள், பல கலாச்சாரங்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் துரதிர்ஷ்டவசமாக கணிப்புகளின் படி குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் பெரும்பான்மையாக ஒரு சமூகத்தையோ அன்றி ஒரு நிறத்தையோ கொண்டவர்களாக இருந்தால் அவர்களை நோக்கிய போலிசாரின் நடவடிக்கைகளுக்கு நிறவெறி முத்திரை குத்தப்படுமாகில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு நிலைநாட்டப்படும்?

இந்நிலையில் உள்ள காவற்துறையினரைப் பார்த்துப் பரிதாபப்படுவது ஒன்றே எமக்கு ஏற்படக்கூடிய உணர்வாகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மார்க் டூகன் எனப்வர் நிராயுதபாணியாக சுடப்பட்டார் என்று கூக்குரலிடும் அதே மக்கள் அவரை பற்றிய பின்னனியைப் பற்ரி குறிப்பிட மறந்து விட்டார்கள்

அவர் பயங்கர குற்றச் செயல்கள் புரியும் குழுவில் அங்கம் வகிப்பவர், பல கொலைகள் கொள்ளைகளில் ஈடுபட்டவர்
பல குர்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர், ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என்பவர்ரைக் கையாண்டவர்.

இவைகளும் அவரைப் பற்றி இபோது பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள். இப்படியான பின்னனி கொண்ட ஒருவரைப் பின் தொடர்ந்து சோதனை செய்யும் போது அவர் துப்பாக்கி வைத்திருந்தால் அதற்கான நியாயமான நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

மறுபக்கம் பார்த்தால் போலிசார் இதைவிட அவர் உயிருக்கு உத்த்ரவாதம் அளிக்க வேறு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமா?

விவாதங்கள் பலமாகத் திடர்கின்றன. லண்டன் காவற்திரையின் பொறுப்பாளர், காவற்துறையினர் மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது உண்மைதான் அதை மீட்பதற்கு ஏற்ற நடப்டிக்கைகள் நாம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதனோடு அதன் ஒரு பாகமாக இனிமேல் போலிசார் இத்தகிய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தம்மீது ஒரு வீடியீ கமிராவை அணிந்து கொள்வதன் மூலம் அவர்களது நடவ்டிக்கை முழுவதும் பதிவு செய்யப்பட்டு அவர்களது நடவடிக்கையை மக்களுக்கு வெளிப்படையாக்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று மட்டு எமக்குப் புரிய வேண்டும் போலிசார் இத்தகிய ஒரு ஆய்வுக்குட்படுத்தப்படுமளவிற்கு இங்கிலாந்து மக்களுக்கு ஜனநாயக் உரிமைகள் இருப்பது குறித்துப் பாராட்ட வேண்டும்.

குற்றவாளியோ இல்லையோ ஒரு உயிர் பறிபோனதற்காகவும், அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்காகவும் பரிதாப்பட வேண்டியதும் மனிதாபிமானமே!

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *