திருமால் திருப்புகழ் (37)
கிரேசி மோகன்
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான -தனதான….
——————————————————————–
காஞ்சி வரதராஜ பெருமாள்….
—————————————
அதல சேட னாராட ,அலையு லாவு பாலாட,
அமுத சோத ரீயாட, -அயனாரும்
கமலா நாபி மீதாட, விரைய நீல வானோடி
கருட வாக னாராட, -அதனாலே,
எதிலும் ராம னேகாண விழிகள் மூடி வாளாக
அமரும் வாயு சேயோனும் -செவிசாயும்
இவர்கள் ஆடும் பேரோசை விழசு பாவ வாலாட
சிறிய பாத னாராட, -கரநாலில்,
கதையும் வாளும் கூராழி ஒலியும் ஓசை போராழி
சிலையும் ஆட, மீனாமை -மறையேனம்
வளரு வாம னார்சீயம் பரசு ராம ஸ்ரீராம
உழவு ராம கோபால -அவதார
கதைகள் ஆட, காமாட்சி பெரிய வாளின் ஊரான
அசலம் ஆனை மீதேறி -வளர்வோனே,
பெரிய தேவி தாயோடு வருக நீல மாலோல,
வரத ராஜ தேவாதி -பெருமாளே
————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html