ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’
ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’ வெண்பாக்களாக முயற்சி….எழுதிய வரையில்….குரு வாரமாக இருப்பதால் பகிர்கின்றேன்….
’’நிர்வாண ஷட்கம்’’
———————————
‘’வேறு’’
——————
‘’தவம்நான், தளர்ச்சிநான்,
அவம்நான், அலட்டல்நான்
சவம்நான், சைதன்ய ரூப
சிவம்நான் சிவானந்தமயம்நான்’’….
பாயும் பூனைநான்
பதுங்கும் புலியும்நான்
தாயும் தந்தைமகனும்நான்
ஓய்வும்நான், உழைப்பும்நான்
ஓங்கார வடிவும்நான்
வாயுவெளி நீர்மண் காற்று
வடிவான சிவானந்தமயம்நான்
அஞ்சாத சிங்கம்நான் அஞ்சுமணிற்பிள்ளைநான்
பிஞ்சுநான் பூவாகிக் காய்க்கும் புடலைநான்
பஞ்சாயுதன்நான் ,பஞ்சாங்க பிரம்மன்நான்
பஞ்சபூதத்தாலான பரமானந்தசிவம்நான்….கிரேசி மோகன்….
’’நிர்வாண சதகம்’’….(1)
——————————————-
‘’வெண்பா வேறு’’
————————————-
’’புத்தி, விவேகம், புலனகந்தை, பூர்வஜென்மம்
பத்தி அறிவோனும், புலனைந்தாம் -சுத்திவரக்
காணும்கண், கைநாக்கு, காதுநாசி, போன்றவைகள்
நானல்ல வென்றறிவேன் நன்கு’’….
‘’நிர்வாண சதகம்’’….(2)
——————————————–
’’அஞ்சும்தீ , அணைக்கும்நீர், ஆகாசம், மண்காற்று
பஞ்சபூ தங்கள் பகிர்வதால் -செஞ்சவன்
நானல்ல, நித்ய நிர்குண நிராகார
ஆனந்தமான அந்த அரன்’’….(2)
நிர்வாண சதகம்….3
———————————
‘’அஞ்சும் பிராணனல்ல, அஞ்சுவிதக் காற்றல்ல
அஞ்சொடு ரெண்டாம் அவசியமும், -அஞ்சுவிதக்
கோசம், புலனைந்து,கொல்லைக் கருவியல்ல:
வாசமா னந்தசி வம்’’….கிரேசி மோகன்….