ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

0

 

ஞான காண்டம்
—————-

பிறவிப் பிணியை அறவே அகற்றி
துறவுக்கும் அப்பால் திகழ்ந்த -பரிசுத்த
ஆவியைக் கண்டதால் அர்ச்சிப்பீர் ‘’பகவானாய்”
காவிய கண்டமுனி கூற்று….(26)

இகவாழ்வின் அச்சம் இயலாமை கோபம்
புகவொண்ணா சாத்வீகம் பெற்றும் -பகவானை
மண்ணிட்ட மீனாக மாற்றியது , தண்ணீராம்
அண்ணா மலையார் அழைப்பு….(27)

நானாட்சி போனதால் நாடுடல் நாட்டம்போய்
வானாச்சு, மண்ணாச்சு வீரமெலாம் -மீனாட்சி
சுந்தரேஸர் முன்பு சிலிர்த்துகுக்கும் கண்ணீரை
இந்தரோஷம் ஆன்மன் இயல்பு….(28)
வந்தான்ம வெள்ளத்தில் தன்தேகம் ஆட்டமுற
சந்தேகம் கொண்டார் சுரமென்று -பிந்தையோர்
போதில் ‘’ இருந்துட்டு போகட்டும் என்றிருந்தேன்
ஏதோ சுகமிருந்த(து) என்று….(29)

விளக்கெண்ணை போன்ற இலக்கண பாடம்
கலக்கிட வேம்பாய்க் கசந்து -இலக்கில்லா
நீண்ட வெளிதனில் மூண்ட பரவசத்தில்
ஆண்டவன் போலானான் ஆழ்ந்து….(30)

தம்பியின் மேல்வைத்த நம்பிக்கை பொய்த்திட
வெம்பிய அண்ணன் வெகுண்டுரைத்தான் -கொம்பையும்
சொம்பையும் ஏந்திடும் சாமியார் வாழ்க்கைக்கு
சம்பளக் கல்வி செலவு….(31)

அன்பால் உரைத்தது அம்பாய் உறுத்திட
கண்பாரா காட்சி குருடனுக்கேன் -தன்போர்வை
ஆவணக் கல்வியல்ல கோவணச் செல்வமென்றான்
மூவிழிக் காரன் மகன்….(or)
மூவிழியோன் தத்து மகன்….(32)

அண்ணனே முன்வந்து அஞ்சுரூ பாதந்து
தின்னது போதுமெனத் திட்டிவிட்டு -தன்னுடைய
கல்லூரி சம்பளமாய் கட்டென்(று) உரைத்தது
செல்அருணை ஆச்சு செவிக்கு….(33)

நானென் தகப்பனை நாடியவர் உத்திரவால்
காணப் புறப்பட்டேன், ஏனென்று -வீணாய்
விசனமேதும் வேண்டாம் வெகுநல்ல கார்யம்
அசலம்தான் இஃதுக்(கு) அகம்….(or)
அசலம்தான் இதுக்கிங்(கு) அகம்….(34)

என்று கடிதம் எழுதியதும் இப்படிக்கு
ஒன்றுமே போடா(து) உணர்ந்தவன் -இன்றண்ணன்
சம்பளம் கட்டவில்லை என்பதைப் பின்குறித்து
தன்பலம் நோக்கித் தவம்….(35)

தாதை தெரிந்தாலும் கீதை புரிந்தாலும்
பாதை அறியாத பார்த்தனாய் -ஏதோ
ரயிலேறிச் சென்றான் ரகசியமாய்த் தன்னை
கயிலாயன் கையில் கொடுத்து….(36)

வண்டி ரயில்போகும் திண்டிவனம் தானென்று
பண்டித முஸ்லீம் பயணிசொல்லி -அண்டி
அருகமர்ந்து இஸ்லாமை ஆராயக் ,கற்றான்
குருவருவார் எவ்வடிவும் கொண்டு….(37)

விழும்புறத்தை வென்றோன் தொழும்முஸல்மான் தோளில்
விழுப்புணர்வு நீங்க விழித்தான் -விழுப்புரத்தில்
விள்ளல் பேரிக்காய் வள்ளலாய்ப் போக்கியது
பிளைப் பசிக்கொடுமை பார்த்து….(38)

பட்டுச் சிவப்பாக கட்டுக் குடுமியில்
நிட்டையில் நின்றவரின் ஞானத்தில் -கட்டுண்டு
முட்ட உணவிட்டு மாம்பழப் பட்டுசெல்ல
துட்டைத் திணித்ததவர் தொண்டு….(39)

தரைவழி சென்றோன் இருள்வரும் நேரம்
அறையணி நல்லூர் இறைவன் -கருவறை
முன்வாசல் மண்டபத்தில் கண்கூசும் ஜோதியில்
தன்கோசம் தான்மறந்தான் துய்த்து….(40)

உண்ணா மயக்கமது அண்ணா மலைத்தொண்டு
பண்ணோர்க்கும் உண்டோ பகவானே -என்னாச்சு
பாழும் பசியால் பகவான் விழலாமா
கீழனூர் காரணத்தைக் கேள்….(41)

புடமிட்ட பொன்னாய் பகவானை மாற்ற
படமிட்ட பாம்பின் விடத்தை -மிடறுற்றோன்
செய்த விளையாடல் சேயும் உணர்ந்தான்’தான்’
எய்த சிவதனுசின் அம்பு….(42)

பாகவதக் கண்ணன் பகவான் ரமணராய்
தாகம் பசியில் தவிப்பதை -பாகவதர்
முத்துக் கிருஷ்ணருக்கு சித்தம் உரைக்கத்தன்
பத்தினியிடம் கொண்டான் பகிர்ந்து….(43)

ஆய்ப்பிள்ளை கண்ணனுக்(கு) அன்று பிறந்தநாள்
தாய்க்குலமும் தர்மத்தில் தாராளம் -பாய்ந்தவனை
இல்லம் இழுத்துப்போய் அள்ளக் குறையாத
வெள்ளமாய் இட்டாள் விருந்து….(44)

கரும்பு விருந்துக்குக் கூலியாய் காதில்
இருந்த கடுக்கனை ஈடாய் -வருந்தி
செலுத்தியவன் கையில் செலவுக்கு நான்கை
அளித்தனன் பாகவதன் அன்று….(45)

கடுக்கன் அடகுவைத்த காகிதத்தை ஞானி
இடுக்கண்ணாய் எண்ணி எறிந்து -மிடுக்காய்
அதிகாலை வேளையில் அண்ணா மலையில்
குதிகாலை வைத்தான்சத் குரு….(46)

அருணை காண்டம்
——————-

அருணாசல மகிமை
——————–

அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு….(47)

ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
திருநாளாம் முக்தி அருணா சலத்தை
ஒருநாள் நினைத்தாலே உண்டு….(48)

பூசை புரியாது , ஈசன் திருநாமம்
ஓசை செவியில் ஒலிக்காது -ஆசை
பலவசம் போயும் மலைவலம் செய்ய
இலவசம் முக்தி இணைப்பு….(49)

மின்னிடும் பொன்னாய் , மிளிரும் வயிரமாய்
திண்ணிரும்பாய் பாறையில் தத்துவமாய் -மண்ணில்
யுகந்தோறும் மாறும் முகங்கொண்ட ஈசன்
புகுந்திருக்கும் ஜோதிப் பிழம்பு….(50)

அருணா சலத்தோன் அடிமுடி தேடி
திருமால் அயனன்று தோற்க -உருவாய்
உயர்ந்து விசும்படைந்த ஊன்றி உலகைப்
பெயர்ந்த பரமே பொருப்பு….(51)

சம்பந்தாண் டானன்பில் சிக்கியதால் தம்மகனை
அம்பிகை தன்ணைப்பில் ஆட்கொண்டும் -கம்பத்தில்
கந்தனொடு காளி கடவுள்கள் ஆடினர்
சந்தம் அருணகிரி சொல்….(52)

சந்திரன் வெண்குடையாய் சூரியன் கைவிளக்காய்
இந்திரன் பூக்களை இறைத்திட -வந்து
கரவலம் தந்து கயிலாயம் சேர்க்கும்
கிரிவலம் வந்தோர்க்(கு) அறம்….(53)

குளித்து மடியாய் வெளுத்த நுதலாய்
உளத்தில் அரனை உடுத்தி -களைத்த
நிறைகர் பிணியாய் நிதானம் காத்து
வரைசுற்ற வாழ்வில் வளம்….(54)

வந்த மகனை வரவேற்க கோவிலில்
தந்தை இருந்தான் தனியாக -சிந்தை
ஒருமித்(து) இருவரும் ஒன்றியதின் சாட்சி
அறுவத்தி மூவராம் அங்கு….(55)

‘’அய்யா குடுமியைக் கொய்யவா’’ கேட்டவனை
அய்யனின் சித்தமாய் ஆதரித்து -அய்யன்
குளப்படியில் குந்தி கெளபீணம் சூடி
தலைபடிந்து ஏற்றார் துறவு….(56)

நாவிதர்க்கு நன்றிசொல்லி சாவிதந்த பொம்மையாய்
கோவிலுக்கு சென்றோன்மேல் கொட்டியது -வாவியாய்
வானத்து மேகமொன்று ஞானிக்(கு) அபிஷேகமாய்
நானொழித்த மேனி நனைத்து….(57)

ஆயிரங்கால் மண்டபத்தில் போயமர்ந்து தேகமாம்
நோய்மறந்து ஆழ்ந்திருந்தான் நிஷ்டையில் -வாய்மலர்ந்து
சேஷாத்ரி சாமிகள் பாசத் துடன்’’சின்ன
சேஷாத்ரி’’ என்றளித்தார் சீர்….(58)

உய்யும் தவம்கலைக்கும் பையன்கள் தொந்திரவால்
அய்யன் இடமாற்றம் செய்தனன் -மையிருளாம்
சாதா ரணர்களால் செல்ல முடியாத
பாதாள லிங்க குகைக்கு….(59)

பூரான் கறையான் புழுபூச்சி பல்லிகள்
ஆரா அமுதாய் அவரெதிர் -பாரா
உடலை ருசித்தும் கடவுள் நினைப்பில்
ஜடமாய் இருந்தான் ஜெயித்து….(60)

ஜாடியில் வைத்த சிவகடாட்ச ஊறுகாய்
வாடாது பாதாள வாயிலுக்கு -மூடியாய்
தானுகந்தான் தன்னை தவத்திரு சேஷாத்ரி
ஞானியின்கால் ஞானம் அறிந்து….(61)

வேதாளப் பையன்கள் விக்கிர மாதவத்தை
சேதாரம் செய்ய சகியாது -பாதாளம்
போன முதலியார் பார்த்தார் இருளிலும்
ஞானக் கதிரவனை நன்கு….(62)

பிராமண சாமியை பத்திரமாய்த் தூக்கி
கிராமத்து மக்கள் கொணர்ந்து -பராமரிப்பாய்
புண்ணான மேனிக்கு பாலா பிஷேகமாய்
உண்ணா முலையாள் உணவு….(63)

வாகன மண்டபத்தில் வில்வ மரத்தடியில்
பூகனக்கும் நந்த வனப்புதரில் -மோகனமாய்
யாகாவா ராயினும் நாகாத்(து) இருந்தனன்
தேகான்ம பாவம் தொலைத்து….(64)

சிவகங்கைத் தீர்த்தம் கவனத்தை ஈர்க்க
அவனங்(கு) இலுப்பை இடத்தில் -தவசிங்கம்
ஒத்திருந்த வேளையில் மெத்தப் படித்தவராம்
உத்தண்டி சீடர் உறவு….(or)….
உத்தண் டிநயினார் உற்று….(65)

உய்யென்று வீசி உறையவைக்கும் காற்றுக்கு
கையென்ற கம்பளியால் மெய்போர்த்தி -அய்யன்
நயினார் நவில்கின்ற நூல்களின் ஞான
வெயிலில் விடுத்தார் விறைப்பு….(66)

வாசித்தார் கைவல்யம் வாசிஷ்ட யோகங்கள்
ஆசிரிய ருக்கே அறிவுரையாய் -தேசிகன்
கூடலில் பெற்றதைக் கற்றான் அருணையில்
தேடல் தொலைந்தபின் தேர்வு….(67)

தேவாரம் ஓதும் திருவருணைத் தம்பிரான்
நாவார வேண்ட நயினாரும் -ஏ,வாரும்!
ஆசானே என்றுரைக்கப் பேசாது போயமர்ந்தார்
வாசம் குருமூர்த்தம் வந்து….(68)

தென்முகத்தோன் , நந்தி தொடர்ந்து சனத்குமாரர்
மண்ணில் பரஞ்சோதி மெய்கண்டார் -சொன்ன
சிவஞான போதத்தைச் சேர்ந்தகுரு மூர்த்தம்
தவமானோர் தங்கும் தரு….(69)

பழைய சினேகிதனைப் பார்த்தகுரு மூர்த்தம்
உழலும் எறும்புகள் ஊர்ந்து -கழலைப்
பிடித்து பகவானின் பேரருளை வேண்டி
கடித்ததில் கூலி கரும்பு….(70)

முக்காலி போட்டு முழுமுதலை அவ்வறையில்
உக்கார வைத்தாலும் ஊர்வனகள் -நிக்காது
அண்டைச் சுவரேறி அய்யனின் குண்டலினித்
தண்டில் வடம்பிடித்த தாம்….(71)

தம்பிரான் பாலெண்ணை தேனென்(று) அபிஷேகச்
சொம்புடன் வந்தங்கு சேர்ந்ததை -எம்பிரான்
கண்டு சுவற்றில் கரியால் ‘’இதற்க்கென்றும்
தொண்டிதுவே’’ என்றார் தடுத்து….(72)

கோலத்து மாவுண்ண கூடும் எறும்புகளாய்
பாலொத்த சேயை பெருந்திரளாய் -கால்இத்துப்
போனாலும் கண்டார் , பிராமண சாமிமுகம்
கோணாமல் வீற்றிருந்தார் கொலு….(74)

அய்யன் குளப்பிள்ளை ஆனை முகனார்க்கு
பையனாய் வாழ்ந்த பழனிசாமி -மெய்யன்பு
பூண்டு ரமண பணியே பலனாக
ஆண்டிருபத் தோரிருந்தார் அங்கு….(75)

ஆன்மா ருசிகண்ட ஆனை ரமணர்க்கு
ஊண்மா ருசியொழிந்து ஓய்ந்ததால் -வான்மேவும்
ஊட்ட அமிழ்தையும் உண்பார் அடியார்தம்
கூட்டான் சோறில் கலந்து….(76)

கண்ணணைக்கும் ஆர்வமும் பெண்ணைக்கும் ஆசையும்
உன்ணிணக்கம் சோற்றில் உழலுவதால் -சொன்னார்(அன்னமய)
அழகாய் குமர குருபரர் கூற்றைப்
பழக பகவான் பிறப்பு….(77)

விடாக்கண்ட அய்யரென்ற வேங்கட ராமன்
தொடாக்கண்டு அன்னத்தை , பேச்சு -கொடாக்கண்டர்
‘’வேங்கட ராமன் திருச்சுழி’’ என்றெழுதி
ஆங்கிலத்தில் வைத்தார் அவர்க்கு….(78)

குருமூர்த்தம் ஆண்டி ஒருமுகூர்த்தம் ஆண்டார்
வரும்கூட்டம் வானாய் விரிய -அருகிருந்த
தோப்பில் தனிமையைத் துய்த்தார் தனிமரமாய்
தாப்பாள் தவத்தைத் திறந்து….(79)

பரத்தை அறிந்த பகவான் ரமணர்
மரத்துப் பரணில் மறைந்து -புறத்தை
மறந்து வசித்தார் மலையாள சீடர்
புரிந்த பணிவிடை பார்த்து….(80)

மத்யான வேளையில் மாந்தோப்(பு) இனிமையில்
அத்யந்த சீடன் பழனிசாமி -அத்யாத்ம
ராமா யணத்தை ரசிக்க, மலையாள
நாமா வளியுணர்ந்தார் நன்கு….(81)

மதுரையில்
————–
எங்கெங்கு தேடியும் வெங்கட ராமனின்
தங்குமிடம் காணாத தாயார்தன் -சங்கடத்தில்
சோர்ந்த சமயத்தில் சஞ்சீவி போலங்கு
சேர்ந்தவர் சொன்னார் சுபம்….(82)

ராவண நானொழித்து கோவண ஆடையில்
சாவன மெய்யடக்கி சாந்தத்தில் -மேவிட
மாமரத் தோப்பில் மாதவனாய் வேங்கட
ராமனைக் கண்டேனென் றார்….(83)

அருணை
———-

சித்தப்பா நெல்லையப்பர் சோணையில் கண்டது
சித்தப்பன் ஆன்மனின் சிந்தையாய் -எப்போதும்
எங்கும் இருப்பதை இங்கே இழுத்தான்ம
சிங்கத்தோல் போர்த்திய சிசு (or) சேய்….(84)

மதுரையில்
————-

தவமென்ன செய்தனை தாயழ கம்மே
சிவனன்ன சேயை சுமக்க -அவனிருப்பு
எல்லையிலா ஆன்மாவின் ஏகாந்த ஊரிலென்று
நெல்லையப்பர் சொன்னார் நெகிழ்ந்து….(85)

மகனெனப் பார்த்தேன் மகானாகப் பார்த்தான்
புகழாய் இருக்கானுன் பிள்ளை -தகவலை
மைத்துனர் சொன்னார் மதுரை மதனிக்கு
பொய்த்தது தாயெதிர் பார்ப்பு….(86)

அருணையில்
————–

பிச்சை எடுக்க பிராமண சாமியை
லஜ்ஜை தடுத்திட லேசாக -முச்சந்தி
வாசியாய் கையேந்தி ஊசிய கஞ்சியை
நாசிமுகர நானொழித்தார் நன்று….(87)

உண்டு முடித்து உதறி கரங்களை
சிண்டில் தடவிவெகு சந்தோஷமாய் -பண்டிதர்கள்
வந்திருக்க சக்கர வர்த்திபோல் சந்திப்பார்
தன்செருக்கை வென்று திமிர்ந்து….(88)

பேசா மடந்தை பகவானை ஈசான்ய
ஆசான் மடாதிபதி அன்போடு -வா,சாமி!
தட்டாதே என்று தலைவாழை போட்டளித்தார்
கட்டாய பிட்சை கொடுத்து….(89)

மதுரையில் வந்த மரண பயமாம்
புதிரவிழ்ந்து ஆன்மா பதிலாய்க் -குதிர
எமாதி கணங்கள் எதிர்வர அஞ்சும்
சமாதியில் நின்றார் சுகித்து….(90)

வந்த அனுபூதி தந்த அமைதியில்
எந்த சாதனையும் ஏற்க்காது -தந்தை
அரனார் அகநானூற் றில்மூழ்கி விட்டொழித்தார்
புறநானூ ரில்வாழ் பிறப்பு….(or)
அரனக நானூற்றில் ஆழ்ந்தவர்க்கே விட்டார்
புறநானூ ரில்வாழ் பொறுப்பு….(91)

இடைச் செருகல்
——————-
கண்ணன் கதைக்கு கிடைத்த சுகமுனிபோல்
அண்ணல் பகவான் அவதார -எண்ணத்தை
நால்வருணம் தாண்டிய பால்பிரண்டன் தீட்டினான்
நூல்வடிவில் நானார் நிகழ்வு….

கலப்பிலா ஆன்மக் கலப்பற்று ஊறும்
உலப்பிலா ஆனந்தத் தேனை -அலுப்பிலா(து)
உண்டு களித்தவரை ஊர்மக்கள் மொய்த்திட
கொண்ட குகன்பவழக் குன்று….(92)

ஈரைந்து மாதம் இடுப்பு வலியேற்று
பாரம் தனைசுமந்து பெற்றவள் -சீரைந்து
ஈசன் மலைமுடியில் ஆசை மகனிவரின்
வேஷம் தனைக்கண்டாள் வேர்த்து….(93)

சுருட்டையில் கண்ணன் சிகையொத்த ராமன்
பரட்டையில் இன்று பகவான் -இருட்டை
பகலாக்கும் தெய்வ மகனாக ஏற்க
இகலோக தாய்க்கோ இருள்….(94)

அழுதாள் அடம்பிடித்தாள் அங்கிருந்தோர் காலில்
தொழுதாள் அழைத்தாள் துணைக்கு -எழுதிடும்
ஏதேனும் என்றுரைத்தார் காதோரம் பச்சையப்பர்
மாதா மனம்குளிர மாற்று….(95)

பெற்றெடுத்த தாய்மல்லும் பச்சையப்பர் வாய்ச்சொல்லும்
முற்றும் துறந்த முனிவரை -சுற்றிவர
புன்முறுவல் பூத்து பகவான் எழுதினார்
பின்வரு மாறு பணித்து….(96)

பகவான் உவாச
—————-

சுவரென்ற சக்தி சுழற்றித் திருப்பும்
கவணெறி வேகத்தில் கர்மம் -அவரவர்
ப்ராரப்தம் என்று பணிந்தேற்றுக் கொள்வீர்
வேறர்த்தம் எல்லாமே வீண்….(97)

நடவாத ஒன்றை நமது முயற்சி
நடத்தா ததுபோல் நிகழ்வும் -தடையாய்
எவனென செய்தும் எழுவது திண்ணம்
மவுனக் கிடக்கையே மட்டு….(98)

செயல்புரியும் மோகம் ,செயல்பலன் தாகம்
அயலாக எண்ணல் தியாகம் -வயலாம்
விசாரம் விடுத்து விழலான வாழ்வின்
அசாதா ரணத்திற்க்கேன் அப்பு….(99)

சிந்தை விளையாட்டு செப்ப வினையாகும்
விந்தையாம் ‘’ நானார்’’ விசாரணை -வந்ததோர்
ஆணவத்தைக் கூண்டில் அமர்த்தி வினவிட
நானவஸ்த்தை ‘’நான்’’என்பான் நைந்து….(100)

மாயநான் மார்பில் மணிகட்ட பூனையாம்
தூயநான் தோன்றிடும் தூண்பிளந்து -சீயமாய்
ஆன்மா அதற்கிரை ஆனால் அதுஇறையாய்
‘’நான்’’போன நம்முள் நுழைந்து….(101)

அன்பர்கள் காண்டம்
——————–

தாய்வந்து போனதும் தட்சிணா மூர்த்தியிவர்
வாய்திறந்து கண்டார் வெளியுலகை -போய்தினமும்
பிட்சை எடுத்துண்பார் போதிப்பார் அன்பர்க்கு
கொச்சை மழலையில் குரு….(102)

விருபாட்சி தேவமுனி வீற்ற குகையில்
அரசாட்சி செய்யவந்த அமலர் -திருநீற்றால்
அங்கிருந்த மேடையில் லிங்கப் பிரதிஷ்டை
தங்கக் கரங்களால் தொட்டு….(103)

விதேகமுக்தி கண்ட விருபாட்ஷ தேவர்
அதேகணத்தில் தற்சோதி ஆகி -சதாசிவத்துள்
பாய்ந்த குகையில் பதினேழு ஆண்டுகள்
வாழ்ந்த விருந்தினி வாய்க்கு….(104)

அன்பர்கள் கூட்டம் அதிகரிக்க கட்டணம்
வம்பர்கள் வாங்க விரும்பாத -நம்பவர்
வேறுயிடம் செல்ல விருபாட்ஷி தேவனில்லா
தேரடியாய் மாறவசூல் தீர்வு….(105)

நானை ஜெயித்தவர்க்கு சேனை பரிவாரம்
பானை பிடித்த பழனிசாமி -பூணும்
அணிகலன் கோவணம் ஆஸனம் பாறை
முனிகணமும் நாணுமிவர் முன்….(106)

வீதி எறிந்த வெறும்தாள்கள் சேகரித்து
ஆதிகுரு சங்கரர் ஓதியதை -ஆதரித்த
சீடனுக்கு தட்ஷிணையாய் சீர்மலை யாளத்தில்
ஏடெடுப்பார் ஏழ்மையை ஏய்த்து….(107)

வாய்ஜபம் இல்லை வழுத்தலில்லை ருத்ராஷக்
காய்முகம் இல்லை கழுத்தில்,மான் -பாய்விரிப்பும்
இல்லை படுக்க இருந்தும் பரசிவ
எல்லைக்கு காவல் இவர்….(108)

மனத்திருடன் கையில் கனச்சாவி தந்து
எனக்கென்ன என்றிருந்த ஏழை -தனிக்குகை
இல்லத்தை மூடிவிட்டு செல்வமாம் ஞானமொடு
செல்வாராம் பிட்ஷைக்கு சேர்ந்து….(109)

கொள்ளைநோய்க் காலம் குடிபுகுந்தார் பச்சையம்மன்
பிள்ளையாய் கோயில் பிரகாரம் -வெள்ளமாய்
காவல் துறைக்கு கொடுத்ததை கொண்டவர்க்கு
சேவகம் செய்தார் சமைத்து….(110)

பங்கிட்டு உண்ண பிளேக்நோயால் அன்பர்கள்
அங்கிட்டு செல்வதற்கு அஞ்சியதால் -வெங்கிட்டு
ராமன்போல் உண்ட ரமணர் உடல்தேறி
பீமன்போல் கொண்டார் பலம்….(111)

பிணித்தொல்லை நீங்க பின்னர் பிறவிப்
பிணித்தொல்லை நீங்க பகவான் -கனிச்சொல்லை
ஆசையாய் கேட்கவரும் அன்பர்க்காய் மேற்கொண்டார்
பேசும் விரதத்தைப் பூண்டு….(112)

ஒன்றான ஞானம் ஒருநாளும் மாறாது
கொன்று மனதைக் கொளுத்தியபின் -என்றார்
மவுனம் கலைத்த மகரிஷியைக் கேட்க
கவனம் கலையா சிவன்….(113)

ஆனைவரும் முன்னே மணியோசை யாம்போலே
நானறிந்த நம்மவர்க்கு முன்னமே -சோணையில்
சென்றலைந்த சேஷாத்ரி சாமிகள் உற்சவராம்
குன்றமர்ந்த மூலவர்க்கு காப்பு….(114)

தாயார் மரகதம் தந்தை வரதராஜர்
சேயாய்ப் புவிவந்த சேஷாத்ரி -மாயா
அருள்சக்தி அம்சமெனில் அன்பே சிவத்தின்
பொருளாம் ரமண பொருப்பு….(115)

நடைபாதை பொம்மை நவநீதக் கண்ணன்
கடைகாண சேயிவர் கேட்க -தடையின்றி
தந்ததும் பொம்மைகள் தீர்ந்ததாம் விற்றுப்போய்
அந்தக்கை தங்கக்கை ஆச்சு….(116)

காசெறிந்து வீச கடைபுகுந்த சாமியை
பேசா(து) எஜமானர் பார்த்திருப்பார் -மாசறு
தங்கக்கை தொட்டு துலக்கியபின் தந்ததை
அங்குண்பார் நாயோ(டு) அமர்ந்து….(117)

எதிர்படுவோர் எண்ணம் எடுத்துரைக்கும் சாமி
புதிர்பட மாந்தோப்பில் பார்த்தார் -‘’குதிருக்குள்
அப்பன் இருக்கானா ? அப்படி என்னதான்
இப்பயல் உள்ளத்(து) இயல்பு’’….(118)

தன்னுணர்வு பெற்ற தவசீலர்க்(கு) எல்லாமே
மண்ணில் பிரம்ம மலர்ச்சியென்று -சொன்னதாம்
அன்னைக்கு கூடல் அறிவுரையாய் காஞ்சிக்கு
அன்னைக்கு சேயாய் அமைந்து….(119)

‘’ என்னமோ சொல்றே எனக்கொண்ணும் தோணல
பண்ணுவேன் பூஜை புனஸ்காரம்’’ -சொன்னபின்
சேஷாத்ரி போட்டாராம் சாஷ்டாங்க சேவிப்பு
மீசையில் மண்ணாய் மலைக்கு….(120)

ரமணர் மனவாசி ராமசாமி அய்யர்
சமணமிட்டு கேட்கையில் சொன்னார் -சமனமிவர்
சேஷாத்ரி சிந்தையுள் சித்தராம், பித்தராய்
வேஷாத்ரி சேட்டை வெளிக்கு….(121)

சேஷாத்ரி சாமிகள் சித்தி தினத்தன்று
ஆசான் அருகிருந்தார் அஞ்சலியாய் -நேசமிது
நட்புறவா ? நன்றியா ? நல்லுணர்வா ? நாமறியோம்
கட்புலன்கள் நீத்தார் கடன்….(122)

தாளா வயிற்றுவலி தான்தீர தென்பழனி
வேலா யுதன்மீது வர்ஷித்த -பாலாக
உண்டர்த்த நாரி உடல்தேறி கந்தனின்
தொண்டர்த்தம் கண்டார் தெளிந்து….(123)

தீவனம் தேடிடும் ஆவினம்போல் அர்த்தநாரி
மேவினார் அண்ணா மலைப்புரத்தில் -கோவணம்
பூண்ட மகரிஷி வேண்டிய தென்பழனி
ஆண்டவனாய்க் காட்சிதந்தார் அங்கு….(124)

வந்தார் ரமணவழி வள்ளிமலை சாமிகள்
சந்தத் திருப்புகழை சன்னதியில் -அந்தநாள்
அர்த்தநாரி கூற அதைபகவான் கேட்டவர்க்கு
அர்த்தமூற வைத்தார் அகத்து….(125)

கூடி கிரிவலம் பாடி வருகையில்
வேடச்சி காவல் வகுப்பினை -வாடி
பசியுற்ற பக்தர்க்காய் பின்வரு மாறுரைப்பார்
ருசியாய் ரமணர் ரசித்து….(126)

‘’எந்தெந்தா காவலனே ஏமேமி காவலனே’’
சுந்தரமாய் ஸ்ரீபகவான் செப்பிட -மந்திரம்போல்
இட்டிலி காவலனே கம்பளிச் சாமிசொல்ல
சட்டினியும் வந்ததாம் சேர்ந்து….(127)

நேச ரமணர்த்த நாரியை போவென்றார்
ஆசிரமம் விட்டு அடிவாரம் -ஈசனின்
இட்டமென்று போய்க்கண்டார் குட்டையில் சேஷாத்ரி
கட்டிய வாறெருமைக் கன்று….(128)

செங்கமல சேஷாத்ரி சேற்றில் புரண்டெழுந்து
அங்கர்த்த நாரியைஆ ரத்தழுவ -எங்கெங்கும்
வந்ததாம் சந்தன வாசம் திருப்புகழாய்
எந்தரோம கானுபா வுலு….(129)

சொச்சநச்சம் இல்லாது சொந்தங் களையிழந்த
எச்சம்மா பாட்டி எஜமானர் -இச்சரிதை
ஞானிக்கும் அங்கே தியானிக்கும் அன்பர்க்கும்
வாயினிக்க இட்டாள் விருந்து….(130)

கட்டிய கோவணமாய் கைகளில் செங்கல்லாய்
கட்டுமான வேலையில் கண்டவரை -கிட்டவந்து
‘’கூலி!சொல் சாமியெங்கே?’’ கேட்க பகவானும்
கேலியாய் செய்தார் குறும்பு….(131)

எல்லாம் அறிந்தவர் சொல்லாமல் சொன்னாராம்
நல்லாப்போய் தேடிடுவீர் ‘நான’னறிய -பொல்லாத
இச்செய்கை ஏனென்ற எச்சம்மா கேள்விக்கு
அச்சாரச் சொற்கள் அடுத்து….(132)

‘’நானொழித்த நானேபோய் நான்தான் பகவானென்(று)
ஏன்மொழிய வேண்டும்சொல் எச்சம்மா’’ -வீணன்றோ
நெற்றி யிலெழுதி நாமம் சுமப்பதும்
பற்றென்றார் பாட்டியைப் பார்த்து….(133)

தத்தெடுத்த செல்லம்மா பெத்தெடுத்து செத்திட
வித்ததற்கு நாமம் ரமணனென்று -முத்தரிடம்
கூறிக் கொடுத்திட பேரன் பகவான்கண்
நீரினால் ஞான நனைப்பு….(134)

தொடரும் அமைதிக்குத் தொய்வாம்இக் கண்ணீர்
இடருமக்கு எப்படி என்றோர்க்(கு) (or)
இடரருளை நீக்காதா என்றோர்க்(கு) -உடனே
மடையா! அருளிங்கு மாபெரும் அன்பு
அடைக்கும்தாள் இல்லை அதற்கு….(135)

வினைகள் பயனாய் விளைவது கர்மம்
அணைப்பும், அடியும் அதனால் -நினைத்திருப்பாய்
ஈசனை நன்றியாய் இவ்வாழ்வில் வெல்வோம்நாம்
வாசனை போக்கு வரத்து….(136)
முப்பத்தெட்(டு) ஆண்டுகள் மூதாட்டி எச்சம்மா
உப்பையுண்(டு) ஆண்டார் உடல்பகவான் -இப்பணிக்கு
ஈடாம் சபரி இராமனுக்கு செய்தது
வீடுற்றாள் தொண்டால் விரைந்து….(or)
வீடாம் பதவிகிழ விக்கு….(137)

சொத்தினை விற்றதில் சேர்த்த பணம்நூறு
உத்தண்டி யார்குரு தட்ஷிணையில் -புத்தகமாய்
செந்தமிழில் சங்கர சூடா மணிபதிப்பு
தன்கரத்தால் செய்தார் தவம்….(or)
தன்கரத்தால் செய்தார் தொகுப்பு….(138)

காட்சிகள் ,காணும் கருவிழிகள் ,காணுதல்
ஆட்சியில் சிக்காத ஆண்மகன் -சாட்சியாய்
சந்திப்போர் புந்தியில் சிந்தித் தவருள்ளம்
வந்திக்கும் தெய்வமா வார்….(139)

காத்மண்டு பாண்டே கருவறை லிங்கத்தில்
ஆத்மார்த்த அண்ணல் அருள்முகத்தை -பார்த்தவர்
நூற்றுக் கணக்கில் நிமலர் சிரித்தவண்ணம்
தோற்றம் கொடுக்கத் திகைப்பு….(140)

சாத்திர வாரிதி சம்ஸ்கிருத சாகரம்
பாத்திரம் பொங்காத பாற்கடல் -நாத்திறன்
காவிய கண்டர் கணபதி சாஸ்திரி
சாவிலான் பாதம் சரண்….(141)

விருபாட்ஷிப் பொந்தில் வினாயகர் போன்ற
சொரூபத்தைக் கண்டகண்டர் சொன்னார் -அருளாட்சி
முக்காலம் செய்யும்இக் கோலம் கணேசர்
சுக்லாம் பரதரம் செப்பு….(142)

வெள்ளை அரைத்துணியில் பிள்ளை பிரம்மமாய்
விள்ளல் நிலாவின் வசீகரத்தில் -உள்ளோன்
மனம்புத்தி, சித்தம், மமகாரம் நான்கை
இனம்கண்டு வென்றோன் இவன்….(143)

பாதாதி கேசமாய் வேதாந்தம் பார்த்திருந்தும்
ஆதார குண்டலினி ஆஸ்ரயித்தும் -மேதா
விலாசத்தால் ஆசுகவி விற்பன்ன ராயும்
கலாசித்தர்க்(கு) இல்லை களிப்பு….(or)
கலாசித்தர் நெஞ்சில் குறை….(144)

காண்டீபர் காவிய கண்ட கணபதி
வேண்டினார் கண்ண பகவானை -ஆண்டவா
ஏட்டுச் சுரைக்காய்நான் ஏகப் பழம்பொருள்நீர்
காட்டும் கனியுதிர் கா….(or)
காட்டும் கனியாகும் கற்பு….(145)

ஜபதபம் செய்தேன் சபைதனில் வென்றேன்
உபமானம் இல்லா(து) உயர்ந்தேன் -அபலையாய்
கெஞ்சினார் கண்டர் கருணைக் கடலிடம்
விஞ்சும் தவப்பயனை வீழ்ந்து….(146)

பகவான் உவாச
—————

நானென்ற ஓசை நவில்வது யாரென்று
ஊணுறக்கத் திற்க்கீடாய் உன்னிப்பாய் -காணென்றும்
ஒன்றிவிடும் உள்ளம்நான் ஊறும் இடத்தினில்
மன்றமது மெய்த்தவக் குன்று….(147)

விழிப்பு, கனவு, விழுங்கும் சுழுத்தி
கழிக்கும் அதுவே’நான்’ காண்பாய் -உழைப்பாய்
உடலான்ம பாவம் ஒழிக்கும் விதத்தை
அட!ஆன்மத் தேடல் அதற்கு….(148)

வெட்டியான்போல் நின்று விசாரணைக் கோல்கொண்டு
சுட்டும் எழும்பும் சவமனம்மேல் -பட்டென்(று)
அடித்திட ‘நானும்’ அடித்திடும் ‘நானார்’
தடிக்கொம்பும் சாம்பலாம் தீக்கு….(149)

மந்திர ஓசையுள் ளெங்கிருந்து தோன்றுதென்று
எந்திரமாய்ப் பார்க்க எழுவாய்க்குள் -வந்தடங்கும்
உந்தன் மனது ஒடுங்கிட மிஞ்சிடும்
விந்தை மவுனம் விளைந்து….(150)

ஆடி அசைந்திடும் ஆனை துதிக்கையாய்
நாடிச் சலித்திடும் நம்மனப் -பேடிக்கு
சங்கிலியாய்த் தந்திடுவீர் சத்வ குணங்களை
பொங்கியெழும் பாரான்மா பூத்து….(or)
அங்கொளிரும் ஆன்மா அலர்ந்து….(151)

உப்புபுளி காரம் உணவில் தவிர்த்திடுவாய்
செப்பிறைவன் நாமம் , சரணென்று -ஒப்படைப்பாய்
உன்னையொரு மூர்த்தியிடம் உள்ளே தியானித்து
தொன்னைமனம் நெய்யான்மா தொப்….(152)

காவிய கண்டர் கருணைக்கை தூரிகையால்
ஓவியம் போலவர்முன் உட்கார்ந்தார் -மேவிய
சந்தேகம் ஓய்ந்திட சஞ்சலம் மாய்ந்திட
தன்தேக பாவம் தொலைப்பு….(153)

இராமனம் வென்று மராமரம் போல்வாழ்
பிராமண சாமிபெயர் சீடர் -சிறாருரைக்க
வேங்கட ராமனுக்கு வேறுபெயர் கண்டரிட்டார்
ஈங்கிவர் ஸ்ரீரமணர் என்று….(154)

திருவொற்றி யூரில் தவமிருந்த போது
உருவொத்து வந்த ரமணர் -சிரமொத்தி
தன்சாரம் தீட்சையாய் தந்தாராம் கண்டர்க்கு
மின்சாரப் பாய்வு முனிக்கு….(155)

சுமாரோர் மாதத்தில் செய்ய நினைத்தகண்டர்
உமசஹஸ்ரம் பெய்தாரோர் நாளில் -தமாஷாக
‘’என்ன கணபதி சொன்னது போதுமா’’
கண்சிமிட்டிக் கேட்டார்சத் குரு….(156)

பச்சையம்மன் கோயில் பகவான் இருக்கையில்
உச்சிமுகர்ந்து சென்றதாம் நட்சத்திரம் -இச்சரியை
ஆறுமுறை ஆக அங்கிருந்த சாஸ்திரியார்
ஆறுமுகன்தான் என்றார் அடித்து….(157)
விருபாட்ஷி மாடத்து வேழன்மேல் வெண்பா
உருவாச்சு ஓர்நாள் பகவான் -திருவாக்கால்
வேடிக்கை வெண்பாவை பாடி கணபதிக்கு
கோடிட்டுக் காட்டியதைக் கேள்….(158)

பகவான் சொன்ன வெண்பா
—————————

பிள்ளையாப் பெற்றவனைப் பிச்சாண்டி யாக்கியெங்கும்
பிள்ளையாப் பேழ்வயிற்றைப் பேணினீர் -பிள்ளையான்
கன்னெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண்பாரும்
பின்வந்தான் தன்னைநீர் பெற்று….(159)

மாடத்துப் பிள்ளையே வேடன் விருத்தனாம்
நாடகத்தில் நீரண்ண னானீர்காண் -பூடகமாய்
அன்னைக்(கு) அறிந்தனை பின்னை மறந்தனை
தொன்னைக்குள் நெய்யான தால்….(160)

பெற்றதனால் ஆயபயன் பாமர ஞானிக்கு
கற்றுக் கொடுத்தார் வடமொழி -முற்றும்
மறந்தகுரு சீடனை மிஞ்சினார் நூல்கள்
பிறந்தமொழி தன்னில் பெயர்த்து….(161)

உபாசித்த வித்தை உடலை வதைக்க
கபாலம் அனலாய் கொதிக்க -ப்ரபோவென்று
கூவிட கண்டருச்சி தீவிடும் குண்டலினி
தாவிட வைத்தாராம் தொட்டு….(or)
தாவிடச் செய்தார் தணித்து….(162)

ஆன்மீகம் தாண்டிய ஆத்மார்த்த கேள்விக்கு
வான்மேகம் போல்பதில் வர்ஷிக்க -‘’நான்’’மீக
பாதையைக் கண்டர் பதிவெடுத்து ஸ்ரீரமண
கீதையாய் செய்தார் குறித்து….(163)

சிவப்பிர காசமென்ற சைவத்துப் பிள்ளை
தவப்பிர காசத்தில் தோய்ந்து -உவப்புற
தானார்வக் கேள்விக்கு தந்த பதில்களால்
‘’நானார்’’நூல் தோன்றியதன் நாள்….(164)

ஈரேழு கேள்விக்(கு) இவர்பதில் சொல்கையில்
ஈரேழு ஏழாம் இவர்வயது -மாறாத
மோனத் திருந்த மகானன்று மண்ணிலே
மோனத் திருந்த மகானன்று மண்ணளைந்தார்
ஞானத்தைக் கோலமிட்டார் நன்கு….(or)
ஞானத்தைக் கோலம் இழைத்து….(or)
ஞானத்தைக் கோலம் நுழைத்து….(165)

பிள்ளைக்குக் கல்யாணப் பிள்ளையாய் மாறிடும்
கள்ளம் கருத்ததிவர் உள்ளத்தில் -வெள்ளை
முனியிடம் கேட்க முனைந்து வருகையில்
வினையிடம் விட்ட(து) இனி….(166)

நூற்றுக் கணக்கில் நிலவொளி வீசிட
தோற்றம் ஸ்படிகத் திரளாக -சீற்றப்
பிரகாச ஜோதி பகவானாய்க் கண்டுசிவப்
பிரகாசம் கொண்டார் ப்ரமிப்பு….(167)

பேரின்பம் கண்டதில் பிள்ளைவாள் மாறினார்
வேறின்பம் வேண்டாம் ரமணரடி -யாரின்பம்
போலுலகில் இல்லையென்று பெற்ற அனுக்கிரக
நூலகவல் தந்தார் நிறைந்து….(168)

பிணிவாசி ஆன மனவாசி அய்யர்
குணவாசி ஆக குகையில் -மனவாசம்
விட்டான்ம மேடையில் வீற்றோனை வேண்டினார்
கட்டாயம் காப்பாற்றக் கேட்டு….(169)

தயிர்சாதம் ,சுண்டல், புளியோ தரையை
வயிறுவாத அய்யரின் வாயில் -துயர்நீங்க
போட்டு விரட்டினார் வாட்டும் வயிற்றுவலி
ஆட்டம் முடிந்ததாம் அன்று….(170)

தீர்த்தர் வயிற்றுவலி தீர்த்தபின் அய்யர்க்கு
கீர்த்தனைகள் கற்றுக் கொடுத்தாராம் -ஈர்த்தவர்
சீனியுண்ண தந்தாராம் சம்பளமாய் சங்கீதம்
ஞானியவர் நேசம் நெகிழ்வு….(171)

கதராடை பூண்ட காந்திய வாதி
பதறாது பக்த்ர்க்(கு) உதவும் -இதவாதி
ராமனாதன் ராமன் ரமணர்க்(கு) அனுமனாம்
சாமதான பேததண்ட சாது….(172)

ராமனாத ப்ரம்மசாரி ராத்திரி பகலாக
தாமுகந்து நூற்பாராம் தக்களியில் -கோமணமாய்
தேசூரின் மஸ்தானிடம் தைக்கக் கொடுப்பாராம்
ஆசான் மகிழ்வார் அணிந்து….(173)

அருணா சலம்பிள்ளை ஆக்கன்(று) இரண்டை
ஒருநாள் கொடுக்க ரமணர் -முரணாக
ஆ!சிரமம் சொல்லாமல் ஆசிரமம் ஏற்றதாம்
ஆசிரம ராமனாதர் அன்பு….(174)

ஈன்ற பொழுதின் பெரிதுவந்தாள் லட்சுமிதாய்
சான்றோன் பகவான்பால் சேர்ந்ததால் -தோன்றின்
புகழோடு தோன்றும் பசுவுக்கு ஞானி
புகலாக வாழ்ந்தார் பிறகு….(175)

ஆங்கிலேய ஹம்ப்ரீஸ் அமானுஷ்ய ஆர்வமுற்று
தூங்கிட சொப்பனத்தில் தோன்றியதாம் -ஆங்கொரு
குன்றும், குளமும், குகையும், குருவொருவர்
நின்று தவமாய் நிலைப்பு….(176)

கண்ட கனவினை விண்டு வரைந்தவர்
தொண்டர் நரசிம்மய் யாகுரு -கண்டருக்கு
ஓவியத்தைக் காட்ட உடனழைத்துச் சென்றாராம்
காவியத்தைக் காட்ட குகைக்கு….(177)

‘’உன்னையவர் பார்க்கையில் உன்கண் இருக்கட்டும்
அன்னையவர் பார்வை அகலாது’’ -சொன்னமுனி
தெம்பளிக்க தெய்வத்தின் அன்புவிழி ஆனந்தம்
ஹம்பரீசின் வாக்கில் அடுத்து….(178)

ஆழ்மன ஆற்றல் அவர்கண் வழியாக
ஊழ்கண வெள்ளத்(து) உவமையாய் -சூழ்ந்திட
மெய்யது கோயிலாய் தெய்வம் சுடர்விட்டு
உய்வதைக் கண்டேன் உணர்ந்து….(179)

நானார் விளக்கம் நமக்கே புரியாது
ஆனாலும் சேய்கள் அவர்முன்பு -தூணாக
ஆழப்புதைந்து காக்கும் அமைதியில் கண்டுகொண்டேன்
வாழுமவர்க்(கு) இல்லை வயது….(180)

பெண்ணழகு பூவழகு என்பர் பகவானின்
புன்னகையைக் காணாத பேதைகள் -என்மனம்
மட்டும் அறிந்ததோர் மர்மத்தைக் கூறினார்
பட்டென்(று) எனதுள்ளே பாய்ந்து….(181)

புத்தகத்தில் பாம்பாய் புகுந்து பிறரெண்ணம்
புத்தகமாய்ப் பார்த்துப் படிக்கவல்ல -புத்தரவர்
ஹம்ப்ரீஸ் வினவிட அன்போ(டு) உரைத்ததினி
எம்பிரான் வாக்காய் எழுத்து….(182)

பகவான் உவாச
——————

ஞானம் நிரந்தர கானம் குழந்தைக்கு
ஏனென்றால் ‘நானங்’(கு) எழவில்லை -பேணிடுவீர்
பிள்ளைப் பருவத்தை பேசா விருப்பத்தை
வெள்ளை மனதை வலிந்து….(or)
உள்ளின் உவப்பை உகந்து….(183)

உனக்குதவும் செய்கை உலகளாவும் சேவை
பிணக்கிதில் நீவேறாய்ப் பாரை -நினைப்பது
ஆன்மாவில் ஒன்றிட ஆளே(து) உதவிட
வீண்பேதம் காணல் விலக்கு….(184)

கண்ணனும் ஏசுவும் பண்ணிய அற்புதங்கள்
என்னளவில் ஆகுமா என்கிறீர் -முன்னமவர்
செய்யவந்த செய்கையை செய்வதாய்ச் செய்யவில்லை
கைவந்தோர்க்(கு) ஈதியற்கை காண்….(185)

சித்தி வலைதனில் சிக்கிடாது நீந்திடுவாய்
சத்திய மெய்ஞான சாகரத்தில் -உத்தியாய்
பூரண சரணத்தில் பூத்திருப்போர்க்(கு) இல்லைகாண்
காரண காரியக் கட்டு….(186)

மனவிளிம்புக்(கு) அப்பால் மனமுவந்து சென்று
குணமளிக்கும் ஆன்மாவில் கூடு -நினைவளிக்கும்
புத்தியோடு நில்லாமல் சத்தியத்தைப் பார்த்திட
கத்தி விசாரணையால் கொத்து….(187)

சூதாடி உள்ளமதன் மீதாடும் எண்ணமுடன்
வாதாடி மாய்த்துமனம் வென்றிடுவாய் -ஆத்தாடி
சித்தம் சிவமாகும் பித்தம் பிணமாகும்
அத்தை உரைத்தல் அறிது….(188)

கும்பிடும் தெய்வம் கிருத்துவோ கண்ணனோ
நம்பிட நாமதுவாய் எம்பிடுவோம் -என்பதற்கு
மாதிரியாய் வாழ்ந்த மகான்விடை பெற்றகன்றார்
பாதிரியாய் ஹம்ப்ரீஸ் பணிக்கு….(189)

சிவய்யாவும் மற்றும் சிலரே இருந்த
அவைக்குள் நுழைந்ததும் அங்கு -தவய்யா
நேரவர் உட்கார்ந்தார் நேரம் ஒருமணி
யாரவர் பாரதி யார்….(190)
அங்கிருந்த போது அறியார் ரமணரவர்
பொங்குதமிழ் ஞானப் புயலென்று -எங்கிருந்தோ
வந்தார் ,இடைச்சாதி நானொழித்த ராமனுக்கு
தந்தார் அணிலாய்த் தமிழ்….(191)

வாழ்க மஹரிஷியார்,வாழ்க பாரதியார்
வாழ்க தமிழ்த்தவ வல்லார்கள் -வாழ்க
திருவருணைக் குன்று திருவல்லிக் கேணி
குருவருள் கொஞ்சுதமிழ் காப்பு….(192)

crazy mohan
Aug 29, 2018, 8:27 AM (22 hours ago)
to crazy, bcc: me

Translate message
Turn off for: Tamil
சுந்தர காண்டம்
—————
அருந்தவப் பிள்ளை அருகிருக்க அன்னை
திரும்பவும் வந்தவள் நோயால் -வருந்திட
வேண்டுதல் வேண்டாமை தாண்டியவர் ஆண்டவனை
வேண்டினார் வெண்பா விடுத்து….(193)

பகவான் தன் தாயார் குணமாக
சொன்ன நான்கு வெண்பாக்களில் ஒன்று
————————————–
காலகா லாவுன் கமல பதம்சார்ந்த
பாலன் எனைஈன்றாள் பாலந்தக் -காலன்தான்
வாரா வகையுன்கால் வாரிசமே காட்டுவா
யாராயினும் காலனுமே யார்….(194)
(வாரிசம்-தாமரை)

பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
எதிராக வந்த எமனை -குதிகாலால்
மாய உதைத்த மகாதேவா மைந்தனென்
தாயை அவன்நெருங்கத் தடு….(195)

சாகா வரம்பெற்ற சேயால் உரமுற்று
போகாத தாயாரைப் புண்படுத்த -ஆகாதோர்
‘’இங்கில்லா விட்டால் இடம்வேறு எங்கேனும்
தங்கிடலாம் வாவென்றார் தாய்க்கு’’….(196)

ஆகாதோர் அச்சமுற்று அண்ணல் அடிபணிந்து
போகாதீர் என்று புலம்பிட -த்யாகேசன்
ஆதரிக்கத் தானே அமர்ந்துள்ளேன் நானென்றப்
போதுரைத்தார் புன்முறுவல் பூத்து….(197)

முன்காவி சங்கரர் பின்கரும்பு பட்டினத்தார்
தன்தாயார்க்(கு) ஈமத்தீ தந்தனரே -என்கோவில்
பாசமிகு அன்னை புழங்கும் இடமென்றார்
கோசல ராமனாய்க் கோன்….(198)

அன்னைக்கு மிக்கதோர் ஆலயம் ஏதுதந்தை
சொன்னசொல்லுக்(கு) ஈடாய் சுருதியுண்டோ-பின்னர்
பிதாவுக்குப் போடாத பிட்ஷையை ஏற்க
கதாபுருஷன் கொண்டார் கடுப்பு….(199)

ராமனாத சாமி ரமணபிட்ஷை ஆனபின்பு
தாமதமாய் தந்தைக்(கு) உணவளிப்பார் -கோமணத்தார்
அப்பனுக்கு இட்டபின்பு அப்புறம் மீந்ததையிச்
சுப்பனுக்கு போடென்றார் சோறு….(200)

அப்பனாய் லட்ஷணமாய் அன்பு மகள்பசிக்கு
உப்பிடாத உன்ஞானம் எப்பவும் -தப்புடா
சுப்புரா மய்யா சிசுதெய்வ ரூபேண
செப்பினார் சம்சார சத்து….(201)

தலைகாயும் வெய்யில் தரையெல்லாம் முட்கள்
மலைப்பாதை சுற்றும் மடையா -இளைப்பாறி
சும்மா இருந்து சுகம்காண மாட்டாதுன்
இம்மாம் தொலைவு இழுக்கு….(202)

கல்லினில் முள்ளினில் காய்கின்ற வெய்யிலில்
பிள்ளைநீ வந்தது பேதமை -சுள்ளி
பொறுக்கும் கிழவி உருவத்தில் வந்து
பொருப்புத் தகப்பன் உரைப்பு….(203)

திட்டாய் இருந்தாலும் தீக்கண் இறையோனின்
திட்டம் இதுவாய்த் தெளிந்து -மட்டம்
அடித்தார் மலைசுற்றல் அன்றுமுதற்க் கொண்டு
படித்தார் இகத்தில் பரம்….(204)

போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
தொழுத விதம்தான் தவம்….(205)

முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
கீரைக் கிழவியாம் காண்….(206)

வயணமாய் அன்னம் வடித்தஅம் மூவர்
அயனரி தீவாய் நயனன் -பயணமாய்
பூமி உகந்தகுரு சாமிக்(கு) உதவிட
நேமி,நூல், சூலத்தின் நட்பு….(207)

சதியனு ஸூயா துதிசெய்ய ,வந்த
பதிமூவர் தத்தகுரு பாலர் -அதுபோலே
தத்த ரமணருக்கு தாய்மை பரிந்தனர்
பித்தனயர் மால்பாட்டி போல்….(208)

மலங்கா ரமணர் முதலியார் பாட்டி
அலங்காரத் தம்மாவின் அன்பாம் -விலங்கில்
அகப்பட்(டு) இருமுறை அன்னத்தை உண்டு
உகப்பார் அவள்வார்த்தைக்(கு) உற்று….(209)

பானையும் ஒன்று பகவானும் ஒன்றுதான்
ஸ்நானமும் சோறுமதில் ஆனபின் -ஞானமாம்
பானை பிடித்திடும் பாக்கிய சாலியாய்
ஊனைக்கீ ரையாள் உதிர்ப்பு….(210)

பசலையாம் கீரை பகவான் அகத்துக்
குசலமாம் கீரைக் கிழவி -அசலமாய்
நின்றாள் இறந்தும் நிமலர் வளர்த்தஆக்
கன்றாய்ப் பிறந்தாள் கனகு….(211)

பரத இரத்தினம்மா பால முனிக்கு
விரதமாய் சோறிடுவாள் வாயில் -உறுதியாய்
அண்டம் மறந்தமர்ந்து ஆன்மா லயித்ததால்
கண்டம் இறங்காதாம் காற்று….(212)

தாசியா னாலுமவள் ஆசிரம வாசியே
பாசப் படிதாண்டா பத்தினி -ஆசியாய்
ரத்தினம் மாளின் ரகசிய பக்திக்கு
இத்தரையில் இல்லையென்றார் ஈடு….
இத்தரையில் ஈடே(து) இயம்பு….(213)

கம்மாள மீனாட்சி அம்மாள் அதிகாரம்
கும்மாள மிட்டதைக் கூறியவர் -‘’அம்மா!
பகவானை வாழும் பரிதாபம் இந்த
பகவானுக் கேதான் பகல்’’….(214)
(‘பகலை’ வெளிச்சம் என்ற வகையில்
பயன்படுத்தியுள்ளேன்….okதானே….!)

மடிந்தால் மகனுன் மடியில்தான் என்று
கிடந்த அழகம்மை கொண்ட -அடம்தன்னை
பாரா முகமாய் பகவான் இருந்தடக்க
நீராய்ச் சொரிந்தாள் நிலத்து….(215)

அம்மா அழுகைக்கும் ஆகாத் தியத்திற்கும்
சும்மா இருந்தபின் செப்பினார் -எம்மால்
உனக்குமட்டும் சேயாய் உறவாடல் ஆகாது
தனக்கெல்லாப் பெண்களுமே தாய்….(216)

கோசலையாய் ராமன்தாய் கைகே கியைமாற்ற
ஆசிரமம் சேர்ந்தாள் அழகம்மை -தேசுடை
காவி அணிந்துமகன் காரியாம் யாவிலும்
மேவிக் கரமளித்தாள் மாது….(217)

அன்னையன்(று) இட்ட அடுப்புதீ வேள்வியில்
இன்னமும் ஆசிரமம் உண்கிறதாம் -அண்ணனுடன்
தம்பிநாக சுந்தரமும் தங்க நிரஞ்சனனாய்
தும்பிகள் சேர்ந்தனவாம் தேன்….(218)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *