Author: முனைவர் நா.கணேசன்

  • தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

    தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

    இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்:

    https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09

    Meeting ID: 892 6273 2459

    Passcode: 433886    Date: August 19, 2020 @ 5 pm, IST.

    உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்புக்கான தேவைகள் பற்றியும், தொற்றுநச்சுக் காலத்தில் பண முதலீடு (6% of GDP) என்னும் நோக்கம் என்பது வெறுமனே தாளில் மட்டுமன்றி, உண்மையாகவே அரசாங்கம் நிதி ஒதுக்குவது, ஆசிரியர்களை உருவாக்குவது பற்றியும் பேசுகிறேன்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு என்பனவும், முக்கியமாக ஆங்கிலத்தில் உயர் விஞ்ஞானம், மருத்துவம், கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் ஆராய்ச்சிகள் தரம்மிக்க ஜர்னல்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியக் கல்விநிறுவனங்கள் வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆங்கிலத்தை விட்டுவிட்டால் உலக வளர்ச்சி அறியும் ஜன்னல் ஒன்று இந்திய மொழிகள் பேசுவோருக்கு அடைக்கப்படும். மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் அவசியமானவை. மூன்றாம் மொழி கற்க விரும்புவோர் – இந்திய, அல்லது உலக மொழிகள் ஒன்றை – கற்க வசதிகள் ஏற்படவேண்டும். தமிழ் மொழி, தொல்லியல், வரலாறு உலகளாவிய நிலையில் வளரவேண்டும். இப்போதைய துல்லியமான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்தல் எளிது. அதில் அரியனவற்றை தேர்ந்தெடுத்து இணையத்தில் வெளியிடும் நிபுணர் குழுக்களை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

    அண்மையில் கீழடி (மணலூர்) தமிழி எழுத்து, கிண்ணிமங்கலம் சிற்பத்தில் உள்ள தொல்காப்பியர் புள்ளி காட்டும் காலம், சிவகளை போன்ற இடங்களில் வாழ்விடங்கள் கிடைக்க உள்ள வாய்ப்பு, பழைய தமிழ்நூல்களை எண்மப்படுத்தி archive.org போன்ற தளங்களில் லட்சக்கணக்கில் வைத்தல் பற்றிக் குறிப்பிட ஆவல். தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் எழுதும்போது மொழியியலார் குறிப்பிடும் செம்மையான முறையில் எழுதுதலும், இந்திய மொழிகளுக்கும், மக்களுக்கும் பரஸ்பர ஒற்றுமை ஓங்க ரோமன் எழுத்துமுறை (ISO 15919) முறையையும் இந்தியா முழுமையும் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதும், தபால் நிலையம், ரயில்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதும் உதவுவதை மாநில முதலமைச்சர்கள் தில்லி சர்க்கார் மந்திரிகளிடம் வலியுறுத்தல் தேவை.

    தமிழ்மொழி, தமிழ்நாடு தென்னகம், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளியில் தொன்மையான கலை, சமய, சமூக ஆய்வுகள், மரபணு பரிசோதனைச் செய்தி போன்றன நிகழ்த்த இப்பொழுது நாங்கள் அமைக்க முயலும், “ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை” போன்றவை எவ்வாறு உதவும் என்றும் பார்க்கலாம். மதுரைப் பேரா. சத்தியமூர்த்தி, போற்றுதலுக்குரிய பரஞ்சோதி மகான் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் நன்றி. அழைப்பிதழை இணைப்பில் காண்க.

    புதன் மாலைப் பொழுதில் சந்திப்போம்!

    டாக்டர் நா.கணேசன்

    https://archive.org/details/@dr_n_ganesan

    http://nganesan.blogspot.com

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 303: டிம் பெர்னர்ஸ்-லீ

    இந்த வார வல்லமையாளர் என கணிஞர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. இயற்பியல் ஆய்வரான டிம் வையவிரிவலை (World Wide Web) உருவாக்கி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொடர்பு கொள்ள சாதனை புரிய கால்கோள் இட்டவர்.  இணையம் அமைப்பது பற்றிய ஆவணங்களை எழுதி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. வையவிரிவலையின் 30-ம் பிறந்த நாளில், உலகை இணைக்கும் அற்புத சாதனத்தை வடிவமைக்க அடிக்கல் நாட்டிய விஞ்ஞானி ஸர் திம் பெர்னர்ஸ்-லீயை வாழ்த்துவோம். எல்லாக் கணினிகளிலும் இயங்கும் யூனிகோட் எழுதுருக்கள், எந்தத் தகவலையும் தேட உதவும் துழாவி எந்திரம், இதன் பெரிய கம்பெனி ஆக கூகுள், … இவை எல்லாம் ‘வெப்’ என்னும் வையவிரிவலையின் பங்களிப்பு தானே! ஆவணம் ஒன்றுடன் வேறொன்றை இணைக்கும் ஹைப்பர் -லிங்க் எனப்படும் அமைப்பை உருவாக்கி, அதனை ஒரு உலாவி (browser) வழியாகக் காணும் வழிமுறையை இவர் படைத்துத் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் ஒலி, ஒளி, எழுத்து ஆவணங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTP Hypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்குமுறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே. இப்பொழுது சோசியல் மீடியா என்று ட்விட்டர், பேஸ்புக் அதிக அளவில் இந்திய மொழிகளில் பயன்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக வலைத்தளங்கள் போலிச்செய்திகளை வெளியிடுவதிலும், பாலியல் வன்முறைக்கு கருவி ஆகவும் ஆகிவருகிறது. இதனை முளையிலேயே தடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை தான்.

    ஓர் இலக்கியக் குறிப்பு: இணையம் பற்றிப் பேசுகிறோம். நீர்ப் பகுதிகளில் வாழும் பறவைகள் நீந்த வசதியாக அதன் விரல்களுக்கு இடையே இணைந்த ஒரு சவ்வுத் தோல் இருக்கும். இதனைக் கொய்யடி என்பது பழைய தமிழ் வழக்கு. ஆங்கிலத்தில் webbed feet. திவாகரம், பிங்கலந்தை போன்ற நிகண்டுகளில் “குருகு வண்டானம் கொய்யடி நாரை” என்ற சூத்திரம் உள்ளது. இந்த நூற்பாவின் பொருள்: வண்டானமும் (Pelican), கொய்யடிநாரையும் (Flamingo) குருகுப் பறவை வகுப்புகள் ஆகும். குருகு = Water birds. ஃப்லெமிங்கோ எனப்படும் பூநாரைகளின் பாதம் கொய்யடி கொண்டவை. எனவே, பழைய தமிழில் கொய்யடி நாரை என்பது இந்த ஃப்லெமிங்கோ பறவைகளைத் தான். இஃதறியாமல், சென்னைப் பேரகராதி வண்டானம் என்பது கொய்யடி நாரை என்று குறிப்பிட்டுள்ளது. அது பிழை. வண்டானம் என்னும் பெலிக்கன் பறவைகள் நாரை இனம் அல்லவே. டிம் தந்த இணையத்தில் கொய்யடி நாரை என்னும் Flamingo பறவையின் துதிக்காலை பார்க்கலாமே. 

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 302: மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்

    இந்த வார வல்லமையாளர் என மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. 1959-ல் சென்னையில் பிறந்த டாக்டர் சௌமியா, விவசாயத் துறையில் விஞ்ஞானி, பெரிய பொறுப்பில் இருந்த எம். எஸ். சுவாமிநாதனின் மகள் ஆவார். டாக்டர் சௌமியாவின் தாய் மீனாவின் தாய் கிருத்திகா (மதுரம் பூதலிங்கம்) என்னும் பெண் எழுத்தாளர். அகில உலக பெண்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில், சென்னையைச் சார்ந்த தமிழ்ப் பெண் மரு. சௌமியா உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) தலைமை விஞ்ஞானையாகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. அவரை வாழ்த்தி வரவேற்கிறோம். டாக்டர் சௌமியாவின் ட்விட்டர் பக்கம்: https://twitter.com/doctorsoumya

    பெண்கள் இந்தியாவின் அறிவியற் கழகங்களில் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற கொள்கை கொண்ட மரு. சௌமியா காசநோய் (TB), எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவின் பல்கலைக்கழக மருத்துவமனையில் பட்டங்கள் பெற்றவர். இப்பொழுது மரபணு போன்றவற்றின் மூலம், மலேரியா, டிபி, எய்ட்ஸ், புற்றுநோய், இதயநோய், … போன்றவற்றின் ஆராய்ச்சிகள் மிகுந்துவருகின்றன. ஸ்டெம்செல்  ஆய்வு, டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இவற்றுக்கு WHO நிறுவனம் நிதிநல்கையை அதிகப்படுத்தினால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் உடல்நலம் பேணுதற்கு உறுதுணையாக விரைவில் உதவிகள் வரும்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்

    இந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விமானப்படை அதிகாரியின் மகன் திரு. அபிநந்தன். பாகிஸ்தான் படையினரால் சுடப்பட்டு, பாகிஸ்தான் ஆளும் காஷ்மீர் பகுதியில் பிடிபட்ட அபிநந்தன், திரும்பவும் இந்தியா வந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இவர் நாடு திரும்பியதால் இந்தியா – பாகிஸ்தான் போரும் அதனால் ஏற்படும் அழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.

    அபிநந்தன் வாழியவே!

    இந்திய  நாட்டின்   வலிமையைக்  காட்டிட
    எல்லை கடந்தவன்  மீண்டான்!- அவன்
      எழுந்து  பறந்த  விமானம்  வீழினும்
            எதிரியைத்   தாழ்த்திஉ   யர்ந்தான்!

    நொந்திடச்  செய்தவர்  கொடுமைகள்  தாங்கிநம்
         சொந்தச்ச   கோதரன்  மீண்டான்! – அவன்
       நுண்ணறி வுத்திறன்  காட்டியே   வெற்றியில்
           நூழிலா  டும்திறன்  கொண்டான்!

    தந்தையி  னுள்ளம்  பெருமிதம்  கொண்டிட
           மைந்தனாய்த்  தாயகம்  வந்தான்! –  அவன்
        வந்தனன்  எம்அபி  நந்தனன்  என்றே
            வாழ்த்தும்   ஒலியிடை வந்தான்!

    விழித்திடும்  கண்முன்  வேல்பாய்ந்  திடினும்
           அழித்திமைக்  காதவன்   மீண்டான்! – தன்
       தொழிலென  நாட்டினைக்  காத்திடு  தோழன்
              சூரனாய்த்  தாய்நிலம்  மீண்டான்!

    மொழியெலாம்  தோற்றிட  முயற்சியில்  வென்றவன்
          விழிகள்  நிறைந்திட  மீண்டான்! – தனை
        அழித்திடும்  எமனையும்  அலட்சியம் செய்தே
              ஆர்ப்புடன்  நம்மிடை    நின்றான்!

    தவப்பெருந்  தாயுளம்  சந்தோஷங்  கொண்டிடத்
          தந்தையைக்  கண்டுப  ணிந்தான்! – தனை
       அவமதித்  தோர்வாய்  அடைந்திட நம்முன்
           சுயமதிப் போங்கிட  வந்தான்!

    சாகா  வரத்தினைப்  பெற்றநம்  மைந்தன்
          வாகா  எல்லைக  டந்தான்! –  நாம்
       ஆஹா, ஆஹா! என்றுபு  கழ்ந்திட
            அஞ்சனை  மைந்தனாய்  வந்தான்!

    கோலங்கள்  வாசலில்  இடுவோம் பூரண
         கும்பத்  துடன்வர  வேற்போம்! – நம்
      குலமெலாம்  வீரமே  கொண்டிட வேண்டிக்
           கூடிக்கு  லாவியே  நிற்போம்!

                                       –  திருச்சி  புலவர் இராமமூர்த்தி.
    அபிநந்தன் கும்மி
    1)
    வாழி அபிநந்தன் வாழிய வாழிய
    வான்புகழ் கொண்டனை வாழியவே
    ஆழி அலைபோலென் உள்ளமடா! – கவி
    ஆர்த்துப் பெருக்குது வெள்ளமடா!
    2)
    வாளினைப் போலுன்றன் மீசையடா! –  வடி
    வேலினைப் போன்றதுன் நாசியடா!
    தோளினைப் போலென்று காட்டிடவே – பல
    தொன்மலைக் கூட்டமும் கேட்குதடா!
    3)
    கூரிய பார்வையைத் தீட்டிடவே – கதிர்
    கோடிக் கிரணத்தைக் காட்டுகிறான்
    நேரினில் வந்தென்றன் பாட்டினிலே – அவன்
    நித்தமும் நின்றிட ஏட்டினிலே!
    4)
    மாசில் இரவிலோர் ஆதவன் போலன்று
    வானத்தில் பாய்ந்தனை தாக்கிடவே!
    தூசு நிகர்த்ததாய் அந்நியர் ஊர்தியைத்
    துண்டு பலகோடி ஆக்கினையே!
    5)
    சக்தியில் மிக்கவான் ஊர்திகளில் – பகை
    தாக்கிட வந்திடக் கண்டவுடன்
    அக்கண மேவுள வன்மையால் அன்றோநீ
    அஞ்சாமல் பாய்ந்தனை வானத்திலே!
    6)
    மாடுகள் பூட்டிய வண்டியைக் கொண்டதோர்
    வல்லமை மிக்கதோர் ஊர்தியினை
    சாடிடச் சென்றவுன் சாதனையை – எங்கள்
    தண்டமிழ் என்றென்றும் போற்றிடுமே!
    7)
    வீசிப் புடைத்திடும் ஓர்முறம் ஏந்தியே
    வேங்கையை ஓட்டிய சாகசம்போல்
    பேசும் புவிஅபி நந்தனே நீயந்தப்
    பேயவர் தம்மையே ஓட்டியதை!
    8)
    முன்னம் இருப்பது மூள்பகை ஊர்திகள்
    மூன்றென்று கண்டாலும் அஞ்சா மலே
    நன்று விரட்டியே மாட்டினைப்போல் அந்த
    நாசகர் தம்மைநீ ஓட்டினையே!
    9)
    குண்டொன்று போட்டுநீ  தாக்கிட ஓரூர்தி
    குட்டிக் கிரணத்தைப் போடவதன்
    துண்டொன்று பாய்ந்துன்றன் ஊர்தியை அல்லவா
    தொட்டுத் தொளத்ததும் கண்டனையே!
    10)
    விண்ணில் இருந்துடன் வேகம் குதித்தனை
    வித்தைச் சிறகினை ஏந்தியநீ!
    மண்ணில் இறங்கிய பூமிய தோகொடும்
    வஞ்சகர் நாடென்று கண்டனையே!
    11)
    சுற்றிலும் காதகர் சூழ்ந்துனை நின்றாலும்
    சோர்வெதும் அண்டாமல் நின்றனைநீ!
    முற்றிலும் நின்றவர் கல்லாலும் சொல்லாலும்
    மோதிப் புடைத்திடும் போதினிலும்
    12)
    ஆழ இதயத்தில் ஊறிடும் பற்றினால்
    அஞ்சாமல் நாட்டினைப் போற்றிடவே
    வாழிய பாரதம் வாழிய என்றுநீ
    மாவொலி செய்தனை கேட்டிடவே!
    13)
    அந்நியர் நாட்டினர் கையினில் உன்னுடை
    ஆவணம் சிக்குதல் ஆகாதென
    அந்நிலை கண்டுநீ தின்னத் தொடங்கினை
    ஆவிதை என்னென்று சொல்லிடுவேன்!
    14)
    தின்று முடித்திட நேரம் இலையெனச்
    சிந்தை உணர்ந்திட ஓடியங்கோர்
    சின்னக் குழியொன்றில் நீரினைக் கண்டுநீ
    முன்னம் குதித்ததை என்னசொல்வேன்!
    15)
    ஆவணம் யாவையும் வேகம் அழித்தபேர்
    ஆண்மை நிறைந்தவோர் வித்தகன்நீ!
    காவியம் காட்டிடும் சாகசம் தன்னைநீ
    கண்ணெதிர் காட்டிய அற்புதன்நீ!
    16)
    எத்தனை கேள்விகள் யாரெங்கு கேட்டாலும்
    எத்தனம் ஏதிலும் மாட்டவில்லை!
    சித்தம் உயர்ந்துள சிங்கமே என்றுன்னைச்
    செந்தமிழ் பாடிடும் நித்தமுமே!  (வாழி)
    – சிவசூரி.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (300) – ‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு

    இந்த வார வல்லமையாளர் எனக் ‘கின்னரக் கலைஞர்’ சீகாழி ராமுவை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin’s bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் ‘கொட்டாங்கச்சி வயலின்’. இந்த அரிய கலையைக் கற்று, தமிழ்நாட்டில் மேடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இசைத்த சீர்காழி ராமு அண்மையில் மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது கின்னர வாசிப்புகள் தேடப்பெற்று காணொளிகளும், கேட்பொலிகளும் (ஆடியோ) இணையத்தில் வலையேற வேண்டும். அவரது 8 மக்களிடமோ, நண்பரிடமோ ராமுவின் கின்னர இசைப் பதிவுகள் கட்டாயமாய் இருக்கும். 10 பேராவது ஒவ்வொரு பழைய முழவு, துளை, நரம்பு, கஞ்சம் என்னும் சங்கீதக் கருவிகளைக் கற்று வாசிக்கும் திறன் பெறவேண்டும். சீகாழி தமிழிசையின் தலைமை ஸ்தானம். சம்பந்தர் பிறந்த ஊர். கர்நாடக மூவருக்கும் முன்பிருந்த தமிழிசை மூவர்களும் வாழ்ந்த ஊர். அவர்களில் மூத்தவர் 16ஆம் நூற்றாண்டினர் ஆகிய முத்துத்தாண்டவர் என்னும் இசைவேளாளர். அவர்தான் தில்லைக் கூத்தபிரானை முதன்முதலில் கீர்த்தனை என்னும் வடிவை அமைத்துப் பாடித் தொழுதவர் (ஆதாரம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மயிலாடுதுறை) எழுதிய நூல்கள்). ராமு என்ற இசைவாணரின் எளிய வாழ்வினைப் பற்றி அவரது நண்பர் எழுதிய ‘தீக்கதிர்’ கட்டுரையை முழுமையாகத் தருகிறேன். பலரும் அறிந்துகொள்ள வேண்டியவர், குடும்பத்தாருக்கும் உதவலாம். கின்னரத்தை ராவணஹஸ்தம் என்றும் அழைப்பதுண்டு. ராவணன் கின்னரம் தன் நரம்பால் செய்து மீட்டியதைத் தேவாரம் பாடும். கின்னரம் வாசிக்கும் இராவணனைக் காளமேகப் புலவர் பூசணிக்கும், சிவலிங்கத்துக்குமான சிலேடை  வெண்பாவில்
    அழகுறப் பாடியுள்ளார் [1].

    ஜோயப் போர் (Dr. Joep Bor) போன்ற இசையியல் அறிஞர்கள் நரம்பிசைக் கருவிகளைத தேய்த்து வாசிக்கும் வில்நாண் உடைய ‘வில்லகம்’ பற்றி இன்னும் சரியாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. அவர் போன்றவர்கள் இந்த வில்லகக்கருவி கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முன் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சிவாலயங்களில் – குடைவரைகள், கட்டுமானக் கோவில்கள் இன்னும் பார்க்கவில்லை. திருச்சி டாக்டர் இரா. கலைக்கோவன், அவரது மாணவி அர. அகிலா எழுதிய கட்டுரைகளில் சிரட்டைக் கின்னரி கொண்ட சிற்பங்களைப் பற்றி நிறைய 20 ஆண்டு முன்னரே எழுதியுள்ளனர். நடேசப் பெருமானின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவ கணங்கள் உள்ள முக்கியக் குடைவரையாக திருமலைப்புரம் என்னும் 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் குடைவரையைக் குறிப்பிடலாம். 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேசுவரம் என்னும் முதல் கற்றளியில் உள்ள கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பு. சோழர் காலப் படைப்புகள் என்று பார்த்தால் சுமார் 30 சிரட்டைக் கின்னரங்கள் தேறும் எனலாம். திருமலாபுரம், காஞ்சியில் உள்ள மூன்றுமே வில்லால் மீட்டும் சிரட்டைக் கின்னரி தான். சிரட்டை என்பது கொட்டாங்கச்சி. இதற்கு பதிலாகக் கச்சம் என்ற ‘நட்சத்திர ஆமை’ ஓட்டையும் பயன்படுத்தல் உண்டு. அந்தவகை நரப்பிசைக் கருவி கச்சபி என்றும், சரஸ்வதி கையில் உள்ளது இந்தக் கச்சக் கின்னரி என்றும் இந்திய சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் எல்லாவகை வீணைகளும் இந்தக் கின்னரத்தின்றும் பிறந்ததே. கூர்மவீணை என்றும், கூர்மி என்றும் குறிப்பிடும் ஆமையாழ் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரபாப்/ரெபெக் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து பரவிற்று. இதே போல, தும்புரு யாழ் என்பதும் பரவியது. ரபாப்/ரெபெக் மத்திய கிழக்கில் இருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவின் வயலினாக உருவெடுத்தது. பாலுஸ்வாமி தீட்சிதரும், தஞ்சை நால்வரில் வடிவேலுவும் திரும்பவும் கர்னாடக சங்கீதத்திற்கு வயலினை பிரிட்டிஷார் காலத்தில் மீளறிமுகம் செய்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும், சரஸ்வதி வீணையைவிடச் சிறிதானதாகவும் இருப்பதால் கச்சேரிகளில் வயலின் சிலமாற்றங்களுடன் இடம்பெறலாயிற்று.

    சிரட்டைக் கின்னரி (கொட்டாங்கச்சி வயலின்):
    https://www.youtube.com/watch?v=BQQ2lSbdotY
    https://www.youtube.com/watch?v=5Sa_SStKP40
    https://www.youtube.com/watch?v=D52s7LlJwiA
    https://www.youtube.com/watch?v=NOfUoSOqHnU
    https://www.youtube.com/watch?v=48TR0tBPAxk
    https://www.youtube.com/watch?v=zfoF_WAQEkw
    https://www.youtube.com/watch?v=gJFRKZ-Q2Uc

    திருக்கோவில்களில் தேவாரம் கின்னரம் கொண்டு இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கின்னரி என்னும் இந்த Pre-violin நரம்புக் கருவிக்குச் சங்க இலக்கியத்தில் இருந்து மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இவை இல்லாமல்தான் மேலையாசிரியர் இந்திய இசைக்கருவிகள் பற்றி இதுகாறும் ஆய்ந்துளர்.

    (1) பெரும்பாணாற்றுப்படை 493-495:
    இன்சீர்க்
    கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்
    மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின். – பெரும்பாணாற்றுப்படை 493-495.

    கின்னரம் வாசிக்கும் ஆந்தை ஜோடிகளை நிறைய அர்ஜுனன் தபசு சிற்பத்தில் மாமல்லையில் காணலாகும். பல்லவர் காலச் சிற்பங்கள். அதற்கு முன்னரே வரும் சங்கச் சான்று மேலே காணும் பெரும்பாண் வரிகள். இனிய தாளத்துடன் கின்னர மிதுனங்கள் கின்னரியாழை மீட்ட, அதற்கேற்றபற்றபடி மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் நடமாடும். ஆங்கே அச்சுறுத்தும் அணங்கு என்னும் தெய்வங்கள் வாழும். கின்னரம் வில்லகவிரல் என்னும் நாணுடை வில்லாலோ, பாணன் கையின் விரலாலோ மீட்டலாம்.

    (2) பெரும்பாணாற்றுப்படை 180-182
    குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரிநரம்பின்
    வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும்பாண்.

    மரல் கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் (நச்சினார்க்கினியர் உரை). இங்கே விரல் என்பது அதன் தொழிலால் கயிறுக்கு ஆகி வந்த உவமையாகு பெயர்.

    பெரும்பாணாற்றுப் படையின் பழைய உரையில் கை விரலால் மீட்டுதற்குப் பதிலாக வில்லில் பொருத்திய மரல்கயிறு ஆகிய விரலாலே தெறித்து வாசிப்பது என்பதால் கின்னரத்தை வில்லால் மீட்டினர் என்பது அறியலாகும். கின்னரம் வயலின் போல இருப்பதும், மிகப் பழையதான ஒரு வில்லிசைக் கருவி. வில்லிசைக் கருவிகளே (Bowed Chordophones) உலகத்திற்கு  இந்தியாவின் கொடை. அதில் கின்னரம் பற்றி முவ்விடங்களில் (முத்தமிழ் போல!) சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பதும், தமிழகத்தின் சிற்பக்கலை தோன்றுகிறபோதே கின்னரம் சிவகணங்கள் கையில் காட்டுவதும் அருமையிலும் அருமை. எங்கே பார்த்தாலும், காரைக்கால் அம்மை கைத்தாளத்துடன் இருப்பார். அபூர்வமாக, திருப்புகலூரில் சிரட்டைக் கின்னரியுடன் இருப்பதை முனைவர் இரா. கலைக்கோவன் தம் ஆய்வேட்டில் எழுதியுள்ளார்.

    இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை.

    பெரும்பாணாற்றுப்படையிலே “விரல்” என்பது ஓர் இசைநுட்பக் கலைச்சொல். இதனைக் குறுந்தொகை 370 கொண்டும் வில்லகவிரல் என்பது Violin’s bow-with-cord என்பது அறியலாம்.

    (3) குறுந்தொகை 370

    (“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)

    பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
    வண்டுவாய் திறக்குந் தண்டுறை ஊரனொடு
    இருப்பின் இருமருங் கினமே கிடப்பின்
    வில்லக விரலிற் பொருந்தியவன்
    நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
    – வில்லக விரலினார்.

    வில்லின் நாணினால் வாசிக்கும் கின்னரக் கருவியைப் பற்றிய அரிய பாடல் இது. முதலில் ஒன்று சொல்லவேண்டும்: அண்மைக்கால உரையாசிரியர்கள் இதனைப் பகைவனொடு உடற்றும் போரில் அம்பு எய்து கொல்லும் வில் என்று எடுத்த உரை செய்துள்ளனர். அது புறத்துறை ஆதலின், அகப்பாடலுக்கு போர்வில் உவமையாக வாராது என்பது திண்ணம்.

    மிகச் சிறிய பாட்டாக தமிழிசையின் உலகப் பங்களிப்பைத் தருகிறார் இந்தச் சங்கச் சான்றோர். Red Earth and Pouring Rain என்ற ஏ. கே. ராமாநுஜனின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு வரியால் செம்புலப்பெயல் நீரார் பாடல் உலகமெல்லாம் பரவியது. வட இந்தியரான விக்ரம் சந்திரா இத்தலைப்பில் நாவல் செய்தார். தமிழில் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் பலர். “வில்லக விரலினார்” என்பது சீகாழி ராமு போன்றோர் இசைத்த கின்னரக் கருவியின் வில்லின் நாணால் பெற்ற பெயர் ஆகும். பழைய தமிழிசைக் கருவி என்பதால் இவ்வரிய பாடலைச் சங்கத் தொகைப்பாட்டாகத் தெரிந்தெடுத்துச் சேர்த்துள்ளனர். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் உரை குறுந்தொகைக்குக் கிட்டியிருந்தால் கின்னரம் என்னும் செங்கோட்டியாழ், அதை மீட்டும் வில்லகம் என விளக்கியிருப்பர். ஆனால், குறுந்தொகைக்குப் பண்டைய உரை ஏதும் கிடைக்கவில்லை.

    தமிழிசைக் கருவி உவமையாகப் பயன்படுத்துவதால், முன்னுரையே இசையின் தொடர்பாக அமைத்துள்ளார் சங்கக் கவிஞர். ஆம்பல் மலர் எங்கும் போவதில்லை. வண்டு தான் ஆம்பலைத் தேடி வருகிறது. அதுபோல், பரத்தை தன் நல்லகத்தில் தான் இருக்கிறாள். அவளைத் தேடி வந்து துய்க்கிறான் தலைவன் என்பது உள்ளுறை உவமம். ஆம்பல் என்பது மருதத் திணையின் பண். தற்காலச் சுத்த தன்யாசி ராகம். சீகாமரம் (ஸ்ரீகாமரம்) என்பது தேவார காலப் பண்ணின் பெயர். ‘காமரு தும்பி காமரம் செப்பும்’ (சிறுபாண். 77). ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (சிலம்பு). ‘ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ’ (அகம்).

    பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
    காண்வரு குவளை கண்மலர் விழிப்ப (சிலம்பு)

    பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணிய நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலையுடையேம்; இது பகல் வேளையிலே எனலாம். அவரோடு துயின்றால் எம் இல்லத்தில் கின்னரத்தின் செங்கோட்டுடன் இணையும் வில்லக-விரல் ( violin’s bowstring) போல ஓர் உடலை யுடையேம்.

    முடிபு: ஊரனொடு ஊரார் இருப்பின் இருமருங்கினம்; இரவில் கிடப்பின் பொருந்தி ஒரு மருங்கினம். இப்பாடலில் தமிழிசையின் மூத்த கருவிகளில் ஒன்றாகிய கின்னரம் என்னும் நரப்பிசைக்கருவி சொல்லப்பட்டுள்ளது. வில்லகவிரல் என்பது ஒரு இசைத்துறைக் கலைச்சொல் (technical vocabulary). வில்லகவிரல் = Kinnari’s bow-string. கையினால் மீட்டும்போது அது கையக விரல். இதனைப் பாரதியார் “வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு” என்று சரசுவதி வீணை வாசிப்பைப் பேசுகிறார். 2000 ஆண்டுக்கு முன் இருந்த வில்லகவிரலினார் கின்னரத்தை மீட்டும் வில்நாணை (=வில்லக விரல்) உவமையாகச் சொல்லியுள்ளார். வில்லகவிரல் என்பது உவமையாகுபெயராய் வில்நாணைக் குறிப்பது. இதனை பெரும்பாணாற்றுப்படையின் பண்டை உரையினால் அறிக. அற்புதமான தமிழிசை வரலாறு காட்டும் சங்கச் செய்யுள் இஃது. வில்லகவிரலால் கின்னரம் மீட்டும் பாணனின் 1810-ஆம் ஆண்டு ஓவியம் இணைத்துள்ளேன்.

    நா. கணேசன்
    [1] கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History) https://groups.google.com/d/msg/santhavasantham/aMK2Pa10Wvc/50g4ci83CQAJ

    https://theekkathir.in/2018/12/03/ஒரு-கொட்டாங்கச்சி-வயலின்/
    ஒரு கொட்டாங்கச்சி வயலின் கண்ணீர் வடிக்கிறது…!
    ===ந.காவியன்=== இசையால் புகழ்பெற்ற நகரம் சீர்காழி… இதுதான், சைவத் திருமுறை 12 ல் மூன்று திருமுறைகளைத் தன் தேவாரப் பதிகங்களால் நிறைவு செய்த திருஞான சம்பந்தரும், தமிழிசை மூவரும், இசைமாமணி சீர்காழி கோவிந்த ராஜனும் இன்னும் பல நாதஸ்வரக் கலைஞர்களும் தவில் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் தோன்றிய இன்னிசை பூமி. இங்குதான் 72 ஆண்டுகளுக்கு முன்பு ராமு பிறந்தான். பின்நாளில் இவன்தான் கொட்டாங்கச்சி வயலின் சீர்காழி இ.எம்.ராமுவாகப் பரிணாமம் பெற்றவன்.

    சீர்காழி நகரையொட்டிய ஊழியக்காரன் தோப்புப் பகுதியில் பூந்தோட்டம் தெருவில், ஒரு தலித்துக்குரிய வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு குடிசையில் தான் ராமு பிறந்தான். கல்வி, தொடக்கப் பள்ளியைத் தாண்ட வில்லை. அப்பா கூலி வேலை செய்பவர். ராமுவும் படிப்பை விட்டுவிட்டு, அப்பாவோடு விறகு வெட்டுதல், செருப்புத் தைத்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்தான்…

    கர்நாடகாவில் அறிமுகமான வயலின்
    அப்போது, கர்நாடகா கோலார் தங்கச் சுரங்கத்திலும் மற்ற பகுதிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் வேலை பார்க்கச் சென்றனர். ராமுவும் அங்கு சென்று கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்தான். வாரத்தில் ஒருநாள் பக்கத்து ஊரில் சந்தை கூடும். அப்படி ராமு சென்றபோது, ஒருவன், கொட்டாங்கச்சி வயலின்களை வைத்துக் கொண்டு, ஒரு வயலினில் மிக இனிமையாக ஒரு ராகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்த ராமு, அந்த இசையில் மயங்கிப் போய், காசு கொடுத்து ஒரு கொட்டாங்கச்சி வயலினை வாங்கிக் கொண்டு, தான் தங்கியிருந்த பகுதியில் ஆசையோடு அந்த வயலினை வாசிக்க ஆரம்பித்தான்.

    ராகமும் வரவில்லை, எந்த சப்தமும் வரவில்லை. அடுத்த வாரம் அந்தச் சந்தைக்குச் சென்று, வயலின் விற்பவனைப் பார்த்து, ‘‘நீ மட்டும் இசை வாசிக்கிறாய், என்னுடைய வயலினில் எதுவும் வரவில்லையே’’ என்று சொன்னதற்கு, ‘‘இதில் பல வாரங்கள் பழக வேண்டும், ஒரு வித்வானிடம் போய் வாசிக்கக் கற்றுக் கொள்’’ என்றான் வயலின் விற்பவன்.

    வயலின் வசப்பட்டது
    எப்படியோ ஒரு வயலின் வித்வானைக் கண்டுபிடித்து, அந்தக் கொட்டாங்கச்சி வயலினக் கொடுத்து, கற்றுக் கொடுக்கச் சொன்னான் ராமு. அவருக்கோ அதை வாசிக்கத் தெரியாது. இருந்தாலும், தனது வயலின் அனுபவத்தில் நரம்பில் எப்படி விரல்களை வைப்பது, வாசிப்பது எனச் சொல்லி, சில ராகக் குறிப்புகளையும் கொடுத்தார் வித்வான். அவ்வளவுதான், எல்லாவற்றையும் மறந்து, இரவும் பகலுமாக அந்தக் கொட்டாங்கச்சி வயலினோடு போராடிக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ராகம் வாசிக்கக் கற்றுக் கொண்டான் ராமு.

    அப்போது ராமுவுக்குக் கர்நாடகாவில் இருப்புக் கொள்ளவில்லை. தான் கொட்டாங்கச்சி வயலினில் பாட்டுகள் வாசிப்பதைத் தன் ஊரில், தன் நண்பர்களுக் கெல்லாம் காட்ட வேண்டும் என்று சீர்காழிக்கு வந்தான் ராமு. சில நாட்களில் தந்தையும் இறந்து விட்டார்.

    சோறுபோட்ட கொட்டாங்கச்சி வயலின்
    கூலி வேலை செய்வதில் அவனுக்கு நாட்டமில்லை. சாப்பாட்டுக்கு வழி? சீர்காழி சந்தைப்பேட்டையில் ஒரு முஸ்லிம் பக்கிர்சா, தப்(ஸ்) அடித்துக் கொண்டு, கெளரவமாகக் காசுகள் சேர்ப்பதைப் பார்த்து, அவரோடு ஒரு சிறுமியும் உடன் இருப்பதைக் கண்டு அவள் அவரின் மகள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவனும் தனது வயலினை எடுத்துக் கொண்டு வந்து, சீர்காழி சந்தையில் வாசித்தான். உணவுக்குக் காசுகள் சேர்ந்தன.

    அவ்வளவுதான், சீர்காழி சந்தை, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என்று வாசிக்க ஆரம்பித்தான், அந்த பக்கிர்சா, ராமுவிடம் ஒரு யோசனை கூறினார், ‘‘இப்படி நாம் தனித் தனியாக வாசிப்பதைவிட, நீ வயலின் வாசிக்க நான் தப்ஸ் வாசித்தால் இன்னும் கூட்டம் கூடும் இல்லையா?’’ என்றார். நல்ல யோசனையாக இருக்கிறதே என்று சம்மதித்த ராமு, அதுமுதல் இருவரும் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். இந்த இசைப் பயணம் பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

    மும்தாஜோடு பயணம்
    ஒருநாள், சீர்காழி பேருந்து நிலையத்தில் அந்த பக்கிர்சா ராமுவிடம் கூறினார், ‘‘தம்பி, நான் அறிந்தவரை நீ நல்ல பையனாக இருக்கிறாய். இந்தப் பெண் மும்தாஜ் என்னுடைய மகள், தாய் இறந்துவிட்டாள். எனக்கு இப்போது இவள் கவலையாகத்தான் இருக்கிறது. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இதோ, என் மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ வாழ வை’’ என்று கூறி விட்டு, ஒரு பேருந்தில் ஏறிச் சென்றவர்தான், அதற்குப் பின் அவர் வரவே இல்லை.

    14 வயதுடைய பெண்னை அழைத்துக் கொண்டு, ராமு, கர்நாடகா சென்றான், பிறகு பம்பாய் சென்றான். பம்பாய் ரயில்வே ஜங்ஷன் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருக்கும் போது, பெஞ்சில் ரத்தச் சிவப்பைப் பார்த்து அதிர்ந்து போய்,பின்னர், மும்தாஜ் வயதுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டு, பைப்பில் தண்ணீர் கொண்டுவந்து பெஞ்சைக் கழுவி, மும்தாஜையும் குளிப்பாட்டி வைத்துவிட்டு, வெளியே ஓடிப்போய் புதிய உடைகள் வாங்கி வந்தான்.

    மும்தாஜூடன் இருப்பதைக் காலிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உணர்ந்து, பெண்ணுடன் ரயிலேறி தில்லிக்குச் சென்றான், ராமுவுக்கு இந்தியில் அப்போது பிரபலமான ஆராதனா, பாபி, நாகின் திரைப்படப் பாடல்களின் மெட்டுகள் நன்கு தெரியும். தில்லி மாநகரில் இந்திப் பாடல்களின் மெட்டுகளை அற்புதமாக வாசித்துக் கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினான். இனியும் அங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்பதால், தமிழகத்திற்கு வந்து, பின் தனது ஊரான சீர்காழிக்கு வந்தான்.

    கலை இலக்கிய இரவு – கண்டெடுத்த கலைஞன்
    மும்தாஜ் ‘விஜயா’ என்று மாற்றப்பட்டாள். தொடர்ந்து ராமு, சந்தைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வயலின் வாசித்துக் காசுகள் சேர்த்துத் தன் மனைவியோடு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி வருகையில், குழந்தைகள் பிறந்தனர். ராமுவிற்கு 5 பெண்கள், 3 ஆண்கள்.
    அப்பொழுது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக நாகைமாலி இருந்தார். 1996-ஆம் ஆண்டு, கீழ்வேளூரில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. சந்தைப் பேட்டைகளிலும், பேருந்து நிலையங்களிலும் ராமு என்ற கலைஞர்
    கொட்டாங்கச்சி வயலின் வாசித்து வருகிறார். அந்த வீதிக் கலைஞனை நம் கலை இலக்கிய இரவில் அறிமுகப்படுத்தினால் என்ன? என ஒரு தோழர் சொல்ல, உடனே, நாகைமாலி ராமுவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கீழ்வேளூர் கலை இலக்கிய இரவில் மேடையில் ஏற்றினார்.

    தமிழகமெங்கும்
    அதன்பின், தமிழகமெங்கும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் மேடையேறிய ராமுவிற்குப் புகழ் பெருகியது. சீர்காழி ராமு இல்லாமல் கலை இலக்கிய இரவுகள் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. இப்படி, வீதிகளில் தன் இசையை விற்று ஒரு இரவலராக வாழ்ந்த ராமுவைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கெளரவமான ஒரு மேடைக் கலைஞராக மாற்றியது.

    கலைஞனும் வறுமையும்
    ஆண்டு முழுவதும் கலை இலக்கிய இரவுகளும் நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. 7 பிள்ளைகள், மனைவி… சோறு போடவேண்டும். மீண்டும் வெட்கம் பாராது, மக்கள் கூடும் இடங்களில் ராமு வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.
    கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் பல இல்ல விழா நிகழ்ச்சிகளுக்கு ராமுவை வரவழைத்து, வாசிக்க வைத்த பின் சீர்காழிக்குப் போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து அனுப்பிய கொடுமைகளும் நடந்தன.

    மனைவி விஜயாளுக்கு (மும்தாஜ்)க் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்பார்வை பறிபோனது. சிகிச்சை செய்யக்கூடப் பணம் இல்லை. ராமுவும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். பார்வை இழந்த மனைவியோடு பிற ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார்.

    கலைஞனுக்குக் கிடைத்த கைத்தட்டல்கள்
    நாகைக் கலை இலக்கிய இரவில் நான் தொகுப்புரையாற்றுவேன், ராமு மேடை ஏறும்போது, பெரிய கைத்தட்டல்கள் கிடைக்கும். சில பாடல்களை மிக அற்புதமாக வாசிப்பார். அப்படிப்பட்ட பாடல்களாகக் கூறி வாசிக்கச் சொல்லுவேன். ‘‘மச்சானப் பாத்தீங்களா?’’ ‘‘கொட்டப் பாக்கும்’’, ‘‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’’ ‘‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’’ போன்ற பாடல்களைத் துவக்கும் போதே, ஆர்வலர்கள் பலத்த கைத்தட்டல்களை வழங்கி உற்சாகமூட்டுவார்கள்.

    ஈடில்லாக் கலைஞன்
    ஈடு இணையற்ற அந்த இசைக் கலைஞனுக்கு திடீரென மூளையில் கட்டி ஏற்பட்டுப் பேசமுடியாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக கலை இலக்கிய இரவிற்கு ராமுவை அழைக்க முடிய வில்லை. ஆர்வலர்கள் ‘ஏன் சீர்காழி ராமு வரவில்லை?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி, சீர்காழி தமுஎகச தோழர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவார்கள்.

    அப்படி ‘நன்னானே’ சு.ரமேஷ் பார்த்துப் படுக்கையில் அவரைப் படம் பிடித்து வந்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. எப்படிப் பட்ட கலைஞன்! மேடையேறி தனது கொட்டாங்கச்சி வயலினை எடுத்துக் கம்பீரமாக நின்று இசையமுதைக் கொட்டியவர்…

    இறுதிப் பயணம்
    உடல்நிலை மிகவும் மோசமாகி சென்னை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். திடீரென எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி வந்தது. டிசம்பர்-2, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை மருத்துவமனையிலேயே ராமு இறந்து விட்டார்.. அவரது உடல் சீர்காழிக்குக் கொண்டு வரப்படுகிறது என்று…

    டிசம்பர்-3 அன்று, பிற்பகலில் சீர்காழி பூந்தோட்டம் தெருவில் உள்ள ராமுவின் இல்லத்திலிருந்து இறுதிப் பயணம் புறப்பட்டது. பிள்ளைகள், ‘‘அப்பா அப்பா’’ என்று கதறினார்கள்; ‘‘ஐயோ! ஐயோ!’’ என்று கண் இழந்த மனைவி கதறினார்; ‘‘ராமு! ராமு!’’ என்று தோழர்கள் புலம்பினார்கள்.. ஆனால், வீட்டின் உள்ளே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டாங்கச்சி வயலின் மட்டும் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

    **********************************

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (299) – இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

    ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை உள்வாங்கி இந்திய திரையிசையாக தமிழ், ஹிந்தி மொழிகளில் தருவதில் மிக வல்லவர் ரகுமான். ‘இளையராஜா 75’ என்ற பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தன் குருவை வாழ்த்தி ‘கீபோர்ட்’ வாசித்து புகழ்மிக்க புன்னகைமன்னன் படப்பாடலை மீண்டும் இசைத்தார். மும்பை, ஹாலிவுட் இசையமைப்புகளில் நீண்ட காலம் செலவிட்ட இரகுமான் இப்போது சென்னையில் நேரத்தைச் செலவிடுகிறார். ராஜீவ் மேனன் இயக்கி, மதன்கார்க்கி பாடல்களுடன் “சர்வம் தாள மயம்” என்ற கர்நாடக சங்கீத உலகம் பற்றிய நல்ல திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. வாழ்த்துகள் திரு. இரகுமானுக்கும், அவர் இன்னும் தர இருக்கும் தமிழின் புத்திசைப் பாடல்களுக்கும்!
    சாஸ்திரீய சங்கீதம் என்னும் பிரவாகத்தில் இந்தியாவின் பழைய சமூக அமைப்பில் இரு கோடிகளும் இணைவது 3000+ ஆண்டுகளாய் நிகழ்ந்துவருகிறது. பாணர், நாட்டார் இசைக் கலைகள், நாட்டிய மரபுகள் மேட்டிமை மரபுகளாக உருமாற்றம் ஆகின்றன. இந்த ம்யூஸிக்காலஜி ஸப்ஜெக்ட்டை வெகுஜனங்கள் பார்க்கும் சினிமாக்களிலே விட்டுவிடுகிறார்கள் என்கிறார் ‘டெஸ்லா’ கணேஷ்.

    காத்தவராயன் சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள். சிவாஜி – சாவித்திரி படம்.இதில் தும்புரா வாசித்துக்கொண்டு சிவாஜி கிழவனாக நடிப்பார். தும்பி (பஞ்சாபில்) – தும்புரு (> தம்புரா). இது மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் பரவியுள்ளது. தும்பி = சுரைக்குடுவை. ‘வரவு எட்டணா செலவு பத்தணா’… துந்தனா என்னும் பாட்டிலே வரும்.  இதுபோன்ற கருவியை வைத்துக் கொண்டு வில் யாழ் வாசிப்பது கின்னரம். ‘கிழவி சொன்னால் கின்னாரக் காரனுக்கு ஏறாது’ (பழமொழி). காத்தவராயன் கதை என்னும் நாட்டுப்புறக் கதை டெஸ்லா கணேஷ் சொல்லும் செய்தியை உள்ளடக்கியது. ஆரியமாலா – கின்னரம் வாசிக்கும் பாணன் காத்தவராயன்.  கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History):
    https://groups.google.com/forum/#!topic/santhavasantham/aMK2Pa10Wvc

    3000+ ஆண்டுக்கு முன்னும் ஜாதி அமைப்பின் இரு கோடிகளும் இசையில் சந்தித்துள்ளன. இதைத்தான் குசீலவர் (Cf. Kuyiluvar in Sangam Tamil) பாடல்களும், கிரவுஞ்ச வதை என்னும் வான்மீகியின் பாலகாண்ட சருக்கமும் காட்டிநிற்கின்றன. சாம கானம் பாடும் போது ‘wish-chant’ என்னும் பாடலுக்கு க்ரௌஞ்ச-ஸாமன் எனப் பெயர். விளரி எனத் தமிழிசை கூறும் தைவத ஸ்வரம் (6th note – high note in sapta svaras, dedicated to Asuras and Brhaspati) அன்றில்/க்ரௌஞ்சம் ஏங்கும் பாடல் ரிக்வேதத்தில் சில பாட்டுகளைப் பாட பாணர், குயிலுவரிடம் இருந்து உள்வாங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட பயணம் இந்தியாவின் சங்கீதம், அதில் சுடரும் விண்மீன் ரகுமான்.

    செம்பூழிக் காலத்தை ஆராய்கிறேன். பீர் என்ற சிந்து மாகாணத்தில் உருவான சொல் தமிழ் அடிப்படைத் தாது கொண்டது. பிரான், பிராட்டி; தம்பிரான் (சைவ ஆதீனங்கள்), தம்புராட்டி (கேரள தரவாடுகள்) ஓர்மிக்கவும்.  பீர் எனுஜ் சொல் அறபி, ஈரான், வடமொழி போன்ற மொழிகளில் அதன் வேர் காட்டவியலாது. சூபி பீர் அவர்களிடம் பக்தி பூண்டு ரகுமானின் தாயாருடன் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர் ரகுமான். திலீப் என்பது பெற்றோர் இட்ட பெயர். வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி சங்கீதமும், அதன் முன்னனிக் கலைஞர்களுடனும் புதிய படைப்புகளைத் தந்து புகழும், பணமும் ஈட்டுகிறார். இவரது பாடல்கள் என்றால்  படமே ஹிட் தான்.

    “He suggested the names: “Abdul Rahman” and “Abdul Rahim” and said that either name would be good for me. I instantly loved the name “Rahman.” It was a Hindu astrologer who gave me my Muslim name.” https://scroll.in/article/699665/Why-I-converted:-The-transformation-of-Dilip-Kumar-into-AR-Rahman

    https://scroll.in/reel/897429/10-things-we-learnt-about-ar-rahman-from-the-authorised-biography-notes-of-a-dream

    https://indianexpress.com/article/lifestyle/books/ar-rahman-biography-notes-of-a-dream-ar-rahman-oscar-5444054/

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • இந்த வார வல்லமையாளர் (298) – ஜார்ஜ் பெர்னாண்டஸ்

     

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes (ஜூன் 3, 1930 – ஜனவரி 29, 2019), ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்

    வாஜ்பாயி மந்திரிசபையில் இந்தியா அணுகுண்டு செய்யவும், அதன் மிஸைல்ஸ் புரோகிராமுக்கு அப்துல் கலாம் தலைவராக இருக்கும்போதும் வேண்டிய தலைமையை நல்கியவர். 1998-ல் பாரத அணுசோதனை வெற்றி – வாஜ்பாயி, ஜார்ஜ், கலாம், சிதம்பரம் (இந்திய அணுவியல் துறை தலைவர்), காஷ்மீர் பரூக் அப்துல்லா.

    எமெர்ஜென்சி பிரகடனம் இந்திரா காந்தி அறிவித்தபின்னர் இந்தியாவின் பிரதமருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். என்றும் ஈழ நாடு அமையத் தமிழர்கள் பக்கம் இருந்தவர்

    1976 ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். அவரது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி போலீஸார் கொடுமைப்படுத்தினர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது விலங்கிடப்பட்ட கைகளை உயர்த்தி, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று துணிச்சலாக முழக்கமிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தே விண்ணப்பித்தார். தொகுதிக்கே செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வெற்றிபெற்றார்.

    இந்திரா காந்தி தோல்வியைத் தழுவினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி ஜார்ஜை தேடி வந்தது. வழக்கம்போல எளிய பைஜாமா குர்த்தாவில் ரயில்வே அமைச்சராக ரயில் பவனில் நுழைந்தபோது, அங்கிருந்த வாயிற்காவலர், “யார் நீங்கள்? உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு இருக்கிறதா?” என்று கெடுபிடி காட்டினார். அப்போது, “நான்தான் ரயில்வே அமைச்சர்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார்.

    பாஜகவுக்கு அவர் வழங்கிவந்த நிபந்தனையற்ற ஆதரவைப் பார்த்தவர்கள் மதச்சார்பின்மை குறித்து உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது “இந்தியர்களை மதச்சார்பற்றவர்கள், சாதாரணமானவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். நான் சாதாரணமானவர்களின் பிரிவைச் சேர்ந்தவன்” என்றார்.

    Obituary in BBC. இந்திய பிரதமர் மோதியின் ட்வீட்கள் வாசிக்கலாம்,
    https://www.bbc.com/news/world-asia-india-47039190

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி

    கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி. அனைவரும் வருக.

     

    Share
  • தமிழ் இணையப் பல்கலை ( 14 டிசம்பர் 2018)

    14 டிசம்பர் 2018-அன்று தமிழ் இணையப் பல்கலையில் சொற்பொழிவு. அனைவரும் வருக.

     

    Share
  • ரோஜா முத்தையா நூலகச் சொற்பொழிவு (15 டிசம்பர் 2018)

    சங்க காலத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், சிந்து சமவெளி நாகரீகத்தில் திராவிட மொழியினர் மேன்மைநிலையில் இருந்தமையும் பற்றிய ஆய்வுகளில் தனிமுத்திரை படைத்தவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். http://www.vallamai.com/?p=88261 . அண்மையில் இயற்கை எய்திய ஐராவதத்திற்கு மலரஞ்சலியாக ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் என் சொற்பொழிவு அமையும். 15 டிசம்பர் 2018-ம் தேதி, மாலை 5:30 pm மணிக்கு நிகழ உள்ள இந்த ஆய்வுரைக்குத் தாங்கள் வந்திருந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

     

    About the talk

    Given the large area that covers the classical Indus valley civilization, many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community. Since Fish and Crocodile played major role in the Indus astronomy, culture and religion, they got represented in the Indus script. Harappans likely called these signs as mīṉ and mokara/makara in their language. The word śiṁśumāra, first referring to Gangetic dolphin by similarity with the gharial crocodile, is analyzed with the suggestion of a Proto-Dravidian root. Many such examples where word-initial k- gets transformed into ś- in Vedic Sanskrit are included. Words connected with asterisms, kāla‘Time’, nimiṣa ‘second’ and, Agricultural terms such as ‘timira‘ from the hump of a Zebu bull, puccha ‘tail’, indu ‘drop, seed’ and aṇḍa ‘egg’ are explained as heritage terms from Indus farming economy.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (289)

    இந்த வார வல்லமையாளராக  தென்னிந்தியாவின் பல பழைய வரலாற்று இடங்கள், கோவில் கலைகள், கல்வெட்டுகள் பற்றி விரிவாக வலைச்சுவடி எழுதும்  ரா (ராமையா) முத்துசாமி அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பெற்றோர்: இராமையா – பார்வதி அம்மாள்.

    இரா முத்துசாமி புதுக்கோட்டை மாவட்டம் இராமசந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரு சிறு கிராமம். எனவே கொங்குநாட்டின் மீது ஒரு ஈர்ப்பும் பிடிப்பும் உண்டு. கல்லூரிப் பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ. (டி.ஆர்.டி.ஓ), சென்னை, ஆவடியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை வாழ்க்கை. 2000 முதல் எழுதத் தொடங்கியுள்ளார். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், நாட்டுப்புறவியல், அறிவியல், மற்றும் நடப்புச்செய்திகளிலும் நாட்டம் உண்டு. விக்கிப்பீடியாவில் (தமிழ், ஆங்கிலம்) கட்டுரை தொடக்கம், மேம்படுத்துதல் மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்ட அனுபவம் உள்ளது. புகைப்படக்கலையிலும் ஆர்வமுண்டு. சென்னை ஃபோட்டோ வாக் குழுவினருடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மதராசப்பட்டிணத்தின் வரலாறு சார்ந்த இடங்களை புகைப்படங்கள் மூலமாக புகைப்படக் கதையாக வெளியிட்ட அனுபவமும் உண்டு.

    https://agharam.wordpress.com/
    http://know-your-heritage.blogspot.in/
    https://www.facebook.com/muthusamy.ramaiah.5

    இந்த வாரம் சங்க கால இலக்கியத்தில் இரும்புத் தொழில்நுட்பம் என்று ஆராய்ந்து பதிந்துள்ளார்:

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (288)

    இந்த வார வல்லமையாளராக  பத்திரிகையாளர் ரவி அகர்வாலை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. ரவி அகர்வால் லண்டனில் 1982-ல் பிறந்தவர். கல்கத்தாவில் வளர்ந்து, ஹார்வர்ட் பல்கலையில் இதழியல் பயின்றவர். சிஎன்என், டெல்லி தலைவராகப் பணிபுரிந்து, தற்போது ‘ஃபாரின் பாலிசி’ என்னும் ஜர்னலின் ஆசிரியர் ஆகியுள்ளார். https://en.wikipedia.org/wiki/Ravi_Agrawal

     

    1990களில் செல்பேசிகளால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஒன்று நிகழ்ந்தது. அதே போல இப்பொழுது  இந்தியாவில் வலைபேசி பல கோடி மக்களின் கைகளில் வந்துகொண்டுள்ளது. வலைபேசி என்பது ஸ்மார்ட் ஃபோன்ஸ். காமிராவும், இணையத்துக்கு சென்று எழுதுவதும், படிப்பதும், வாட்ஸப் மூலம் உலகெங்கும் செலவின்றி உறவாடவும் வலைபேசிகள் உதவுகின்றன. 30 கோடி மக்கள் தற்போது வலைபேசிகளைப் புழங்குகிறார்கள். இது 2021-ல் 50 கோடி வலைபேசிப் பயனர்களாக உயரும் என இந்தியர்கள் கணக்கிடுகிறார்கள். பேரிடர்கள் தாக்கும்போது சுனாமி, சூறாவளிப் புயல், அணுநிலைய விபத்து, … போன்றவைகளை மக்களுக்கு உடனுக்க்டன் அறிவிக்க வலைபேசிகள் மிக உதவும். உள்ளங்கையில் உலகம் என்பதை இந்தியாவில் உண்மையாக்குவது வலைபேசிகள் தாம். இது ஓர் யுகப்புரட்சி.

    ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இந்தியாவில் வலைபேசி யுகப்புரட்சி பற்றி விரிவான நூல் எழுதிய இளைஞர் இரவி அகர்வாலை வாழ்த்தி வல்லமையாளர் என அறிவிக்கிறோம். மேலும் பல நூல்கள், கட்டுரைகள், தொலைக்காட்சி, ஆய்வு ஜர்னல்கள், … இவற்றில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை மேற்குத்திசை நாடுகளில் வாரந்தோறும் பிரபலம் ஆக்குவதன் மூலம் தொழில், வணிக உறவுகளை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் பெருக்கும் அரிய பணீயைச் செய்யும் ரவி போன்றோர் பங்களிப்பு முக்கியமானவை.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (287)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    தெரிவு: முனைவர் நா. கணேசன்

     

       இயல் விருது கனடா எம்பி இராதிகாவிடம் பெறுதல்

    இந்த வார வல்லமையாளராக  சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் இன்றைய மாபெரும் பிரச்சினை, இயற்கை அழிவு தான். பல உயிரினங்கள் உலகிலே எங்கும் இல்லாதவை: கடலுயிரிகள், மீன்கள், பூச்சிகள், புழுக்கள், விலங்குகள், பறவைகள், வனவிலங்குகள், 10,000 ஆண்டுகளாக வேளாண்மையில் உருவாக்கிய நாட்டு மாடுகள், எருமைகள், கோழிகள், நாட்டு நாய்கள், … மரங்கள், தாவரங்கள், செடிகள், கொடிகள் எனப் பல இனங்கள் காணாமல் போகின்றன. மணல், கிரானைட், தாதுமணல், … அள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு, காட்டு வளங்கள், எல்லைகளை ஊடுருவாமல் காத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் இல்லை.

    இந்த வாரம் 10-ஆம் தேதி அன்று, “கையிலிருக்கும் பூமி – இயற்கை சார்ந்த கட்டுரைகள்” என்னும் பாஸ்கரனின் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா, பண்டைய கலைவரலாறு, இயற்கைச் சூழலியல், கானுயிரிகள், நாட்டுநாய்கள், .. என்ற துறைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதிவருபவர். பல ஆண்டுகளாக என் ஆய்வுகளைப் படித்துப் பாராட்டுபவர் திரு. பாஸ்கரன். காந்திஜியின் நண்பர் கோவை அய்யாமுத்து திருப்பூரில் 1000 ராட்டைகள் சுழன்று கதர் இயக்கம் வளர்வதைப் படமாக்கியவர். அந்த அரிய பதிவு, மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படத்தில் பயன்பட்டதைச் சொல்லியுள்ளார். கேழையாடு, அழுங்கு/அணுங்கு என்னும் எறும்புதின்னி போன்றவற்றின் செய்திகளை விவரித்துள்ளார். பரதநாட்டியத்தை குஜராத்தில் பரப்பிய மிருணாளினி சாராபாய் – விக்ரம் சாராபாய் என்னும் விஞ்ஞானியின் மனைவியார் இந்தத் தமிழ்ப் பெண்மணி – பற்றி இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். முதல் நடராஜர் வடிவம், பல்லவர்களின் சீயமங்கலம் குகையில் இருப்பதை விளக்கி தமிழ் இந்துவில் எழுதினார். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டுவந்த பல செய்திகளை நல்ல தமிழில் எழுதுபவர். பார்ப்போலாவைப் பேட்டி கண்டு ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் வெளியிட்டார். மிச்சிகன் பல்கலை வரலாற்றுப் பேராசிரியர் தாமஸ் ட்ரௌட்மன்   திராவிட மொழிக்குடும்பம் என்னும் கோட்பாடு கண்டறிந்த வரலாற்றை நூலாக ஆய்ந்தபோது பல்லாற்றானும் உதவினார். அவரது சகோதரர், முனைவர் சு. கி. ஜெயகரன் குமரிக்கண்டம் என்னும் புராண ஆக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளார் (காலச்சுவடு பதிப்பகம்).

    சீவக சிந்தாமணி காப்பியம் கம்பனுக்கு முன்னோடி. அக் காப்பியம் உருவான நகரம் தாராபுரம். பெருவஞ்சி என்று அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் (78) சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுலைப்பட்டம் பெற்றார்.  இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராக இருந்தார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார்காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் 1996இல் வெளியிடப்பட்ட்து. சென்ற ஆண்டு பெங்குயின் பதிப்பகம்  இவரை தொகுப்பாசிரியராக்க் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை வெளியிட்ட்து.

    உயிர்மை பதிப்பகம் இவரது மூன்று நூல்களானஇன்னும் பிறக்கத தலைமுறைக்காக (2006)’, தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)  இவற்றைப் பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலைகானுறை வேங்கை  ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.    உயிர்மை, பசுமை விகடன் பத்திரிக்கைகளில் இவரது பத்தி வெளியாகின்றது. ஹிந்து நாளிதழிலும் ஃப்ரண்ட்லைன் இதழிலும் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார்.  1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக கருதப்படுகின்றது.  பற்றிய  The Eye of the Serpent என்ற  இவரது நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல் வெளிவந்தது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (286)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக இன்றைய இந்தியாவின் சிற்பி, ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை உலகத்தரத்தில் வடித்த  ராம் சுதார் என்னும் சிற்பியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  பாரதத்தை வடிவமைத்தவர்களில் தலைவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் முக்கியமானவர். பாரதி, தாகூர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன்றோர் கண்ட கனவு சிதறுண்டு போகாமல் பல தனி அரசர்களை ஒருங்கிணைத்தவர். கடைசியாக, ஐதராபாத் (இன்றைய தெலுங்கானம்) இந்திய ஒன்றியத்தில் தனி மாகாணம் ஆகியுள்ளது. அவை போன்றவை தனிநாடு ஆகாமல் இருப்பதன் காரணவர் ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ பட்டேல் தான்.

    ஒற்றுமைக்கு இந்தியாவில் பெரிய சிலை அமைந்துவிட்டது. மும்பையில் இதைவிடப் பெரிதாய் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்குச் சிலை அமைய உள்ளதாம். இன்று ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பெருகிவருகிறது. கபிலபரணர் வந்தனர் என்றால் கபிலரும் பரணரும் வந்தனர் என்னும் உம்மைத்தொகை என்று இலக்கணம் கூறுவர். அதுபோல் ஸ்மார்ட்போனைத் தமிழில் “வலைபேசி” எனலாம். அதாவது, “வலையும் ஃபோனும்” ஒன்றாய் அமைந்த கருவி. 700 மில்லியன் வலைபேசிகளால் இந்தியாவில் இணைய அணுக்கம், ஒளிப்படமி (காமிரா), முகநூல், வாட்ஸப் அழைப்புகள், … எனப் பெருகிவரும் மிகப் பெரிய தகவல் யுகப்புரட்சிக் காலம் இது. எல்லா இந்திய மொழிகளையும் ரோமானிய எழுத்திலும் எழுதும் வழக்கம் மிகவேண்டும். இந்திய மொழிகளுக்கு இடையே பல அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன. அப்பிணைப்பு உணரவைக்க ரோமன் லிபி ஒற்றுமைக்கு எழுத்து எனலாம். ஒவ்வொரு மாநில எழுத்தும் அவ்வப் பிராந்திய அளவில் இயங்குகின்றன. ஆனால், ஒற்றுமைக்கான ஓரெழுத்து வடிவமாக ஆங்கில எழுத்தும் கூடவே இருப்பது எதிர்காலத்தில் பாரத மக்களிடையே ஒற்றுமை வளர நல்ல வழி அளிக்கும். India as a linguistic area (M. B. Emeneau’s theory).
    “முப்பது கோடி முகமுடையாள், உயிர்
    மொய்ம்புற ஒன்று உடையாள்
    செப்பு மொழி பதினெட்டு உடையாள், எனில்
    சிந்தனை ஒன்றுடையாள்” என்றார் சுப்பிரமணிய பாரதியார்.

    சர்தார் வல்லபாய் பட்டேலின் நாட்டின் ஒற்றுமை பற்றிய சொற்பொழிவு. மொழிபெயர்க்கத் தக்கது. படித்தருளுக:
     

    சர்தார் படேல் வாழ்க!
    ====================
    திருச்சி புலவர் இராமமூர்த்தி 
    ============================
     

    ஒற்றுமை ஓங்கிடவே- தம்
    உழைப்பினை ஈந்திட்ட உயர்மனிதர்!
    கற்றவர் போற்றிடவே- இங்கு
    கலைந்து பிரிந்தமா நிலங்களையே,
    உற்ற வலிமையுடன் – ஓன்று
    படுத்திபா ரதத்தினுக் குருக்கொடுத்தார்!
    நற்றவ வல்லபபாய் – படேல்
    நாட்டினைக் காத்து நலமளித்தார்!

    நாடியாடு நகரினிலே – மிக
    நல்லதாய் தந்தையின் மைந்தரென,
    நீடிய திறமையுடன் – கல்வி
    நேத்திரம் திறந்துல கினைக்கண்டார்!
    வாடிய வறுமையிலே – நம்
    வளமிகு பாரதம் அந்நியரின்
    கோடிய கோலாட்சி – தனில்
    குலைந்தால் எதிர்த்தறப் போர்புரிந்தார்!

    ஒத்துழை யாமையெனும் – மிக
    ஓங்கிய போர்தனில் வெற்றிகண்டார்!
    புத்தொளி பர்தோலி – தனில்
    போரிட்டவர்கள் ”சர்தார்” ஆனார்!
    வித்தகர் அம்பேத்கார் – தமை
    வெற்றிசேர் குழுவின் தலைவரென
    அத்தினம் பரிந்துரைத்தே – நம
    தரசிய லமைப்பினை நிருணயித்தார்!

    அரசர்கள், நிலத்தலைவர் – பெரும்
    அதிகாரிகளை ஒன்றிணைத்தே,
    ஒருமைப் படுதேசம் – இங்
    குருவாக்கிடஉள் துறை அமைச்சர்
    பெரும்பணி புரிந்திட்டார் – துணைப்
    பிரதமர் பதவியைப் பெற்றவராய்
    இரும்பு மனிதரென – நம
    திந்திய நாட்டினை ஆண்டிட்டார்!

    பாரத ரத்தினமாம் – உயர்
    பட்டப் பதக்கம் அவர்க்களித்தே
    சீருயர்ந் தோங்கியதாம் – நம்
    தேசம் வணங்கியே போற்றியதாம்!
    நேருயர் வேதுமின்றி – உலகின்
    நெடியதோர் சிலைதனை இன்றமைத்தே
    பாரினில் அவர்புகழை – மிகப்
    பட்டொளி வீசிடப் பரப்புகின்றோம்!

    சர்தார் படேல் வாழ்க! – அவர்
    சாதனைக் கருத்துக்கள் உயர்ந்தோங்க,
    நிர்வா கத்திறமை – மிகும்
    நெறியா ளர்பலர் தோன்றிடுக!
    பர்தோ லித்தலைவர் – படேல்
    வழியில்வே ளாண்மக்கள் வாழ்ந்திடுக!
    சர்வமும் ஒற்றுமையால் – செயும்
    சாத்தியம் சத்திய மாகிடுக!

    தலைமைச் சிற்பி ராம் சுதார் அவர்களின் சிறந்த படைப்புகளில் சிலவற்றைக் கண்ணால் கண்டு மகிழ்வோம். சொடுக்கினால் படம் பெரிதாகும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

     

    சர்தார் மறைந்தபோது நாமக்கல் கவிஞர் சொன்ன சரமகவிகள்:

    வல்லபாய் பட்டேல்

    இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
    எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
    கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
    குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்
    கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
    கலங்காத் தெளிவுடைய கர்ம வீரன்
    வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதை விரித்துரைக்க வார்த்தையுண்டோ? 1

    காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
    கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
    சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
    சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்
    மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
    மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
    வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
    வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.       2

    அன்புமுறை தவறாத அமைச்ச னாகும்;
    அரசுகுறையாத ஆற்ற லுள்ளோன்;
    துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
    துளங்காமல் துணிவுரைக்கும் துணைவனாகும்
    இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
    இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான்;
    நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
    நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.       3

    காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
    கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
    சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
    சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
    நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
    நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
    சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
    சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.       4

    பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
    பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
    அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞராவர்
    அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
    திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
    திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
    மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
    மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.       5

                                                                                                    –  நாமக்கல் கவிஞர்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • பிணர் (செந்தணக்கு, Sterculia urens), பிணறாயி ஊர்ப்பெயர்

    டாக்டர் நா. கணேசன்

    விக்கிப்பீடியாவில் பிணறாயி என்ற ஊர்ப்பெயருக்கு “பிணம்” என்ற சொல்லைவைத்து விளக்க முயன்றுள்ளனர். https://en.wikipedia.org/wiki/Pinarayi. அவ்வாறு அமங்கலமான பெயரை அவ்வூரில் வாழும் மக்கள் வைத்திருப்பார்களா என்பது ஐயமே. பிணறாயி வட கேரளத்தில் உள்ள ஊர். இவ்வூர்ப் பெயர் அகில இந்திய அளவில் செய்திகளில் காண்கிறோம். காரணம் கேரளத்தின் இன்றைய முதல்வர் பிரணாயி ஊர்க்காரர். சவரிமலை என்றி 1820-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சபரிமலையைக் குறித்துள்ளனர். சபரிமலை போல வட இந்தியாவில் பல கார்த்திகேயன் (முருகன்), அனுமான் கோவில்களில் பிரமச்சாரி என்பதால் பெண்கள் சென்று வழிபடாத நிலை உள்ளது. பருவகால மகளிர் சவரிமலைக்கு வருதல் இல்லை என்றும் அந்த இரண்டு நூற்றாண்டு முந்தைய நூலில் பதிவாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கேரளாவில் சபரிமலை விஷயமாகக் காண இயல்கிறது. நவம்பர் 13-ஆம் தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட் இந்தப் பிரச்சினை பற்றிக் கூடுகிறது.

    பிணறாயி – பிணர் என்னும் சொல்லுடன் தொடர்புடையது. பிணர் என்றால் சொரசொரப்பு > சரசர. சர்ச்சரை (ஜர்ஜர jharjhara) என இந்த ஒலிக்குறிப்புச்சொல் வட இந்திய மொழிகளில் வழங்குகிறது.

    மாசறக் கழீஇய யானைபோலப்
    பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
    பைதல் ஒருதலை சேக்கும்… (குறுந்தொகை 12)

    பிணராயி – நெய்தல் திணையின் ஊர் ஆனதால், சொரசொரப்பான மண்ணோ, கல்லோ இல்லை.

    பிணர் என்பது ஒரு மரம் என்கிறது சென்னைப் பேரகராதி. பிணர் = False tragacanth, (Botanical name: Sterculia urens).

    பிணர் செந்தணக்கு என்றும், சோங்கு/கோங்கு என்றும் பெயர்கள் உண்டு. கோங்கு பல மரங்களுக்குப் பெயராக உள்ளது: (1) Hopea wightiana (2) Cochlospermum gossypium
    பிணர்:
    https://en.wikipedia.org/wiki/Sterculia_urens
    http://yenforblue.blogspot.com/2015/12/the-white-ghost.html
    https://books.google.com/books?id=iaOUGsZZW_MC& (search Sterculia urens)

    ஆயி – அங்கிருந்த அம்மனோ, அல்லது ஆயம் (இடையர் குடியிருப்பு, சுங்கச் சாவடி) போன்றவற்றால் அடைந்த பெயரோ?

    பிணர் (Botanical name: Sterculia urens) – பூவும், காயும் சொரசொரப்பாக இருப்பது காண்க.

    நா. கணேசன்

    பிணறாயி விஜயன், கேரள முதல்வர், கம்யூனிஸ்ட் கட்சி:
    https://www.thenewsminute.com/article/meet-man-behind-iron-facade-pinarayi-vijayan-keralas-next-chief-minister-43563

    புஷ்கரம் தலத்தில் கார்த்திகேயஸ்வாமி திருக்கோவில்
    https://groups.google.com/forum/#!msg/vallamai/LZEettOi36I/WQ00Qk4MBwAJ

    Share