இந்த வார வல்லமையாளர் (289)
இந்த வார வல்லமையாளராக தென்னிந்தியாவின் பல பழைய வரலாற்று இடங்கள், கோவில் கலைகள், கல்வெட்டுகள் பற்றி விரிவாக வலைச்சுவடி எழுதும் ரா (ராமையா) முத்துசாமி அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பெற்றோர்: இராமையா – பார்வதி அம்மாள்.
இரா முத்துசாமி புதுக்கோட்டை மாவட்டம் இராமசந்திரபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஒரு சிறு கிராமம். எனவே கொங்குநாட்டின் மீது ஒரு ஈர்ப்பும் பிடிப்பும் உண்டு. கல்லூரிப் பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ. (டி.ஆர்.டி.ஓ), சென்னை, ஆவடியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை வாழ்க்கை. 2000 முதல் எழுதத் தொடங்கியுள்ளார். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வலைத்தளங்களில் எழுதி வருகிறார். தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், நாட்டுப்புறவியல், அறிவியல், மற்றும் நடப்புச்செய்திகளிலும் நாட்டம் உண்டு. விக்கிப்பீடியாவில் (தமிழ், ஆங்கிலம்) கட்டுரை தொடக்கம், மேம்படுத்துதல் மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொண்ட அனுபவம் உள்ளது. புகைப்படக்கலையிலும் ஆர்வமுண்டு. சென்னை ஃபோட்டோ வாக் குழுவினருடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மதராசப்பட்டிணத்தின் வரலாறு சார்ந்த இடங்களை புகைப்படங்கள் மூலமாக புகைப்படக் கதையாக வெளியிட்ட அனுபவமும் உண்டு.
https://agharam.wordpress.com/
http://know-your-heritage.blogspot.in/
https://www.facebook.com/muthusamy.ramaiah.5
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )