மக்கள் கேட்கும் கேள்விகள் (4)
பவள சங்கரி
தலையங்கம்
மேன்மைதங்கிய பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,
தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியபோது எங்களுடைய அடுத்த ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இல்லை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?
உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,
தாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியபோது மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறியிருக்கிறீர்கள். ஊழலுக்காகத் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், திரு அசோக் சவானை உங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டும், நீங்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?
வாக்களிப்போம்!
ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!
விலை போகாமல் வாக்களிப்போம்!!!