நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
                    உதவிப்பேராசிரியர்
                    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

’எச்’ தாலுக்காவின் ஐம்பதாம் எண் வாக்குச்சாவடி எதுவென்று தெளிவானது. நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள நெடும்பாவில்

“கலெக்டரின் கணினியில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று இதுதான்” என்பதை முதலாவது சாவடியின் ஆபிஸர் சிவப்பட்டேரிக் கூறினார். உயர் இரத்த அழுத்தத்தைக் காரணம் காட்டி தன்னை தேர்தல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பழக்கப்பட்ட தாலுக்கா ஆபிசின் வாசிலில் நானும் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒரு வாக்குச்சாவடி அசிஸ்டெண்டும் உடன் இருந்தனர். நாங்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருள்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தோம்.

அதற்கிடையில் ஒரு பழக்கமில்லாதவன் எங்க பக்கத்தில் வந்தான்.

”இங்க எங்கே…….?” அவன் நலம் விசாரித்தான்.

”நெடும்பாவிற்கு” நான் சொன்னேன்.

”ஹா! நெடும்பா!

நல்ல இடம்…… .நா பல தடவ அங்க போயிருக்கேன்”  அறிமுகமில்லாதவன் இனம் புரியாத சிரிப்புடன் கூறினான். அவனின் கண்கள் ஜொலித்தது. நான் கொஞ்சம் சந்தேகத்தோடு சிவப்பட்டேரியின் முகத்தைப்பார்த்தேன்.

”அங்கே சௌகர்யமா இருக்குமா?”

சிவப்பட்டேரி அவனுக்கு நேராகத் திரும்பினான்.

சாரே என்ன சௌகர்யம் வேணும்? நல்ல காட்டுப்பூனை போல இருக்கிற பொம்பளங்க இருக்கற ஊருதா. வெளியிலிருந்து வர்ற ஆளுங்களப் பார்த்தாலே குதித்து விழுவாங்க. கறுப்பா இருந்தா என்ன? தேகத்தோட ஒரு வடிவமிருக்கே? போதாக்குறைக்கு பச்ச மருந்துகளோட மணமும்; அறிமுகமில்லாதவன் இவ்வளவும் கூறி, கூடுதலாக வேறெதுவும் கேட்க இடந்தராமல் கூட்டத்தில் கலந்தான்.

மதியவேளை. ஜீப் அதிகவேகமாகப் பாய்ந்தது. நான் ரூட் ஆபிசர்க்கும் டிரைவருக்குமிடையில் அமர்ந்திருந்தேன். சிவப்பட்டேரியும் மற்றுள்ளவர்களும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  பின்னால் அவர்களுக்கு நடுவில் இரண்டு வாக்கு பெட்டிகள். எண்ணி அடுக்கப்பட்ட எண்ணூற்றி முப்பது வாக்கு காகிதங்கள். திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை அழியாத மை. அரக்கு. முத்திரை. காடாத்துணிப் பைகள் முதலியவை. ஜீப் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற நகரக்காட்சிகளில் ஆங்காங்கே காமசூத்ராவின் விளம்பரங்கள். அவை படிப்படியாக இல்லாமல் போனது. வெளிக்காட்சிகள் மாறியது.

காய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செருப்புகளும், தொங்க விடப்பட்ட தோல் சுருளுகளும், நாங்கள் கடந்து செல்வது செருப்பு தைப்பவர்களின் கிராமம் வழியாக என்பதை வெளிப்படுத்தியது.

வரண்ட உற்சாகமற்றச் சற்றுப்புறங்கள். ஏதோ பழமையான ஒரு கடவுளின் கோயிலுக்கு முன்னால் சில சிறுவர்கள் அம்மணமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். நிழல்களில் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள்.

”இனியும் ரொம்பகாலத்துக்கெல்லாம் இவங்க  செருப்பு தயாரிக்க மாட்டாங்க” வயதானவர்கள் மேலிருந்த பார்வையை நகர்த்தி ரூட் ஆபிஸர் கூறினார்.

”அது ஏ அப்படி?” டிரைவர் அந்த காரணத்தை அறிய விருப்பம் காட்டினார்.

”மிருக வதை நிறுத்தப் போறாங்க இல்லையா?. அப்பறம் இவங்களுக்கு தோல் எப்படிக் கிடைக்கும்” ரூட் ஆபிஸர் கம்யூனிசக் கண்ணோட்டத்தோடு கூறினார்.

ஜீப் போய் கொண்டிருந்தது.   காய்ந்த கிளைகளுள்ள மரங்களுக்கிடையில் வெயில் மின்னியது. நான் கண்களை மூடினேன். பிறகெப்போதோ குயவர்களின் ஊர் வந்தது. வரிசை வரிசையாக மண்பாண்டங்கள்.

”நாம இனியும் அந்த எடத்துக்குப் போகல இல்லையா?” பின்னாலிருந்து மூன்றாம் ஆபிஸரான அரபி  மொழியாசிரியர் கேட்டார்.

”பாதி தூரம்தான் ஆயிருக்கு” ரூட் ஆபிஸர் கூறினார். சுவர் விளம்பரங்களோ வெளியில் எங்கும் காணவில்லை. ஒரு பாலைவன பூமி போன்ற இடம் வழியாக ஜீப் நகர்ந்தது.

முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மஞ்சள் கட்டிடத்தின் முன்பாக ஜீப் தனது பயணத்தை முடித்தது. அரசு அலுவலகம் என்று சுவரில் கறுப்பு நிற எழுத்தால் குறிக்கப்பட்டிருந்தது. நான் வெளியிலிறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். செம்மண் மைதானத்தின் ஓரங்களில் கறுப்பு நிறப் பாறைகளும், நரைத்த முடி போன்ற ஒரு வகை புல்லும், வடக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரமும் அசையாமல் நின்றது.

”இங்கேயெல்லாம் யாரையுமே காணோமே” சிவப்பட்டேரி சொன்னான்.

”ஆளுக எல்லாம் அங்கக் கீழே இருப்பாங்க. ரூட் ஆபிஸர் காற்றாடி மிஷினுக்கு நேராக கை காண்பித்தார்.

போலிங் அசிஸ்டெண்டும், மற்ற இரண்டு சாவடி ஆபிஸர்களும் ஜீப்பிலிருந்து தேர்தல் அறைக்கான பொருட்களைக் கீழே இறக்கினர். ரூட் ஆபிஸர் கட்டிடத்தைத் திறந்தார். அதற்குள்ளிருந்து நாற்றம் வந்தது.

“நாசம் புடிச்ச எலிங்க. நேத்துதா அத்தன எலிப்பீயையும் எடுத்து வீசினேன்” ரூட் ஆபிஸர் கோபப்பட்டார்.

எலிகளை எங்கும் பார்க்க முடியல ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்கிற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன.

”பாத்துக்கோ இன்னைக்கு இங்க ஆளிருக்கு. தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியும்  புடிச்சு ஒரு போலீஸ்காரணும் நிப்பா” ரூட் ஆபிஸர் எலிகளை மிரட்டினார். அவைகளோ அவரின் மிரட்டலை ஏற்றுக்கொண்டது போல மேலும் சத்தமிட்டது.

“பரவால்லே” ரூட் ஆபிஸர் தனது வேலையில் ஈடுபட்டார். அவருக்கு அவசரமாகத் திரும்பிப்போக வேண்டியிருந்தது.

”கீழே ஐயா என்கிற ஆளோட டீக்கடை இருக்கு. சாப்பாடு அங்கே கிடைக்கும். தண்ணிக்கும் பிரச்சனையில்லை. இதுக்கு மேலே ஒரு சௌகர்யம். இந்த மாதிரி இடத்தில எதிர் பார்க்கக் கூடாது இல்லையா?”. அவர் அலுவலகத்தின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கு நேராக நடந்தார்.

நாங்க வேலை தொடங்கினோம். நெடும்பாவில் வெயில் மங்கத் தொடங்கியது. இருட்டறதுக்கு முன்பு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. அதிகாலைல எழுந்திருக்க வேற செய்யணும். போலிங் ஏழு மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். திடீரென என்னமோ மேலிருந்து வந்து எங்களுக்கு நடுவில விழுந்தது.

நான் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடினேன். வெளியில் கறுப்புநிறச் சிறுவன். அவனுடைய கண்களில் விசித்திரமானப் பார்வை தெரிந்தது. ஒன்று ரெண்டு நிமிடங்கள் அவன் அப்படியே நின்றுவிட்டு வேகமாக ஓடினான்.

ஒரு கல்லில் பொதிந்து எதையோ அவன் எங்களுக்கு நடுவில் எறிந்த செய்தியை அதற்குள் அனைவரும் வாசித்திருந்தனர்.

”ஒ. இது கொடூரம் தான்” அரபி மொழியாசிரியரின் முகம் வெளிறியது.

”நாம என்ன பண்றது”?. ரெண்டாம் போலிங் ஆபீஸரான ஓவிய ஆசிரியர் பயத்தோடு கேட்டார்.

வெளியில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. எங்களது கவனம் அங்கே திரும்பியது. கரும் நீல நிற வாகனம் ஒன்று மைதானத்திற்கு அருகில் நின்றது. யூனிஃபோம் அணிந்த ஒரு போலீஸ்காரன் கையில் மூங்கில் தடியும் மற்றொரு கையில் பையுடன் இறங்கினான். பையை கீழேவைத்துவிட்டு மூங்கில் தடியை இடது தோளில் சொருகிவிட்டு வாகனத்தின் முன்சீட்டில் இருக்கும் மேலதிகாரியை அதிகாரப்பூர்வமாக வணங்கினார். வாகனம் திரும்பிச் செல்லும்வரை அவர் அதே நிலையில் நின்றார்.

”அப்பாடா! சரியான நேரத்துக்கு போலீஸ்காரர் வந்தாரே” போலிங் அசிஸ்டெண்ட் ஆபிஸர் நிம்மதியடைந்தார்.

”ஒவ்வொரு கல்லையும் நான் அசைத்து பார்ப்பேன். நெடும்பாவில் இருக்கிற ஒவ்வொரு கல்லையும்” போலீஸ் ஆபிஸர் நெடும்பாவில் கிராமம் வழியாக நடக்கும்போது என்னுடன் வந்த அவர் சத்தம்போட்டுக் கூறினார்.

”யாரு அந்த பையன்? பதுங்கி நிக்காம சீக்கிரமா வெளில வர்றதுதான் நல்லது”. அவர் புல்தரையில் நின்றுகொண்டு சத்தமிட்டார் பதிலொன்றும் எழவில்லை

”எல்லோரோட முட்டியயும் அடிச்சு ஒடச்சிருவேன். வாடா வெளில” அவர் ஷூக்களணிந்த வலது காலை நிலத்தில் ஓங்கி அடித்தார்.

”சார் இங்க நில்லுங்க, நானொரு கை பாக்கறே” அவர் ஒரு வேட்டைநாயைப்போல இருப்பக்கங்களிலும் கவனமாகப்பார்த்துக் கொண்டு ஒரு வைக்கோல் போருக்குப்பின்னால் மறைந்தார். சிறிது நேரம் கழிந்து வெற்றியரவத்தோடு அவர் வெளியில் வந்தார். அவருடன் கூனிக்குறுகி நடுங்குகின்ற ஒரு கிழவனுமிருந்தார்.

”நானிந்த ராஸ்கலைப்  வைக்கோலுக்குள்ளிருந்துதான் புடிச்சேன். போலீஸ்காரன் அவரை எனக்கு முன்னால் நகர்த்தி நிறுத்தினார்.

வயதானவரின் கண்களில் வெண்மைநிற அடையாளம் இருந்து.

”சொல்லடா. உன்னோட பேரு என்னான்னு?” போலீஸ்காரர் கர்ஜித்தார்.

”சௌக்கார்” கிழவன் கூறினான்.

”அந்த திமிரெடுத்த பையன் உன்னோட யாரு?

கிழவன் பேசவில்லை. அதற்குள் மறைவிடங்களிலிருந்து பலரும் வந்தனர். கறுப்பு நிற சிலை போன்ற முகங்கள்.

”ஓ ஒளிஞ்சிருந்தீங்களா? போலீஸ்காரன் ஏளனமாகக் கேட்டு மற்றுள்ளவர்களுக்கு நேராக நகந்தார். அவர்கள் யாரும் அசையவில்லை. உறைந்தக்காட்சிகள்.

”பரவாயில்ல. இங்க உங்கக் கூட்டத்தில நிறைய அழகிக இருக்காங்கனு கேள்விப்பட்டேனே. அவங்க எல்லா எங்கே? பச்ச மருந்துகளோட வாசனை தானே அவங்களுக்கு”?

போலீஸ்காரர் தன்னை உற்றுப்பார்க்கின்றவர்களுக்கு முன்னால் மூங்கில் தடியை வாயுவில் சுழற்றிக்கொண்டு நடந்தார்.

“காட்டுப்பூனைகளோட அறிவு. பச்சை மருந்துகளோட வாசம்.

”நானிங்க வந்ததே அதையும் மனசில வெச்சுதா. ட்யூட்டி மட்டும் வேணும்னா எனக்கு வேற ஏதாவது இடத்தில வாங்கியிருக்கலாம்” போலீஸ்காரன் சிரித்தான். அவருடைய மூங்கில் தடி அப்போது வலது கை தொடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

“சார் நமுக்குப் போகலாம்” நான் அவரை அழைத்தேன்.

“உம். ஆனா நா இங்க வருவே. எனக்கு வேண்டியது நல்ல பரங்கி மாங்காய் வற்ற வெச்ச சாராயமும், ஒரு கோழியும், ரெண்டு பொம்பளைகளும். புரிஞ்சுதா? ” அவன் என்னுடன் நடந்தார்.

நான் திரும்பி பார்த்தபோது. பார்வை, துணுக்கு செய்தி அனுப்பின சிறுவனை எங்களுடைய கண்கள் அடைந்தது. ஒரு நிமிடம் நான் திகைத்துப்போனேன்.

”இத பாத்தீங்களா? டீக்கடை நடத்தும் ஐயா, கரிபடர்ந்த சுவரில் உள்ள ஒரு நோட்டீஸை சுட்டிக்காண்பித்தார்.

”நெடும்பாவில் சொல்கிறது” அதுதான் நோட்டீஸின் தலைப்பு சிவப்பு எழுத்துக்கள்.

யாரு இத இங்க ஒட்டனாங்கனு தெரியல, ஆனா புடுங்கி வீச தைரியமில்லை”. ஐயா சொன்னார். அவர் பச்சை நிறமுள்ள அரைக்கை ஆடையும், முழங்கால் வரைக்கட்டிய துண்டும். காதில் சின்ன கடுக்கணும் அணிந்திருந்தார். அவருடைய கால் முழங்காலுக்குக் கீழே சொரிந்து வீங்கியிருந்து.

பார்த்துக் கொண்டிருக்கவே நெடும்பாவில் இருட்டானது. எலிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. வெளியில் மைதானத்தில் சத்தமிட்டுக் கொண்டு  காற்று வீசியது. இந்த சப்தங்கள் அச்சத்தை உருவாக்கின.

”காற்று இப்படி ஓசையிடுவதை நான் இதுவரைக் கேட்டதே இல்லை” சிவப்பட்டேரி கூறினான்.

தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல்கள் காற்றில் ஆடியது. உடனே வந்தர்றேன்னு சொல்லிட்டுப்போன போலீஸ்காரர் இனியும் வரவில்லை. காற்று சற்று அதிகமானது. நான் கேட்கறது போலீஸ்காரரோட அலறல்னு எனக்கு ஏதோ தோன்றியது. ஒரு வைக்கோல் போருக்கு முன் ஒரு விலங்கைப் போல நின்று அவர் அலறிக்கொண்டிருந்தார். தீ எரிந்து கொண்டிருந்து. அவரின் உருவம் தீ வெளிச்சத்தில் தெளிவானது. அவர் அம்மனமாக நின்றிருந்தார். குறிகள் தொங்கிக் கொண்டிருந்தது.

”நாம கூப்பிட்டுப்பார்த்தாலோ” நான் சிவப்பட்டேரிகிட்ட சொன்னேன்.

அவர் உடனே என்னுடன் புறப்பட்டார். அவரிடம் டோர்ச் லைட் இருந்தது. நாங்க காற்றை எதிர்த்து நடந்தோம். இடைவெளி இல்லாத இருட்டில் காற்று ஆரவாரித்துச் சென்றது. புழுதி எங்களை மூடியது. பாறைகளின் வெப்பம் தணிந்திருக்கவில்லை.

”ஓய்”. ஒரு பாறைக்கு மேல் ஏறி நின்று சிவப்பட்டேரி கூவி விளித்தார்.

அது இருட்டில் எங்கோ கலந்தது. மற்றொரு பாறையில் நான் ஏறி நின்றேன். நெடும்பாவின் கூரிருட்டைப் பார்த்து நான் சத்தமிட்டேன்.

ஓய்…………….ஓய்.…………………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.