சி. ஜெயபாரதன், கனடா

மண்ணை நம்பி
மரம் இருக்குது செல்லப் பாப்பா.
மழையை நம்பி
மண் இருக்குது நல்ல பாப்பா.
காற்றை நம்பி
மழை பொழியுது கண்ணு பாப்பா.
மரத்தை நம்பி
குருவி வசிக்குது கருத்த பாப்பா.
பயிரை நம்பி
பறவை தேடுது உறவு பாப்பா.
உயிரை நம்பி
உடல் உள்ளது கண்ணு பாப்பா.
உடலை நம்பி
உயிர் இருக்குது சின்ன பாப்பா.
தாயை நம்பி தொட்டிலில்
சேய் தூங்குது செல்லப் பாப்பா.
சேயை நம்பி
தாயும் பால் கொடுப்பாள்
தங்கப் பாப்பா.
பெத்த தாய் ஏன்
பெண் சிசுவை அழிப்பதெனக்
கேளு பாப்பா ?
குப்பைத் தொட்டியை
எட்டிப் பார்த்தால்
“இங்கா, இங்கா” மழலை கேட்குது
தங்கப் பாப்பா.
முதியோரைக் கண்காணிப்பு
இல்லத்திலே
தள்ளுவது ஏனென்றும்
கேளு பாப்பா?
ஊருலகில் வாழ்வதற்கு
யாரை நம்பி யார் இருக்கார்
கூறு பாப்பா ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *