மகாகவி சுப்பிரமணிய பாரதி

bharati

(ராகம் – நாட்டை, தாளம் – சதுஸ்ர ஏகம்)

மலரின் மேவு திருவே! – உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் – காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும், – தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் – கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன்.

கமல மேவும் திருவே! நின்மேல்
காத லாகி நின்றேன்;
குமரி தன்னை இங்கே – பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன், – என்மேல்
அன்பு கொள்வை யாயின்;
இமய வெற்பின் மோத, – நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன்.
Lakshmi
வாணி தன்னை என்றும் – நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம் – நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் – கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ?

பொன்னும் நல்ல மணியும் – சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ – திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் – தழுவி
நிக ரிலாது வாழ்வேன்.

செல்வ மெட்டு மெய்தி – நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்:
இல்லை என்ற கொடுமை – உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல் – காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! – எனை நீ
என்றும் வாழ வைப்பாய்.

===============================

படங்களுக்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *