கவிநயா

நறுக்… துணுக்……(13)

சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு.

இந்த மாதிரி பிரயாணம் பண்ணும்போதுதானே குருட்டாம்போக்குல யோசனை ஓடும்? (அப்ப மட்டுந்தானான்னு கேக்குறீங்க… தெரியுது தெரியுது!). அப்ப தோணுச்சு, நம்ம ஊர்லன்னா அங்கங்க நிறுத்தி நிறுத்தி, வழியில் வர்ற ஆளுங்களை வழி கேட்டுக்கிட்டே போயிருவோம், இங்க இப்படி நாமளே கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்தி பாத்துக்கிட்டே வர வேண்டியதா இருக்கே, அப்படின்னு. அது கூட பரவாயில்லை, கொஞ்சம் விட்டுட்டோம்னா, சுத்தி கித்தி, தொலைஞ்சு போயி, மறுபடி சரியான வழியைப் பிடிக்கிறதுக்குள்ள டென்ஷன் ஆகி… போதும் போதும்னு ஆயிடும்.

அந்த குருட்டாம்போக்கு யோசனையின் போதுதான் நம்ம ஊர்ல சொல்ற பழமொழி நினைவு வந்தது – ‘வாயுள்ள புள்ளை பிழைக்கும்’னு சொல்வாங்க இல்ல? அதே போல ‘வாயில இருக்கு வழி’, அப்படின்னும் சொல்வாங்க. அதாவது பேச்சுத் திறமை இருந்தா போதும், பொழச்சுக்கலாம். வாயத் தொறந்து சங்கோஜமில்லாம வழி கேக்க தெரிஞ்சா போதும், ஊர் போய்ச் சேந்துரலாம்.

‘வாயில இருக்கு வழி’ பத்தி நினைக்கும் போதுதான் ‘பளீர்’னு ஒரு பல்பு எரிஞ்சது. ஒரு வேளை இது ஆன்மீக சம்பந்தமாக ஏற்பட்டதோ, அப்படின்னு. பலப்பல மகான்களும், நாம சங்கீர்த்தனம்தான் இறைவனை அடைய கலியுகத்தில் சுலபமான வழின்னு சொல்லியிருக்காங்க. நாம சங்கீர்த்தனம் வாயினாலதானே பண்ணனும்? அதன்படி பார்த்தா, இறைவனை அடையும் வழி வாயில்தானே இருக்கு!

இது எப்படி இருக்கு? 🙂

படத்திற்கு நன்றி:

 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வாயில் இருக்கு வழி!

  1. ஆனா எனக்கு சமீபத்தில்தான் இப்படி தோணுச்சு 🙂 வாசிச்சதுக்கு நன்றி கார்த்திக்.

  2. மனசுல இருக்கு வழி. வாயை இயக்குவதும் மனமே. மனதினால் நினைத்தாலே இறையுடன் இணைய இயலும்.

    இனிமே தூரப் பயணம் போவதற்கு முன் கூகிள் மேப்பிலிருந்து ஒரு ப்ரிண்ட்டவுட் எடுத்துக்கொண்டு செல்லவும்.

    GPS ஒரு முறை தவறாக வழிகாட்டி கடலினருகே இருக்கும் கடற்படை ராணுவ அதிகாரி நிறுத்தியதும்தான் , ‘அடடா… இப்படி மாட்டிக்கொண்டோமே… அதுவும் 31-டிசம்பர்-2011 இரவு..’ என… GPS அந்த நாளை என்றுமே மறக்கமுடியாத நாளாக அமைத்துவிட்டது.

  3. //மனசுல இருக்கு வழி. வாயை இயக்குவதும் மனமே.//

    ரொம்ப technical -ஆ போயிட்டீங்க 🙂 வாசிச்சதுக்கு நன்றி ரிஷி ரவீந்திரன்.

  4. வாஸ்தவம் தான். ஆனால் இசை பாடும் வாயுடன், மனம் முதலில் இசையவேண்டுமல்லவா! எதற்கும் எனக்கு தெரிந்த வாயுள்ள பிள்ளை. கிராமத்திலிருந்து சென்னை வந்த பையன் காணாமல் போய்விட்டான். போலீச்காரன் கிட்ட போய் சொல்றான்: ‘என் அப்பா காணாம போய்ட்டார். மைக்லே கூப்பிடுங்கள். அவர் பெயர் தணிகாசலம்.”
    வந்தாரே, ஓடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *