ஜெ.ராஜ்குமார்

 

தத்தித் தவழும் காலங்களில்

நடை பயிலக் கற்றுக் கொடுத்தாள் அம்மா!

என்

கண்களினின்றும் கண்ணீர் வந்தால் – எனை

மடியில் போட்டுக்

கண்ணீர் துடைப்பாள்!

 

துள்ளிக் குதித்த காலங்களில்

பள்ளி செல்லும் –

பக்குவம் கற்றுக் கொடுத்தாள்!

சொல்லில் சிறந்தவனாய் –

வெல்லும் தனித்திறமை

நாளும் கற்பித்தாள் –

நலமுடன் நான் வாழவே –

நல்ல உளமுடன் எனை அரவணைத்தாள்!

தெளிவுடன் நான் நடக்கும் – என் பாதை

தெரிந்தவர் பின்பற்றவே – எனை

உயிருடன் உருவாக்கினாள் – எனை

உயரத்தில் வைத்துப் பார்த்தாள்!

 

சிகரத்தைத் தொட்டு விடும் தைரியம் எனக்கிருக்கு!

விந்தை பல புரியும் சக்தியுமிருக்கு!

தந்தையும் தாயும் பெற்றெடுத்த செல்வன் நான்

சந்தனத் தேரிலே ஊர்வலம் வருவேன்.

அன்னையின் அரவணைப்பில் –

விண்ணையும் தாண்டிடும் என் எண்ணங்கள் யாவுமே!

 

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-45803236/stock-photo-portrait-of-angelic-baby-and-his-mother.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.