ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 2)
சத்தியமணி
நவமணிகள் மின்னும் மாலைகள் அழகுபார்த்து
பெருத்த மார்பகத்தில் அலங்கரித்து வாழியவே
நலங்களைக் கவரியாக்கி கவிகளை கிரிடமாக்கி
சொகுசாய் வீற்றிருக்கும் பேரழகே வாழியவே
தாடங்கம் மின்னலிடும் அகிலாண்ட நாயகியோ
இல்லையந்த திருக்கடவூர் அபிராமியோ
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 3
கிளிகள் நாடும்கனி வண்டுகள் நாடும்மது
பொருளை நாடுவோர்க்கு திருமகளே வாழியவே
கவிகள் தேடும்சபை களிக்கும் உந்தன்அவை
அருளைத் தேடுவோர்க்கு மலைமகளே வாழியவே
துளிகள் வெள்ளமாகும் துயரம் யாவும்தீறும்
ஒளியில் ஆனந்தமாய் தெரிபவளே வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 4