சத்தியமணி
நவமணிகள் மின்னும் மாலைகள் அழகுபார்த்து
பெருத்த மார்பகத்தில் அலங்கரித்து வாழியவே
நலங்களைக் கவரியாக்கி கவிகளை கிரிடமாக்கி
சொகுசாய் வீற்றிருக்கும் பேரழகே வாழியவே
தாடங்கம் மின்னலிடும் அகிலாண்ட நாயகியோ
இல்லையந்த திருக்கடவூர் அபிராமியோ
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 3
கிளிகள் நாடும்கனி வண்டுகள் நாடும்மது
பொருளை நாடுவோர்க்கு திருமகளே வாழியவே
கவிகள் தேடும்சபை களிக்கும் உந்தன்அவை
அருளைத் தேடுவோர்க்கு மலைமகளே வாழியவே
துளிகள் வெள்ளமாகும் துயரம் யாவும்தீறும்
ஒளியில் ஆனந்தமாய் தெரிபவளே வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 4

Leave a Reply