ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 2)

0

சத்தியமணி

நவமணிகள் மின்னும் மாலைகள் அழகுபார்த்து

பெருத்த மார்பகத்தில் அலங்கரித்து வாழியவே

நலங்களைக் கவரியாக்கி கவிகளை கிரிடமாக்கி

சொகுசாய் வீற்றிருக்கும் பேரழகே வாழியவே

தாடங்கம் மின்னலிடும் அகிலாண்ட நாயகியோ

இல்லையந்த திருக்கடவூர்  அபிராமியோ

ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !  3

 

 

கிளிகள் நாடும்கனி வண்டுகள் நாடும்மது

பொருளை நாடுவோர்க்கு திருமகளே வாழியவே

கவிகள் தேடும்சபை களிக்கும் உந்தன்அவை

அருளைத் தேடுவோர்க்கு மலைமகளே வாழியவே

துளிகள் வெள்ளமாகும் துயரம் யாவும்தீறும்

ஒளியில் ஆனந்தமாய் தெரிபவளே வாழியவே

ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *