சிறு கை அளாவிய கூழ் (1)
இவள் பாரதி
காய்கறிகள்

நாற்காலிகள்
பொம்மைகள்
விளையாட்டுப் பொருட்கள்
துணிமணிகள்
துண்டுத்தாள்கள்
என வீட்டிலிருக்கும் யாவற்றையும்
உன் குட்டிக்கையால் தொட்டு
சாபம் நீக்குகிறாய்
பின் புனிதப்படுத்துகிறாய்
சின்னஞ்சிறுவாயில் எச்சில்படுத்தி
===
இருமலையும்
தும்மலையும்
சத்தமின்றி நிகழ்த்தும்
அனிச்சை வாய்த்துவிடுகிறது
உன் உறக்கம் கலையாமல்