நாற்காலிகள்
பொம்மைகள்
விளையாட்டுப் பொருட்கள்
துணிமணிகள்
துண்டுத்தாள்கள்
என வீட்டிலிருக்கும் யாவற்றையும்
உன் குட்டிக்கையால் தொட்டு
சாபம் நீக்குகிறாய்
பின் புனிதப்படுத்துகிறாய்
சின்னஞ்சிறுவாயில் எச்சில்படுத்தி
’புதிய தலைமுறை’ இதழில் நிருபர். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர். புத்தக வடிவமைப்பாளர். இதுவரை ஏழு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய கவிதைத் தொகுப்பு ப்ரியங்களின் அந்தாதி முகவரி வெளியீடாக வந்துள்ளது. புதிய தலைமுறையில் இவர் எழுதிய தொடர் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரது சிறுகதைத் தொகுதி விரைவில் வெளிவர உள்ளது