பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..
பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..- வீரத்திரும
பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..
பருவத் தாமரை உருவம் கொண்டு பக்கம் வந்தாளோ பெண்ணென்று!
மனதின் ஆசையலைகளையே வடித்துத் தந்தாயோ பாடலென்று!
காட்சிமையப்பில் புதுமையாக ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வீரத்திருமகன் பாடலிது! கதையின் நாயகன் நாயகியை மனதில் நினைத்துப் பாடுகிறாள் இடையில் மயங்கிய இன்னொருத்தி இதற்கு.. நடனமாடுகிறாள். ஒருவரையொருவர் காணாமலே பாடல் முழுவதும் நடந்திருக்க..
கவிதைச் சுகத்தை உள்வாங்கி.. இசையின் கலவை மிளிர்ந்திருக்க.. பி.பி.சீனிவாஸ் குரலில் தவழ்ந்துவரும் காதல் பாடல் இதுவன்றோ?
திரு. ஆனந்தன் திரையில் தோன்ற ஆரணங்காய் ஈ.வி.சரோஜா நடனமிட பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்கிற பல்லவி இரவருக்கும் பொருந்த.. வழக்கமான அர்த்தப் புஷ்பங்களை நிறைத்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.
அண்மையில் பத்மஸ்ரீ பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வானம்பாடி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) கவிதைப் பாற்கடலில் அமுதம் எடுத்துத்தர நிரந்தர நாயகனாய் எங்கள் கவிஞர் பிறைசூடன் வழங்கிய புதிய பரிணாமத்திற்கு மற்றுமொரு முறை இதயம் நிறைந்த நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்ன தெரியுமா?
மிச்சமா.. மீதமா.. இன்னும் வேண்டுமா என்று ஒரு வரி..
மிச்சம் என்றால் என்ன? மீதம் என்றால் என்ன?
உதாரணத்திற்கு.. இனிப்புப் பண்டம் ஒன்றைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை அதனை சேமித்து வைத்தல்..
மற்றொரு வகையில்.. கணவன் தான் உண்ணும் இலையில் மிச்சம்வைத்து மனைவியை எடுத்துக்கொள் என்கிறான். அதை சேமித்து வைக்க முடியாது. அவள்தான் அப்போதே சாப்பிட வேண்டும்.
காதலைப் பற்றி எழுதும் போது.. கண்ணதாசன் தருகின்ற வார்த்தைப் பதங்களில்.. மிச்சமா.. மீதமா.. உன்னை மிச்சமாய் வைக்கவா..மீதமாய் தீர்க்கவா என்று கேட்கிற நயம் கவிஞரின் கற்பனையில் தோன்றிய மின்னலா? கவிதையில் அழகைச் சுமந்துவரும் தென்றலா?
ஒரு பாடலில் இடம்பெற்ற இரண்டு வார்த்தைகளுக்கு இத்தனைப் பொருள் என்றால் கண்ணதாசனே.. உன் கவிதைக் கடலில் முத்துக்களோ காலங்கள் பல கடந்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பேன்!
பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்..
காணாத கண்களை காணவந்தாள்..
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்..(2)
மேலாடைத் தென்றலில் ஆகாகா…
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்..
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்.. (பாடாத பாட்டெலாம்)
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து சேரம்மா.. [பாடாத பாட்டெலாம்]
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
பருவத் தாமரை உருவம் கொண்டு பக்கம் வந்தாளோ பெண்ணென்று!
மனதின் ஆசையலைகளையே வடித்துத் தந்தாயோ பாடலென்று!
காட்சிமையப்பில் புதுமையாக ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வீரத்திருமகன் பாடலிது! கதையின் நாயகன் நாயகியை மனதில் நினைத்துப் பாடுகிறாள் இடையில் மயங்கிய இன்னொருத்தி இதற்கு.. நடனமாடுகிறாள். ஒருவரையொருவர் காணாமலே பாடல் முழுவதும் நடந்திருக்க..
கவிதைச் சுகத்தை உள்வாங்கி.. இசையின் கலவை மிளிர்ந்திருக்க.. பி.பி.சீனிவாஸ் குரலில் தவழ்ந்துவரும் காதல் பாடல் இதுவன்றோ?
திரு. ஆனந்தன் திரையில் தோன்ற ஆரணங்காய் ஈ.வி.சரோஜா நடனமிட பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்கிற பல்லவி இரவருக்கும் பொருந்த.. வழக்கமான அர்த்தப் புஷ்பங்களை நிறைத்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.
அண்மையில் பத்மஹீ பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வானம்பாடி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) கவிதைப் பாற்கடலில் அமுதம் எடுத்துத்தர நிரந்தர நாயகனாய் எங்கள் கவிஞர் பிறைசூடன் வழங்கிய புதிய பரிணாமத்திற்கு மற்றுமொரு முறை இதயம் நிறைந்த நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்ன தெரியுமா?
மிச்சமா.. மீதமா.. இன்னும் வேண்டுமா என்று ஒரு வரி..
மிச்சம் என்றால் என்ன? மீதம் என்றால் என்ன?
உதாரணத்திற்கு.. இனிப்புப் பண்டம் ஒன்றைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை அதனை சேமித்து வைத்தல்..
மற்றொரு வகையில்.. கணவன் தான் உண்ணும் இலையில் மிச்சம்வைத்து மனைவியை எடுத்துக்கொள் என்கிறான். அதை சேமித்து வைக்க முடியாது. அவள்தான் அப்போதே சாப்பிட வேண்டும்.
காதலைப் பற்றி எழுதும் போது.. கண்ணதாசன் தருகின்ற வார்த்தைப் பதங்களில்.. மிச்சமா.. மீதமா.. உன்னை மிச்சமாய் வைக்கவா..மீதமாய் தீர்க்கவா என்று கேட்கிற நயம் கவிஞரின் கற்பனையில் தோன்றிய மின்னலா? கவிதையில் அழகைச் சுமந்துவரும் தென்றலா?
ஒரு பாடலில் இடம்பெற்ற இரண்டு வார்த்தைகளுக்கு இத்தனைப் பொருள் என்றால் கண்ணதாசனே.. உன் கவிதைக் கடலில் முத்துக்களோ காலங்கள் பல கடந்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பேன்!
பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்..
காணாத கண்களை காணவந்தாள்..
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்..(2)
மேலாடைத் தென்றலில் ஆகாகா…
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்..
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்.. (பாடாத பாட்டெலாம்)
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து சேரம்மா.. [பாடாத பாட்டெலாம்]