தூங்காதே.. தம்பி தூங்காதே.. – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

0

— கவிஞர் காவிரிமைந்தன்.
thoongathe thambi

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

அறிவுரைகள் என்பது பொதுவாகவே வேம்பாகக் கசக்கும் மனிதருக்கு!  அனுபவரீதியாக பட்டு உணர்ந்தவர்கள் சொல்லும்போது அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதுகூட சிரமமாகத் தெரிவது உண்டு!  ஆனாலும் திரைப்படம் என்னும் ஊடகம் வழியே சரியான கதை, திரைக்கதை, காட்சியமைப்போடு பின்னப்படும் பாடல்களில் இத்தகு அறிவுரைகள் மக்களால் முழுக்கவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திக் கதை சொல்லும் சிறை கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்

pattukkottaiபட்டுக்கோட்டையார் பாடல்கள் பெரும்பாலும் இந்த ரகம்!  அதுவும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு எழுதப்பட்வை புடம் போட்டத் தங்கம் எனலாம்!  எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையமைப்பில் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!

தூங்காதே.. தம்பி தூங்காதே..

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்

எழுதப்பட்ட காலம் முதல் என்றைக்கும் பொருந்தும்வரிகள்!  இது வெறும் பாட்டு அல்ல! மனிதன் வாழ வேண்டிய முறை அறியச் செய்யும் இரகசியச் சீட்டு!

போர்  படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

அளவுக்கு மீறிய தூக்கத்தால் விளையும் ஆபத்துக்களைப் படம்பிடித்து அளவான வரிகளிட்டு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.  டி.எம்.செளந்திராஜன் குரலில் எம்.ஜி.ஆர் அவர்களது நடிப்போடு மக்கள் மனதில் ஒன்றிக்கிடக்கும் பாடல்களில் இது ஒன்று!

மொத்தத்தில் இது வெற்றிப் பாடல் மட்டுமல்ல!  சோம்பேறித்தனத்திற்கு வைத்திட்ட வேட்டு!!

http://youtu.be/AKuKGJGu1yw

காணொளி: -http://youtu.be/AKuKGJGu1yw

திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)
இசை: S.M. சுப்பையா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

தூங்காதே தம்பி… தூங்காதே…
தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பி… தூங்காதே…

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்…
போர்  படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி… தூங்காதே…
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி… தூங்காதே…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.