— கவிஞர் காவிரிமைந்தன்.

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
ஒளியும் இருளும் சந்தித்துக் கொள்ளும் இனிய மாலை நேரம்..
கதிரும் மேற்கில் மறைந்து இருளே உலகை ஆளும் ..
கடலின் அலைகள் வழக்கம்போல் வந்து சிந்து பாடும்
வானின் நிலவும் வந்து தன் எழில் முகத்தை அங்கே காட்டும்..
இவைகளுக்கு இடையில் தலைவன் அங்கே வந்து சேர்ந்துவிட்டால் இன்பத்திற்கே திறந்து வைத்த உலகம் இதுவே எனலாம்!
எழிலாள் முகத்தை எப்படி எப்படி வர்ணிக்க முடியுமோ என்று ஏடெடுத்து எழுதுகின்றான் காதலன் இங்கே பாரீர்!
முகிலைக் கிழித்து முழுவதும் காட்டும் நிலவினைப் போலவே நீயும் – கார்
குழல் மறைத்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்டுகின்றாயோ நின் அழகை..
முழுமனதோடு ஒருமித்துக்கிடக்கும் இதயங்கள் இரண்டும் ஒன்றும்!
பெருமிதத்தோடு தொடருகின்ற கவிதையில் காதல் மஞ்சம்! மஞ்சம்!
அழகைப் பற்றி அழகாய் கவிதை அசைந்து வருகிறது பாருங்கள்!
அளவாய் வார்த்தை அன்பாய் சொல்லி அங்கே நிற்குது காணுங்கள்!
இளமை இனிமை இணைந்து நிற்கும் பேரழகின் ஊர்வலம்!
இன்பம் இன்பம் என்றே மயங்கும் கண்கள் நான்கின் சங்கமம்!
கவிஞர் வாலி வரைந்தளித்த காதல் ஓவியம்!
வார்த்தையில் சொன்னால் ஒரு காவியம்!
http://www.youtube.com/watch?v=xUFY8ZR-o4Q
காணொளி: http://www.youtube.com/watch?v=xUFY8ZR-o4Q
பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
திரைப்படம்: சந்திரோதயம் (1966)
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
…………………………………………………………………………………….சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ?
என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ?
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ?
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆமுத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ?
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையேஇதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ




Leave a Reply