கே. ரவி

 

“(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)

 

தோகமயில் ஒண்ணு!

 

[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

 

imb5

 

தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ
எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ
பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ

காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா
கனவா மொதக்குறா நெஞ்சில் சொமந்தா
ஆத்துமணல் எல்லாம் அள்ளித் தெளிச்ச – ஒரு
வெள்ளிநெலவா என் மேல படர்ந்தா – என்
உள்ளத்துல சூரியனப் போல எழுந்தா
(தோகமயில் ஒண்ணு)
ஓட தூங்க இந்த ஊர்தூங்க
ஓசையில்லாம காத்தும் தூங்க
மானம் தூங்கப் பச்ச வயல் தூங்க – என்
மார்பில் சாஞ்சபடி அவ தூங்க – என்
மனசு மட்டும்தான் தூங்கலடீ – அதில்
பாட்டுச் சத்தம் இன்னும் ஓயலடீ
(தோகமயில் ஒண்ணு)

ஓவியத்திற்கு நன்றி : இளையராஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *