— சுமதி ரவிச்சந்திரன். 

 

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.”

தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என்ற அனைத்து வகையிலும் ‘கரம்’ என்ற மூன்றெழுத்தில் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற எம்.ஜி. ஆர். என்ற ‘பொன்மனச்செம்மல்’ அவர்களின் மக்களின் மனத்தில் நிறைந்த தன்மையை இக்கட்டுரையின் வழி இயம்புவதில் பெருமையடைகிறேன்.

mgrமூன்றெழுத்து வலிமைமிகு, பெருமைமிகு, தருமம் மிகுந்த தன்னுடையச் சிவந்த கரங்களால் தனிப்பெரும் பெருமை பெற்ற கலைமாமணி, பாரதரத்னா அவர்களின் நினைவுகளும் கட்டுரை வடிவில் தருவதில் பெருமை செய்யும் ‘வல்லமை’ இதழுக்கும் வணக்கங்கள்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று திரைப்படப் பாடலின் வரிகளிள் தவழ்ந்துவருவது இனிமையாகும் என்று நினைத்து வியந்து நின்றதும் உண்டு. “மூச்சு” என்ற மூன்றெழுத்து வழி ஈழம் – பொன், பெருமை மனிதர், தங்கமனிதர் என்ற பெருமையும் எம்.ஜி. ஆர். என்ற பெயரின் முதல் எழுத்து சுருக்கத்தில் வியந்து நிற்கும் அளவுக்கு நடிப்பிலும், கொடையிலும் , அன்பு, பண்பு, பாசம், உபச்சாரம் என்ற அனைத்து அளவிலும் தனிப்பட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த, மாபெரும் சபைகளின் வழி நடந்து ‘ புகழ் மாலைகள் ‘ ஏற்றுக்கொண்டு நம்மிடையே வாழ்ந்தவர்.

ஈழம் என்பது சிங்கதேசம் என்பது மட்டுமல்ல. ஈழம் – பொன் , பொன் தீவில் பிறந்த மனிதர் ‘பொன்மனச்செம்மல் ‘என்பதில் சாலவும் பொருத்தமானவர். தவப்புதலவன் பிறந்த நாளின் எண்ணான ‘ ஏழு ‘ என்பதும் ஏற்றமிகு வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைந்தது .

1917 பிறந்த நாள் , சுறவம்(சனவரி) 17, 1917 இல் பிறந்த தவப்புதல்வர் ஈழம், கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்து ஈழத்திற்கும் பெருமை படைத்தவர். மலையாளத்தில் வாழ்ந்தாலும் தமிழின் வழியான மலையமும் சேர்ந்தே சிறப்பாகியது.
1927 தொடங்கிய பயணத்தில் தன்னுடைய 20 வயதில் (1937) திரையுலகில் பிரவேசித்து, நாடகங்களில் நடித்து,
1947 முதல் கதாநாயகனாக பரிமளிக்கும் திறமை பெற்றவர். நடிப்புத் திறமையில் திறமையையும், பாடல்கள் வழியே பாமரனும் பாடும் எளிமையான நடிப்பின் ஊடாக அனைவர் மனத்திலும் பிரவேசித்தவர்.
1967 திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உயர்ந்தார்.
1977 தி.மு.க. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் பிரவேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று ‘முதல் அமைச்சர் ‘ என்ற முதல்வர் பதவி வகித்தார்.
1987 பத்து ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ‘ பொன்மனச்செம்மல்’ தனது எழுபதாவது வயதில் இந்த அரசியல் உலகம், திரையுலகம், தமிழ்நாடு என்ற அனைத்திலும் பெருமை பெற்று மனத்தில் நிறைந்த மக்கள்திலகம்’ என்ற மாபெரும் புகழுடன் உடல்நலக் குறைவினால் மறைந்தார். ஏழ்பிறப்பு என்ற நிலையில் ‘ தேவர்’ என்ற நிலைக்குப் பிறகு மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இந்த நிலையில் மக்கள் என்ற இரண்டாவது நிலையின் வழி பிறக்கும் அனைவருக்கும் கிட்டாத பிறப்பாகப் பிறந்து, பிறந்த பயனையும், வாழ்கின்ற பயனையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பெரும்பேறு அனைவருக்கும் கிட்டுவதில்லை.. அப்படி கிடைத்த பாக்கியம் பெற்ற மனிதர்கள் ‘பெருமைமிகு சிலரின்’வரிசையில் ‘கலைச்சுடர் ‘என்று தமிழ் நாட்டிலும், நிருத்தியச் சக்கரவர்த்தி என்று ஈழம் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வாழும் பொழுதிலே ‘நிறைவான பெருமை’ அடைந்தவர்.

திரைப்படச் சேவை :
இதயக்கனி – அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் – கலைஞர். மு. கருணாநிதி
நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்ரமணியம்)
மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் – விழுப்புரம், முத்தமிழ்க் கலைமன்றம்
கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலைமன்றம்
கலைமன்னர் – நீதிபதி ராஜமன்னர்
கலைமன்னன் – சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
இவ்வாறு திரையுலகின் பிரவேசத்தில் நடிப்பின் திறமையின் மக்கள் கொடுத்த புகழ் பட்டங்கள் . திரையுலகின் பணிகளில் அவரின் நடிப்பு மட்டும் அன்றி, திரைபடத் துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்து பெருந்தன்மையுடன் கருணையும், எளிமையும் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.

பொதுமக்களின் சேவையில் அரசியலில் முழு மூச்சாகக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் ஆர்வமும் , அரவணைத்துச் செல்லும் தன்மையும் செம்மலின் குணங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் சாப்பிடும் முன்பு உடன் வந்த வாகன ஓட்டுனர் முதற்கொண்டு ‘உணவு’ விசயத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒருமுறை அவர் ஒரு நடிப்புத் தளத்திற்காக வெளியூர் சென்றபோது ‘பயணவிடுதியின் பணிச்சிறுவன்’ கேட்ட கேள்விக்கு அவசரமாகப் பதில் அளிக்கமுடியாமல் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நடிப்புப்பணி முடிந்து திரும்பிவரும் நேரத்தில் அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்து அவனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். எந்தவொரு மனிதரையும் ஒரே மாதிரியாகக் கவனித்து மதிப்பு கொடுக்கும் தன்மையில் அவர் ஒரு ‘தனிப்பிறவி . அதனால் தான் பொதுமக்களின் சேவையில் அவர் பெற்ற பட்டங்கள் வரிசையில் மக்கள் திலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

பொதுமக்களின் சேவையின் வழி கிடைத்த பட்டங்கள் :
கொடுத்துச் சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் – கர்நாடகா, பெங்களூரு
நிருத்தியச் சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் – தமிழ்வாணன்
வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித் தலைவர் – கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் – இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் – ம.பொ. சிவஞானம்.
அண்ணா அவர்களின் பவள விழாவின் சிறப்பு என்ற வகையில் ‘அண்ணாவின் வளைவினை ‘ நிறுவினார். அரசியல் வாழ்வில் இவர் செய்த நற்பணிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு, ஏழை, எளியவர் மற்றும் பணிபுரியும் பெண்கள் என்று அனைத்து வழிகளிலும் பெண்களைச் சிறப்பிக்க கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகஎம்.ஜி. ஆர். அவர்களின் புகழ் பன்மடங்காக இன்றும் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.

திட்டங்களின் செயல்பாடுகள் :
* சத்துணவுத் திட்டம்.
* விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
* தாலிக்கு தங்கம் வழங்குதல்
* மகளிருக்குச் சேவை நிலையங்கள்
* பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
* தாய்சேய் நல இல்லங்கள்
* இலவசச் சீருடை
* இலவசக் காலணி
* இலவசப் பற்பொடி
* இலவசப்பாடநூல்
* வறட்சிக் காலத்தில் லாரி மூலம் குடிநீர்

மேலும் அவரின் முக்கியப் பணிகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதில் முன்னின்று முயற்சி செய்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 1, 1981-இல் 972.7 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு , 1921ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் ஏற்பட்ட தீர்மானம் அவர் பிறந்த தஞ்சையில் அறுபது (60) வருடங்களுக்குப் பிறகு முதலமைச்சராக இருத்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய அம்சம்”தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம்”… முதற்கொண்டு அனைத்துவகை பாடப் பிரிவுகளும், ஓவியம், கட்டிடக்கலை, சிற்பக்கலையும் ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள் பாடப்பிரிவும் பயிற்றுவிக்கப் படுவதுடன் கைவினைப்பொருட்கள், கடலியல், தொல்லியல் …மட்டுமல்லாமல் மற்ற ‘மொழி ‘ கற்றலும் உள்ளது.

பழ. நெடுமாறன் அவர்களின் கருத்துப்படி ஈழமக்களின் போராட்டத்தின் போது ஏழுகோடிக்கும் தொகை உதவி செய்தும் வந்தார் என்பது அறியமுடிகிறது. அவர் ஈழத்தில் பிறந்து தமிழ் மக்களிடையே வாழ்ந்தாலும் ஈழவிடுதலைக் காரணமாகவும், தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தனிஈழம் கிடைக்கும் முடிவில் அவர்களுக்குஉதவி செய்தார். விடுதலைப் போராட்ட விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களின் பண்பும், கடமையும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்தார் என்று ‘ ஆன்டனி பாலசி்ங்கம் ‘ கூறுகிறார் தன்னுடைய கட்டுரையில்.

அரசியலில் செம்மலின் எளிமை :
* முன்னணித் தமிழ் தேசியவாதி
* திராவிடக் கழகத்தின் ‘முன்னேற்றக் கழக உறுப்பினர் ‘
* திராவிட இயக்கத்தில் பொருளாளர்
* அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறுதல்
* 1971-ல் ‘பாரத் ‘ திரைப்பட விருது
* 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம்.
* அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் உருவாக்கியப் பெருமை (17/10/1972)
* 1977- முதல் அமைச்சர் பதவி ( திண்டுக்கல் )

அரசியல் அல்லாத எளிமை வழியில்:
* திரைப்படப் புகழ்
* வசீகரத் தோற்றம்
* சமூகத் தொண்டர்கள்
* ஏழைகள் தோழன்
* கொடையாளி
* வீரன் – நடிப்பின் வீரமும் மிளிரும் மன்னர்

அரசு விருதுகள் :
* பாரத் விருது (இந்திய அரசு)
* அண்ணா விருது (தமிழக அரசு)
* பாரத ரத்னா விருது (இந்திய அரசு)
* பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு, விருதை ஏற்க மறுப்பு )
* சிறப்பு முனைவர் பட்டம் (அமெரிக்கா, அரிசேனா பல்கலைக்கழகம் )

நினைவுகள் :
தாமரை மலர் போன்ற வடிவம் கொண்ட நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்றெழுத்து நாயகனின் புகழ், மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர்… நினைவுகள் ‘ இதயக்கனி ‘ யாகி ‘ நாடோடி மன்னன் ‘ தயாரித்து படம் வெற்றி பெற்றால் ” நான் மன்னன் ” என்று கூறிய பெருமை உடையவர். மந்திரிகுமாரி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப் படங்கள் வழியில் வரலாற்று மனிதராகவும் வாழ்ந்து மறைந்த ‘ வரலாற்று நாயகன் ‘ என்று பகர்வதே சாலப் பொருந்தும். அவரின் உருவில் கோவில் கட்டி வழிபாடு செய்யும் பக்தி கொண்ட தமிழகமக்கள் போற்றும் ‘நாயகன் ‘ என்று பெயர் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

1977 அரசியல் பிரவேசத்திற்குப் பிறகும் அவர் திரைப்படம் தயாரித்து , நடிப்பிலும் சிலகாலம் இருந்தார்.
1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தார்.
1984-ல் அவரின் உடல்நலம் குறைவு காரணமாக அவரின் இறுதி நாட்கள் படுக்கையில் சிலகாலம் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருந்த அவர் தங்கமனிதர், கலியுகக் கடவுள், என்றெல்லாம் மக்களால் புகழப் பட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளிலும், அன்றும், இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
‘இதயத்தெய்வம் ‘ , ஒளிவிளக்கு நம்மிடையே மனிதருள் மாணிக்கமாக வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. ஏழு என்ற எண்ணிற்கு பெருமை சேர்த்த மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற MGR .

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” —இப்படிப்பட்ட பெருமையில் வாழ்ந்த

அரசியல், திரைஉலகம், பொதுநலச் சேவை, மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்ற வகையில் தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நிறைந்த மாபெரும் வள்ளல், தங்கம், பொன்மனச்செம்மல் என்ற பெயருடன் தன்னுடைய வசீகரத் தோற்றத்துடனே திசம்பர் திங்கள் 24ஆம் நாள் 1987 ஆம் வருடம் தனது இறுதி யாத்திரையாகிய ‘ தூக்கம் போலும் சாக்காடு ‘ என்ற நிலையை அடைந்தார். மூன்றெழுத்து நாயகன் , நற்சொல், நற்செயல் என்று அனைத்து வகையில் வாழ்வு வாழ்ந்தவர் ‘பிறப்பு ‘என்ற நான்கெழுத்தும் ‘ இறப்பு’ என்ற நான்கு எழுத்தும் பிரிவு என்ற மூன்று எழுத்தின் வழியே மறைவு என்றபடி உண்மையாகியது.

 
சுமதி ரவிச்சந்திரன், ராமாபுரம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *