-பிச்சினிக்காடு இளங்கோ

நீ துணையிருந்தால்
எனக்கு
யானைபலம்

அன்றாடம்
எல்லாம் எளிதாகிவிடுகிறது                     one-rupee
இல்லையேல் அரிதாகிவிடுகிறது

துக்கம்கூடத்
துக்கமாயில்லை

கைகுலுக்கக் காத்திருக்கிறார்கள்
இல்லையேல்
கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்

நீ இல்லாதபோதும்
நிம்மதி இருக்கிறது
கூட இருந்தால்
அது கூடிவிடுகிறது

நீ இல்லாதபோதும்
எனக்கு
முகவரியிருக்கிறது

என் முகவரி
என்னால் வந்தது
அதன் ஒவ்வொரு
அங்குல உயர்விற்கும்
நானே காரணம்

எனினும் என்னுடன்
நீயும் இருந்துவிட்டால்
பிறரைத்தேட வைக்கிறது

இதுவரை
என்னிடமிருந்தாலும்
என்னிடம் வந்தாலும்
உனக்குப் பெருமை
இனி
உன்னால் எனக்கும்பெருமை

வாழ்க்கை
பொருளுடையதாய் விளங்க
நீதான் அடிப்படை

நீயா நானா
என்பதைவிட
நீயும் நானும்
சேர்ந்திருப்பதே
தேவையானது
நியாயமானது
நாணயமானது

நாணயமான
வாழ்க்கைதானே
நாகரீகமானது?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.