கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி
கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்
கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
’வி’ எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்
பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!
எறும்புப் புற்றின் மீது அமருமாம்
எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.
தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போது
அதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி
தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக
இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில்
இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று
ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல்
வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ என்று எழுதியது.
(தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி)
தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போது
அதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி
தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக
இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில்
இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று
ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல்
வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ என்று எழுதியது.
(தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி)