அரும்புகள்
– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்துக்
குலம்தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகித்
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ்சிறு அரும்புகளாய்க்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்துவந்து
ஆற்றலால் சிறந்துநின்று
மெச்சி ஊரார் தானும் புகழப்
பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலை அவர் முன்னே!