– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்  

இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்துக்
குலம்தான் தழைக்கவே                            mom and child
இல்லத்தின் தெய்வமாகித்
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ்சிறு அரும்புகளாய்க்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்துவந்து
ஆற்றலால் சிறந்துநின்று
மெச்சி ஊரார் தானும் புகழப்
பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலை அவர் முன்னே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.