”கார்த்திகை தீபம்”
“பைனா குலரில் பகவான்பார் கின்றார்தன்
நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்; -மெய்நானைக்
கண்டவர் காண்கிறார், காண்பவனைக் காணென்று,
விண்டவர் காலில் விழு”….கிரேசி மோகன்….
ரமணர் அருணாசலேஸ்வரரை தகப்பனாகக் கண்டவர்….அதனால்” நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்’’ என்று எழுதினேன்….இப்போது தோன்றுகிறது ‘’நைனாவின் கார்த்திகை நெய்தீபம்’’ என்று போட்டிருக்கலாம்….பார்க்கப் படுவதால் உலகை ‘’பார்’’ என்கிறோம்….பார்ப்பவன் யாரென்று பார்த்தால் ‘’பார் முதல் பஞ்ச பூதங்கள்’’ மாயை என்பது உணர்வோம்….இது ‘’ரமண வழி’’….அப்படிப் பார்க்கச் சொன்னவர் (விண்டவர்) காலில் விழு….இதையேதான் ஆதிசங்கரர் ‘’சத்யம் ப்ரம்மம் ஜகத் மித்யை’’ என்றார்….கிரேசி மோகன்.