-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
மழலை ஜானி விளையாட
மழையைப் போகச் சொல்லி 
மற்றொரு நாள் வருமாறு
பணித்தோம் பள்ளிக் காலத்தில்…
பள்ளிக்கால மழையின் பணிவோ
இக் கலிகால மழையிடம் இல்லை
பலகோடி ஞானிகள் ஒருசேரப்
பணிந்து நின்று கெஞ்சினாலும்
அடங்க மாட்டேன் நானென்று
அடம் பிடிக்கின்றதே அடைமழையாய்…!
பதிவாசிரியரைப் பற்றி