மார்கழி மணாளன் – 24 -திருமோகூர் காளமேகப் பெருமாள்  

0

க. பாலசுப்பிரமணியன்

f813a8d7-64fa-458b-807e-19d7b5dca31b

வைகுந்தத்திற்கு வழிகாட்டிய தலமன்றோ !

விடியாத துயர் தீர்க்கும் சங்கு சக்கரமன்றோ !

விழி வைத்தவர் கலி தீர்க்கும்  வழிகாட்டி

வைகைக்கூடலிலே குடிகொண்ட காளமேகன் !

 

அசுர மனமும் தேவ குணமும் அலைபாய்ந்தது

அமுதத்தை அருந்திடவே கடல் கடைந்தது

அழிவின்றி வாழ்ந்திடவே ஆணவமே துடித்தது

அண்டங்கள் காத்திடவே அரங்கமே வந்தது !

 

மோகிக்கும் அவதாரம் பத்தெடுத்தாலும் மோகனனே !

மோகினியாய் மோகூரில் அழகை வளர்த்தவனே

மோகத்தில் வீழ்ந்த அசுரர்களை மோதவிட்டு

மோனத்தில் அமுதத்தை தேவருக்குத் தந்தவனே !

 

காலத்தால் அழியாத வரமொன்று பெற்றான்

கைவைத்த இடமெல்லாம் கனலாக்கப் பெற்றான்

போகத்தில் மோகத்தில் சிறையான பதுமன்

யோகத்தில் மோகினியின் தாகத்தில் எரிந்தான் !

 

தன்தலையில் தானே கைவைத்து அழிந்தான்

தரணியில் ஆணவத்திற்கு பாடம் அளித்தான்

தான்மட்டும் வாழ நினைத்தவர் வாழ்ந்ததில்லை

தருமம் காத்து நின்றவரேன்றும் தாழ்ந்ததில்லை !

 

மோகத்தில் மூப்படையும் முடியாத தாகம்

மோகூரான் போற்றிடவே மூவுலகும் தாண்டும் !

மோனத்தில் மனம் நிற்க  மூலவனே காளமேகா

மோகூரில் மோகினியாய் அருள்வாயே நீர்வண்ணா!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *