கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஸ்ரீ பகவான் உவாச:….
———————————————
”நெற்றியில் தொட்டு நவநீதன் அர்ஜுனர்க்கு
வெற்றியாம் கீதை வகுப்பெடுப்பு : -விற்போர்
கசடறச் செய்வாய், பசுவாய் பதத்தில்
அசடற நிற்பாய் அணைந்து’’….
“கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….