சிங்காரம் உண்டு சிருங்காரம் உண்டு
சிறுகாரம் ஏதுக்கடி!
ஓங்காரம் உண்டு ரீங்காரம் உண்டு
ஆங்காரம் ஏதுக்கடி!
அழகாரம் உண்டு அலங்காரம் உண்டு
அதிகாரம் ஏதுக்கடி!
உபகாரம் உண்டு பரிகாரம் உண்டு
கடிகாரம் ஏதுக்கடி!
ஓகாரம் என்ன! ஏகாரம் என்ன!
ஆகாரம் நீதானடி!
ஊகாரம் ஆகி, ஒளகாரம் ஆன
அஃகாரம் நீதானடி!
மீகாரம் வெல்லும் மோகாரம் கொண்ட
நாகாரம் நீதானடி!
தேகாரம் வென்று ராகாரம் கொண்ட
யோகாரம் நீதானடி!
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
காரமில்லாத சுவையான கவிதை.