மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை (கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்)

0

மலர்சபா

gopikas

கோவேந்தன் தேவியே!

நான் கணவனை இழந்தவள்

ஒன்றும் அறியாத் தன்மையுடையவள்.

பிறர் ஒருவருக்கு முற்பகல்

ஒரு கேடு நினைத்தால்

அக்கேட்டினை

அன்று பிற்பகலே காணும்

தன்மை உடையவை வினைகள்.

 

கற்புடை மகளிர் எழுவர் வரலாறு

வன்னி மரத்தையும் மடப்பள்ளியையும்

நற்பகல் ஒன்றில்

தனக்குச் சாட்சிப் பொருட்களாய்

அனைவரும் காணும்படி

முன்னிலையில் கொண்டுவந்து

நிறுத்திக் காட்டினாள்

அடர்ந்த கூந்தலையுடைய

பத்தினிப் பெண்ணொருத்தி.

 

பொன்னியாற்றின் மணற்பரப்பில்

மகளிர் சிலர் விளையாடும்போது,

ஒருத்தி ஒரு மணற்பொம்மையைச் செய்து

‘இதுதான் உன்னுடைய கணவன்’ என

விளையாட்டாய்க் கூறியதும்,

அதை உண்மை என்று நம்பி

அங்கேயே தங்கி,

அலைகள் அப்பொம்மையை அழித்துவிடாமல்

காத்து நின்றாள்

வரிபொருந்திய அகன்ற அல்குலை உடைய

பத்தினிப் பெண்ணொருத்தி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.